ஷபே பராஅத் – வரலாறு

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!

முஸ்லிமாக கலிமா ஓதிய எந்த ஒரு மனிதரையும் இழிவுபடுத்துவது எனக்குள்ள பணியல்ல மாறாக உண்மையை நன்மையை விளக்கிக் கூறவே அல்லாஹ் எனக்கும் அறிவை கொடுத்துள்ளான்.

சுன்னத்வல் ஜமாஅத், தப்லிக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்று பல்வேறு வகைகளாக உள்ளீர்கள் உங்களை தரக்குறைவாக விமர்சிப்பதோ, உங்கள் செயல்களை இழிவுபடுத்துவதோ எமது பணியல்ல அது முறையுமல்ல

மாறாக நீங்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்களும் காட்டித்தராத அல்லாஹ் வெறுக்கின்ற செயல்களில் முன்னோர்கள் மற்றும் மூதாதையர்கள் பின்பற்றி  காட்டித்தந்த  வழிமுறையைத்தான் நீங்கள் மார்க்கம் என்று கருதுகிறீர்கள். அதை தவறு என்ற ஆதாரங்களோடு விளக்கிக் கூறவே இந்த கட்டுரையாகும்.

ஷபே பராஅத் வரலாறு

ஷபே என்றால் இரவு

பராஅத் என்றால் பிரகாசம்

பராஅத் என்ற பாரசீக சொல்லுக்கு பிரகாசம் என்று பொருள்.

மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளிலிருந்து இந்த ஷபே பராஅத் எனும் பித்அத் (மார்க்கத்தில் நபிகளார் கற்றுத்தராத புதிய வழிமுறை) உருவானது. ஷியா பிரிவைச் சார்ந்த முஸ்லிம்களால் ஈரானிலிருந்து தோன்றிய புதுமை வழிகேடாகும்.

பாரசீக வளைகுடாவில் வசித்து வந்த Khorasan கோராசான் என்ற பகுதியில் வசித்து வந்த மக்கள் வணிகம் சம்பந்தமாக அடிக்கடி அன்று பாகிஸ்தான், பங்களாதேஸ், பா்மா ஆகியன ஒன்றிணைந்த இந்தியாவிற்கும் சீன தேசத்திற்கு பயணம் மேற்கொள்வது வழக்கம்.

அக்கால கட்டத்தில் சீன தேசத்து மக்களிடம் BON FESTIVAL காணப்பட்டது இந்த பண்டிகைகளின் மூலமாக சீனர்கள் இறந்த தங்கள் முன்னோர்களை நினைத்து  தீபம் ஏற்றி மகிழ்வா். அதே போன்றதொரு பண்டிகை நமது இந்தியாவில் (பிராமணர்கள்) பார்ப்பணர்களால் ஆண்டுத் திதி எனப்படும் பித்ரு பர்க்சா பண்டிகையினை இறந்தோரை நினைவு கூறும் வகையில் தீபம் ஏற்றி கொண்டாடி வந்தனர்.

தங்கள் இறந்த முன்னோர்களை சீனர்களும் இந்தியர்களும் நினைவு கூர்ந்து கொண்டாடுவதை விரும்பிய கேராசான் ஷியா பிரிவைச் சார்ந்த அறிவிழிகள் BON FESTIVAL மற்றும் பித்ரு பர்க்சா பண்டிகைகளைப் போன்றதொரு பண்டிகையை தங்கள் பகுதியில் அறிமுகம் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து பிரார்த்திக்க முடிவு செய்தனர்.

ஈரானிய கோராசான் மக்களால் இஸ்லாத்தில் இல்லாத புதிய வழிகேட்டை இறந்தோரை நினைவு கூறும் பண்டிகையாக ஷபே பராஅத் என்று பெயரிட்டு அந்த நாளில் தங்கள் இறந்த முன்னோர்கள் பாவ மீட்சி பெற்று சுவர்க்கம் செல்வதாகவும் தங்கள் இல்லங்களுக்கு ஆவிகளாக வந்து ஆசிர்வதிப்பதாகவும் அவர்களுக்காக அவர்கள் வாழும் போது உண்டு மகிழ்ந்த உணவுகளை படையலாக வைத்து ஃபாத்திஹா ஓத ஆரம்பித்துவிட்டனர்.

ஆதாரம் இதோ கோராசான் பகுதியில் தோன்றியது ஷபே பராஅத்

கிபி 973 – முதல் 1050 காலத்தில் வாழ்ந்த வரலாற்று ஆய்வாளர் மற்றும் கணித, இயற்பியல், இயற்கையியல் விஞ்ஞானியும் மார்க்க அறிஞருமான அபு ரைஹான் முஹம்மது பின் அஹமத் அல் புருனி (Abu Rayhan Muhammad ibn Ahmad al-Biruni) தன் நூலில் மேற்கண்ட பராஅத் இரவு பற்றி குறிப்பு எழுதியுள்ளதாக அறிய முடிகிறது.

Peganum harmala மலா்

மேலும் அக்காலத்து அறிஞர் அபு ரைஹான் குறிப்புகளின் படி பழங்காலத்து ஈரானிய ஷியா பிரிவு முஸ்லிம்கள் தங்கள் இறந்த மூதாதையர்களை நினைவு கொள்ளும் பொருட்டு அவர்களின் சமாதிகளுக்கு (கப்ருஸ்தான்) சென்று அங்கு Peganum harmala என்ற அவர்களின் புனிதான மலரை தூவி மண்ணரையின் நான்கு புறங்களிலும் தீபம் ஏற்றி அதில் உருவாகும் நெருப்பு ஜுவாலையின் மீது உப்பு தூவி விடுவா்களாம் அப்படி நெருப்பின் மீது உப்பினை தூவும் போது அந்த நெருப்பு சுடா் விட்டு எரியுமாம் அதுசமயம் கசப்பான ஹா்மலா மலரின் சுவையும் உப்பின் உவா்ப்பும் சேர்ந்து தங்கள் எதிரிகளின் திருஷ்டி கலைந்து அவர்களின் கண்களை குருடாக்கட்டுமாக என்ற கவிதை வரிகளை பாடுவார்களாம் (“The Peganum harmala is bitter and salt is salty so the jealous eye of the enemy be blind.”)

காலப்போக்கில் இந்த முரட்டு கவிதை வரிகள் மாற்றப்பட்டு இன்று இந்தியா தமிழகம் முழுவதும் யா! நபி ஸலாம் அலைக்க யா! ரசூல் ஸலாம் அலைக்க! பாடல்கள் பிரபலமாகி பாரசீக மொழியிலிருந்து பிறந்த உருது மொழியில் நாத் பாடல்கள் கஸிதே எனும் கவிதை வரிகளாயின.

ஷபே பராஅத்தும் கிருஸ்தவர்களும்!

ஷியா முஸ்லிம்களைப் போன்றே கிருஸ்தவ மதத்திலும் சமாதிகளை வழிபடும் புதுமையான பண்டிகை தோன்றியது அதற்கு பெயா்தான் கல்லறைத் திருவிழா திருப்பலி. கிருஸ்தவர்கள் தங்கள் இறந்த முன்னோர்களை நினைவுகூா்ந்து அவர்களின் கல்லரைகளுக்கு சென்று மலா்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனைகளை செய்வார்கள்.

ஷபே பராஅத்திற்கு பல நாடுகள் முட்டு கொடுக்கின்றனா்

துருக்கி ஓட்டோமன் எனப்படும் உஸ்மானிய பேரரசின் மன்னர்களில் ஒருவரான சுல்தான் சலீம் II என்பவரால் பராஅத் இரவை பாராத் கண்டிலி என்று பெயா்வைத்து எண்ணெயினால் ஆன தீபங்களை மண்ணரைகளில அலங்கரித்து கொண்டாட வழி வகுத்தார்.

இந்தியாவில் தாருல் உலூம் தேவ்பந்திகளால் இந்த பண்டிகை நாளில் பள்ளிவாசல்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப் படுகிறது.

பாகிஸ்தானில் வீடுகள், தெருக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு Mahafil E Nath கவிதைள் பாடி மண்ணரை இரவு வணக்கம் வழிபடப்படுகிறது.

ஈரான் மற்றும் ஈராக் (குர்திஸ் மக்கள்) மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இரவு முழுவதும் திக்ருகள் ஓதி பராஅத் இரவு கொண்டாடப்படுகிறது.

ஷபே பராஅத் இரவுக்காக முட்டுக் கொடுக்கும் ஈரானிய ஷியாக்கள்

ஈரானிய ஷியா பிரிவுகளில் மிகப் பெரிய அமைப்பு இமாமியா ஆகும் இந்த அமைப்பு ஏகத்துவத்தை மட்டும் பின்பற்றும் ஷியா அமைப்பாகும் (ஈரானிய ஏகத்துவ ஷியா எனும் இமாமியா அமைப்பை பற்றி இன்னொரு கட்டுரையில் இன்ஷா அல்லாஹ் எழுதுகிறேன்). இந்த அமைப்பின் தலைவர்கள் 12 இமாம்களாவர் அவா்களின் பெயர்களாவன

  1. அலி இப்னு அபிதாலிப் (ரலி)
  2. ஹசன் இப்னு அலி (ரலி)
  3. ஹுசைன் இப்னு அலி (ரலி)
  4. அலி இப்னு ஹுசைன் (ரலி)
  5. முஹம்மது அல் பாகிர் (ரஹ்)
  6. ஜாஃபர் அல் சாதிக் (ரஹ்)
  7. மூஸா அல் காதிம் (ரஹ்)
  8. அலி அல் ரிதா (ரஹ்)
  9. முஹம்மது அல் தாகி (ரஹ்)
  10. அலி அல் ஹாதி (ரஹ்)
  11. ஹசன் அல் அஸ்கரி (ரஹ்)
  12. முஹம்மது அல் மஹதி (அலை)

இவர்களில் இறுதியான இமாம்தான் முஹம்மது அல் மஹதி என்பவராவார் இவர் வேறு யாருமில்லை கியாம நாளுக்கு முன் வருவார் என்று ஹதீஸ்களில் கூறப்பட்ட இமாம் மஹதி (அலை) ஆவார்கள்.

இந்த இமாமியா எனும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் இமாம் மஹதி (அலை) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த ஷபே பராஅத் விழாவினை கொண்டாடுகிறார்கள்.

அவர்களின் கருத்துப்படி தங்களது 12வதும் இறுதியுமான இமாம் மஹதி (அலை) அவர்கள் ஏற்கனவே பிறந்துவிட்டதாகவும் அவர் மக்களின் பார்வையிலிருந்து ஈஸா (அலை) போன்று மறைக்கப்பட்டுவிட்டார் எனவும் அவர் உயிருடன் உள்ளார் என்றும் இறுதிகாலத்தில் தோன்றுவார் எனவும் கருதுகிறார்கள்.

எனவே இவரது பிறந்த நாளை மீலாத் விழாவாக இந்த ஈரானிய ஷியா அமைப்பான இமாமியா அமைப்பு ஷபே பராஅத் இரவுக்கு முட்டு கொடுத்து கொண்டாடி வருகின்றனா்.

பராஅத் இரவு அல்லாஹ்வை இழிவுபடுத்தும் செயல்

உலகில் பிறந்த அத்தனை ஆண்களும், பெண்களும் கடந்த காலங்களில் செய்த நல்ல அமல்களை (நற்செயல்களை)க் கொண்டு வருங்கால ஆண்டுக்குரிய விதியை ஏக இறைவன் அல்லாஹ் ஷபே பராஅத் இரவில் மாற்றி எழுதுவதாக எழுதி வைத்துக் கொண்டுள்ளார்கள். அதாவது அல்லாஹ் சொல்லாத ஒன்றை இவர்கள் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி அல்லாஹ்வுக்கே தாம் என்ன வேலையை செய்ய வேண்டும் என்று கற்றுத் தருகிறார்கள். (நவுதுபில்லாஹ்)

விதியை பற்றி அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுவது என்ன? சிந்திப்போமா?

அல்லாஹ் விதியை பற்றி மக்களுக்கு அறிவிக்கும் போது மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே விதியை படைத்துவிட்டதாகவும் அந்த விதியின் அடிப்படையிலேயே மனிதன் உலகில் பிறப்பதும் வாழ்வதும் இறப்பதும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாவும் அவைகள் லவ்ஹுல் மஹ்ஃபுள் எனும் ஏட்டில் பதிவிட்டுள்ளதாகவும் வர்ணிக்கிறான்.

مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْـرَاَهَا ؕ اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌۚۖ‏ (57:22 : Al Quran)

ஒவ்வொரு மனிதனும் அவன் தாம் செய்த பாவங்களை எண்ணி வருந்தி மனம் திருந்து ஏக இறைவன் மீதும் மறுமை மீதும் அச்சம் கொண்டு ஈமான் எனும் இறை நம்பிக்கை கொள்ளும் போது அல்லாஹ் அவனுக்கு நேர்வழியில் செலுத்துவதாக கூறுகிறான்.

பராஅத் இரவில் பாவங்கள் மன்னிக்கப்படுமா?

பராஅத் இரவில் அல்லாஹ் பாவங்களை மன்னிப்பதாக எந்த அடிப்படை ஆதாரங்களும் அறிவிக்காத நிலையில் மனிதனாக பிறந்த ஒருவன் பராஅத் இரவில் பாவங்கள் மன்னிக்கப்படுவதாக கூறுவது அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டும் மிகப் பெரிய பாவமான காரியமாகும். பராஅத் இரவே கட்டுக்கதையும் பாவமான காரியமாக இருக்கும் போது மன்னிப்பு என்பது கிடைக்குமா? சிந்திக்க வேண்டாமா? உதாரணமாக

ஒவ்வொரு அரசாங்கமும் அநியாய கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்று சட்டம் இயற்றிய பின்னர் இந்த சட்டத்தை அறிந்த ஒருவன் அநியாயமாக ஒருவனை கொலை செய்துவிட்டு இப்போது அரசாங்கம் என்னை மன்னித்துவிடும் என்று கூறுவது எவ்வளவு மடத்தனமோ அவ்வளவு மடத்தனமாகிறது இந்த பராஅத் இரவின் பாவ மன்னிப்பு என்கிற வாதமாகும்.

உலகில் விதி எப்பொழுது எழுதப்படுகிறது – நபிமொழி

صحيح البخاري رقم فتح الباري (4/ 111)

3208 – حَدَّثَنَا الحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ المَصْدُوقُ، قَالَ: ” إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ مَلَكًا فَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ، وَيُقَالُ لَهُ: اكْتُبْ عَمَلَهُ، وَرِزْقَهُ، وَأَجَلَهُ، وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الجَنَّةِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ كِتَابُهُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ “

صحيح البخاري رقم فتح الباري (4/ 158)

3409 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” احْتَجَّ آدَمُ وَمُوسَى، فَقَالَ لَهُ مُوسَى: أَنْتَ آدَمُ الَّذِي أَخْرَجَتْكَ خَطِيئَتُكَ مِنَ الجَنَّةِ، فَقَالَ لَهُ آدَمُ: أَنْتَ مُوسَى الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالاَتِهِ وَبِكَلاَمِهِ، ثُمَّ تَلُومُنِي عَلَى أَمْرٍ قُدِّرَ عَلَيَّ قَبْلَ أَنْ أُخْلَقَ ” فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَحَجَّ آدَمُ مُوسَى مَرَّتَيْنِ»

எல்லாம் எழுதப்படட விதிப்படியே நடக்கும் என்பதற்கு சான்று

அபூலஹப் வாழ்ந்த காலத்திலேயே அல்லாஹ் அவன் நேர்வழி பெறமாட்டான் என்று குர்ஆனில் கூறிவிட்டான் இதை அறிந்த அபூலஹப் அல்லாஹ்வையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் பொய் என்று நிறூபிக்க முடியும் என்றாலும் அவனால் நடிக்கவும் முடியாத இழிநிலை அவனுக்கு ஏற்பட்டு காஃபிராகவே மரணித்தான்.

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.  விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.  விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). (குர்ஆன் 111: 1முதல் 5வரை)

மேற்கண்ட குர்ஆன் வசனம் ஒருவனின் விதியை அது லவ்ஹுல் மஹ்ஃபுள் எனும் ஏட்டில் எழுதப்பட்டதன் படியே நடக்கும் என்பதற்கு 100 சதவீத ஆதாரமாக திகழ்கிறது மீண்டும் அந்த வசனத்தை கீழே குறிப்பிட்டுள்ளோம் சிந்தித்து படிக்கவும்.

 مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْـرَاَهَا ؕ اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌۚۖ‏ (57:22 : Al Qur’an)

அன்பிற்கினிய என் சகோதர சகோதரிகளே! உங்களை இழிவுபடுத்துவது எமது பணியல்ல அது முறையுமல்ல மாறாக நீங்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்களும் காட்டித்தராத அல்லாஹ் வெறுக்கின்ற செயல்களில் முன்னோர்கள் மற்றும் மூதாதையர்கள் பின்பற்றிய காட்டித்தந்த வழிமுறையைத்தான் நீங்கள் மார்க்கம் என்று கருதுகிறீர்கள். இதைத்தான் நபிகளாரின் முன்னோர்கள் செய்து வந்தனா்.

நபிகளார் (ஸல்) எவ்வாறு தன் பாட்டனார் அப்துல் முத்தலிஃப் மற்றும் அவரது குறைஷி கோத்திரத்தார் கடைபிடித்த வழிமுறைகளை பின்பற்றாமல் வஹி மூலம் அல்லாஹ் கற்றுத்தந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை பின்பற்றினார்களோ அது போன்றே நீங்களும் உண்மையான தீனாகிய இஸ்லாத்தின் கயிற்றை பற்றிப் பிடிக்க அழைப்பு விடுக்கிறோம்.

நீங்கள் இக் கட்டுரையை முழுவதுமாக படித்திருப்பின் ஷபே பராஅத் பற்றிய உண்மையை உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  எனவே எங்கள் பணி உங்களை நேர்வழி எது என்பதை காட்டுவதுதான் நீங்கள் திருந்தி அல்லாஹ்வுக்கு அடிபணிந்து இஸ்லாம் காட்டித்தராத மாற்றுமத கலாச்சாரத்தை புறக்கணித்தால் அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னித்து சுவனத்தை பரிசளிக்க போதுமானவன்.

மாறாக உங்கள் மூதாதையர் மற்றும் முன்னோர்கள் காட்டித்தந்த ஷிர்க் மற்றும் பித்அத்தான அநாச்சாரங்களின் மீதுள்ள காதல், மோகத்தை வெறுக்க இயலாது என நம்பினால் வழிகெட்டு போவது நீங்கள்தான் என்பதே எங்களது கருத்தாகும் ஆகையால் உங்களுக்கு விதிக்கப்பட்ட விதியை எம்மால் மாற்ற இயலாது என்பதை மட்டும் எங்களுக்கு கூற உரிமையுள்ளது.

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான்அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி7319, 3456)

அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்ட போதுமானவன். அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக!

அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

நயவஞ்சகர்களால் முகநூலைவிட்டு முற்றிலும் வெளியேறுகிறேன்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதை தன் உயிர் மூச்சாக கருதி நேசித்தார்களோ அந்த இஸ்லாம் எனும் இறை மார்க்கத்தை நானும் மிகவும்  நேசிக்கிறேன் ஆகவே கடந்த 12-13 ஆண்டு காலமாக அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆன் மற்றும் இறைத்தூதர்களின் வழிமுறைகள் ஹதீஸ்களை சிந்தித்து அழகிய தமிழ் மொழியில் எளிய நடையில் விளக்கங்கள் கொடுத்து சிந்திக்கத்தவறும் மக்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த கீழ்க்கண்ட இணைய வலைப்பூக்களை நிர்வகித்தும் அவைகளில் பிரசுரிக்கும் மார்க்க விளக்க கட்டுரைகளை முகநூலில் பதிவேற்றியும் என்னால் இயன்ற மார்க்க பணிகளை செய்துவந்தேன்.

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறைவன் ஆசைகளை ஏற்படுத்தி அவர்களை சோதிப்பான் அவ்வகையில் எனக்குள் இருந்த ஒரு ஆசையைக் கொண்டு இறைவன் என்னையும் சோதித்துவிட்டான் அந்த சோதனையில் வெற்றி பெற வேண்டி முகநூலை விட்டு சிராஜ்அப்துல்லாஹ் என்ற ஐடியிலிருந்து  நான் முழுவதுமாக விலக முடிவு எடுத்துள்ளேன்.

இதற்காக நேரத்தையும் அறிவையும் திறமையையும் கொடுத்தவன் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே அவனே புகழுக்குரியவன் அல்ஹம்துலில்லாஹ்!

எனது வலைப்பூக்கள்

https://islamicparadise.wordpress.com/

https://amazingmuslims.wordpress.com/

https://islamtheparadise.wordpress.com/

மற்றும் நான் உருவாக்கி நிர்வகித்த ஒரு சில பிளாக் தள முகவரியும் கடவுச் சொற்களும் என் நினைவிலிருந்து மறந்துவிட்டன.

இணையதளங்களில் மறைந்த உருது தாயிக்களான சகோதரர் இஷ்ரார் அஹமத், அஹமத் தீதாத் மற்றும் தற்கால அறிஞர்களான ஜாகிர் நாயக் தமிழ் தாயிக்களான சகோதரர் பிஜே, சகோதரர், ஜின்கள் விஷயத்தில் முகநூல் கருத்து மோதல் கொண்ட அன்புச் சகோதரர் அபு ஆஸியா, இலங்கையை சேர்ந்த அப்துல் ஹமீது சரயீ, மொளலவி முஜாஹித் அவர்களின் பயான்களை கேட்டு எனது மார்க்க அறிவை வளர்த்துக் கொண்டேன் இன்றளவும் சினிமா கூத்தாட்ட விஷயங்களில் ஈடுபடாமல் இந்த மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளால் என்னை நானே மார்க்க அறிவில் பக்குவப்படுத்தி வருகிறேன் மரணம் வரை இன்ஷா அல்லாஹ் இந்த நிலை தொடரும்.

எனது கல்வியறிவும் நான் பட்ட அவமானங்களும்

வறுமையின் காரணமாக 14 வயதில் எனது குடும்பமே தற்கொலை முடிவுக்கு வந்த நிலையில் அல்லாஹ் இருக்கிறான் கவலைப்படாதீர்கள் என்று தந்தைக்கு மன தைரியமூட்டி வாழ்ந்து காட்டுவோம் என்று அறிவுரை கூறிய நான் அந்த குடும்ப ஏழ்மை நிலையிலும் யாரிடமும் யாசகம் கோராமல் ஜமாஅத்கள் வழங்கும் இலவச நோட்டு புத்தங்களை கூட வாங்குவதை தவிர்த்து வைராக்கியமாக பழைய புத்தகங்களை வாங்கி கல்வி கற்று வந்தேன்.  சக மாணவர்கள் மத்தியில் கிழிந்த பள்ளிச் சீருடை, பசி மற்றும் வறுமையின் காரணமாக வெட்கப்பட்டு வகுப்பறையின் ஓரத்தில் அமர்ந்து பாடம் பயின்றதால் கல்வியில் கவனம் செலுத்த இயலாமல் போனது அதனால் SSLC தேர்வுகளில் கடைசி நிலையில் அனைத்து பாடங்களிலும் 35-40 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோ்ச்சி பெற்ற கடைநிலை மாணவனாக நின்றேன். ஏழ்மை நிலையில் வளர்க்கப்பட்டவன் அரபு இலக்கணம் எனும் மார்க்க கல்வி அறிவு அறவே இல்லாதவன்.

எனது 25 வயதில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் போது ஆங்கில புலமை இல்லாத களிமண் மண்டு என்றும் கல்வி அறிவு இல்லாத முட்டாள் முஸ்லிம் பாய் பையன் இவனால் நிறுவனத்திற்கு சல்லிக்காசுக்கு பிரயோஜமில்லை என சுமார் 25-30 ஆண் பெண் பணியாளர்கள் முன் நிற்கவைத்து நிர்வாகத்தினரால் அவமானப் படுத்தப்பட்டேன் இவன் முட்டாள் முஸ்லிம் என்று ஏளனமாக சுட்டிக் காட்டப்பட்டதால் அந்நிறுவனத்தில் பணி புரிவது மார்க்கத்தை கேளிக்குண்டாக்கும் செயல் என கருதி அல்லாஹ் காப்பாற்றுவான் என வேலையை ராஜினமா செய்து விலகினேன்.

இவ்வாறு 7 ஆண்டுகள் எங்கு சென்றாலும் கல்வி அறிவு குறைவு காரணமாக வேதனைப்பட்ட எனக்கு இறுதியாக அல்லாஹ்வின் நாட்டப்படி அரசுப் பணி கிடைத்தது அது 2010ல் அன்றைய ததஜவின் நிறுவனர் தலைவர் சகோதரா் பிஜே மற்றும் அவரோடு களத்தில் நின்ற மாநிலம் முழுவதுமான கொள்கைச் சகோதரர்களின் விடா முயற்சியாலும் நிகழ்த்தப்பட்ட முஸ்லிம் இடஒதுக்கீடு போராட்டங்களால் கலைஞர் கருணாநிதி அவர்கள் அளித்த 3.50% உள் ஒதுக்கீடு காரணமாக முஸ்லிம் சீனியாரிட்டி அடிப்படையில் எனக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப்பணி கிடைத்தது. ஏளனம் செய்தோருக்கு அல்லாஹ் கொடுத்த சவுக்கடியாகவே கருதுகிறேன் என்னை ஏளனமாக கருதியோர் வெட்கப்பட்டு இன்று ஒரு அரசு அதிகாரி முன் கை கட்டி நிற்கும் நிலையை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

எனது மார்க்க அறிவுத் தேடல்

உருது பேசும் குடும்பத்தை சேர்ந்த நான் கல்வி அறிவில் சிறந்து விளங்க எண்ணி ஏக இறைவன் அல்லாஹ்விடம் அழுது பிரார்த்திப்பது உண்டு அதன் அடிப்படையில் அரபு மொழியில் குர்ஆனை ஓதுவதற்காக தாயாரிடம் பல முறை கேட்டதுன்டு ஆனால் அவரோ கல்வி அறிவு உனக்கு போதாது என கூறிவிடுவார் ஆனால் நானோ கஷ்டப்பட்டு ஒரு முறை எஸரல் குர்ஆன் எனும் அலிஃப், பே, தே மற்றும் பேஷ், தோ பேஷ், ஜேர், ஜபர் எனும் குறியீடுகளை ஒரு நோட்டில் தமிழில் எழுதிக் கொண்டு எனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தனிமையில் அந்த குறியீடுகளை ரகசியமாக எழுத்துக் கூட்டி படித்து வந்தேன் 2 மாதங்களாக தினமும் தனிமையில் என்ன செய்கிறான் இவன் என்று என்னை நோட்டமிட்ட என் தாயார் நான் குர்ஆன் ஓதுவதைக் கண்டு திகைத்து நின்றார் அன்று அவரிடம் முதல் 3 ஜுஸ்வுகள் திக்கித் தடுமாறி படித்துக் காட்டினேன் கல்வி அறிவில் உள்ள என் ஆர்வத்தை கண்டு கண்கள் கலங்கிய என் தாயார் என்னை முழு குர்ஆனையும் 6 மாதங்களில் படிக்க வைத்தார். ஆசிரியர் துணையின்றி 23 வயதில் குர்ஆனை ஓதியது எனது இறைவன் எனக்கு வழங்கிய அருட்கொடையாகும்.

இறைவன் எனக்குள் ஏற்படுத்திய இந்த தாக்கத்தின் விளைவாக குர்ஆன் (சகோதரா் PJ மொழிபெயர்ப்பு) தா்ஜமாவை தமிழில் படித்தேன் தவ்ஹீத் சிந்தனைகள் எனக்குள் முளைத்தன அல்லாஹ் எனக்கு நேர்வழியைக்காட்டினான் அதற்குரிய நன்றிக் கடனாக நான் இன்றுவரை யாரிடமும் முகத்தைக் காட்டாமல் சுயவிளம்பரம் செய்யாமல் இணையத்தில் நானும் தவ்ஹீத் சிந்தனைகளை வளர்த்து வருகிறேன்.

அரசுப் பணியில் சேரும் முன்பிருந்தும், முகநூலில் அறிமுகமாகும் முன்பும் இதே சிராஜ்அப்துல்லாஹ் என்ற பெயரில் சில கூகுல் குழுமங்களில் மார்க்க விளக்கம் கொடுத்து வந்தேன் அந்த வகையில் 2009-10ம் ஆண்டுக்களில் சகோதரர் ஜி.என் மற்றும் சகோதரர் முஸ்லிம் ஆகியோர் அட்மினாக கொண்ட நமக்குள் இஸ்லாம் என்ற கூகுல் குழுமத்தில்  நானும் உறுப்பினராக இருந்தேன் அதற்குரிய ஆதாரம் நமக்குள் இஸ்லாம் (லிங்கை தொடவும்) கூகுல் குழுமத்தில் உள்ளது.

இக் குழுமத்தில் எனக்கு மார்க்க விஷயத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் அட்மின் அவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகளின் காரணமாக குழும உறுப்பினராக இருந்த நான் எனது ஐடியை நீக்கி வெளியேறினேன் பிறகு உலகத் தமிழ் அன்பர்களால் சர்வதேச தமிழ் சான்றோர்களால் நடத்தப்படும் தமிழ் இலக்கிய குழுமங்களில் குழும உறுப்பனராக சேர்ந்து தமிழ் மொழியின் அழகு மற்றும் இலக்கண நுணுக்கங்களை அறிந்துக் கொண்டேன் அங்கு இஸ்லாத்தை பற்றி தவறாக கருத்து தெரிவிக்கும் சங்கிகளுக்கு அவர்களின் அழகுத் தமிழ் இலக்கணத்தில் தெளிவான மார்க்க விளக்கம் கொடுத்து வந்தேன் தமிழ் அறிஞர்கள் எழுத்துப் புலமையையும் கண்டு வியந்தனர் ஆனால் தெளிவான தமிழ் மொழியில் இஸ்லாத்திற்கு முட்டுக் கொடுக்க வந்துவிட்டான் என்று தங்கள் குழுமத்திலிருந்து என்னை நீக்கியும் விட்டனர் எனது விவாதங்களுக்குரிய ஆதாரமாக  கடவுச்சொல் மறந்து போன https://islamicparadise.wordpress.com/  என்ற எனது இணையதளத்தில் உள்ளது நாத்திகருக்கு பதில்கள் (லிங்கை தொடவும்)

தாவா செய்வது பெருமைக்காக அல்ல

கல்வியறிவில் பின்தங்கிய நான் அல்லாஹ்வின் அருளால் மட்டுமே இன்றளவும் எளிய தமிழ் நடையில் மார்க்க கட்டுரைகளை உருவாக்க முடிகிறது மற்றும் எனக்குள் என் இறைவன் கொடுக்கும் சாதாரண சிந்திக்கும் ஆற்றலைக் கொண்டு விளக்கங்கள் கொடுக்க முடிகிறது.

என்னுடைய கல்வியறிவு, தாவா பணி விபரங்கள் எனது சொந்த இணையதள முகவரிகள் பெருமைக்காக இன்று வெளியிடவில்லை மாறாக நான் 2008ம் ஆண்டு முதல் இணையதளத்தில் தவ்ஹீதை தெளிவான முறையில் மக்களிடம் எத்திவைத்து எனது முகத்தையோ முகவரியையே வெளிக்காட்டமல் வாழும் ஒரு சாதாரண மனிதன் என்றும் எனக்கு என் இறைவன் போதுமானவன் என்றும் சுயவிளம்பரம் எனக்கு தேவையில்லை என்றும் வாழ்ந்து வருவதற்கு தகுந்த சான்றுகளாக என் மனசாட்சியை முன் நிறுத்தி அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறேன்.

முகநூலில் சிராஜ்அப்துல்லாஹ்

கூகுள் குழுமங்களில் மார்க்க விஷயங்களில் வலைந்து கொடுக்காமல்  கருத்துக்களை பதிவிடுவதால் கூகுல் குழும மாடரேட்டர்களால் நீக்கப்படுவதும் தங்களுக்கு சாதகமான பதில்களை பதிவிட நிர்பந்திப்பதாலும் இனி கூகுள் குழுமங்களில் பயணிப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்த நிலையில் என் கண்கள் முன் தோன்றிய சமூக ஊடகமான முகநூல் உதயமானது.

தமிழ், உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளை 25 வயதில் நன்கு முறையாக கற்றுத் தேர்ந்த நான் கணிணி துறையிலும் ஆர்வத்தை கூகுல் தேடலின் வாயிலாக கற்றுக் கொண்டேன் அதன் வெளிப்பாடு போட்டோஷாப் தொழில்நுட்ப கலையில் சுயமாக தோ்ச்சி பெற்றதாகும். இறைவனின் அருளால் கல்வி அறிவற்ற ஞான சூனியமான இருந்த என்னை பல்வகை கலைத்திறன்களில் எந்த ஆசிரியரின் உதவியுமின்றி சிறந்து விளங்கச் செய்த அல்லாஹ்விற்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக அல்லாஹ் வழங்கிய கல்வி அருட்கொடைகளைக் கொண்டு அவனது மார்க்கத்தை சுய விளம்பரம் இன்றி முகநூலில் அழகிய மார்க்க பேனர்களை குர்ஆன் ஹதீஸ்களால் அலங்கரித்து வெளியிட்டு வந்தேன்.

எனது முகநூல் நட்புக்கள்

2010-11 கால கட்டம் முதல் அல்லாஹ்வின் கருணையால் முகநூலில் கேள்வி பதில்களையும், அழகிய பேனர்களையும் மார்க்க விளக்க கட்டுரைகளையும் பிரசுரித்து ஏகத்துவ பணியை எத்திவைத்து வந்த என் ஐடியில் பல தவ்ஹீத் சிந்தனையுள்ள இந்திய இலங்கை நட்புக்கள் இணையத் தொடங்கினர் அவர்களில் மார்க்க பற்றுள்ள ஆண்களும் உண்டு மார்க்க பற்றுள்ள பெண்களும் உண்டு.

ஆரம்ப கால கட்டங்களில் என் முகநூல் நட்பில் உள்ள நபர்கள் மெஸஞ்சரில் தொடர்பு கொண்டு சிலர் மார்க்க கேள்விகளை கேட்பார்கள் பலா் என் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஸலாம் கூறுவார்கள் என் முகத்தையும், என் வீட்டு முகவரியையும், எனது தொலைபேசி எண்களையும் கோருவார்கள் ஆனால் எந்த நிலையிலும் நான் எனது முகத்தையோ, முகவரியையோ, தொடர்பு எண்களையோ கொடுப்பதில்லை ஒரு வழிப்போக்கனாகவே விளம்பரம் இன்றி தாவா செய்ய நாடுவதாக அறிவித்து பதில் ஸலாம் கூறி விடை பெறுவது வழக்கம்.

சிராஜ்அப்துல்லாஹ் என்ற ஐடியிலிருந்து நான் முகநூலை விட்டு விலக காரணம்

2010ம் ஆண்டு முதல் 2017ம் சுமார் 7 ஆண்டுகள் முகநூலில் எனக்குள் உள்ள மார்க்க அறிவின் விளிம்பு அளவிற்கு சிறந்த முறையில் தவ்ஹீத் தாவா செய்து வந்தேன்.

எனது தமிழ் இலக்கண எழுத்துக்களை கண்டு எனது எழுத்துக்களால் சுண்டி இழுக்கப்பட்டு வசீகரிக்கப்பட்ட பல முகநூல் நட்புக்களில் உள்ள சில பெண்கள் (பெண் பெயா்களை வைத்த ஐடி) என்னிடம் அடிக்கடி மெஸஞ்சரில் கண்ணியமான முறையில் கேள்வி கேட்டு பதில் பெற்று வந்தனர்.

எனது முகநூல் மெஸஞ்சரில் மார்க்க கேள்வி எழுப்புவோரில் சில பெண்கள் (தலை சிறந்த மார்க்க பற்று கொண்ட பெண் ஐடிக்கு உரிமையாளர்கள்).

இந்த 2 மார்க்க பற்றுள்ள பெண்கள் (ஐடிகள்) என்னை மெஸஞ்சரில் எழுத்துக்களால் கேள்வி பதில் கருத்து பரிமாறும் போது வரம்பு மீற ஆரம்பித்தனர் என்னை தனது காணாமல் போன கணவனாக பாவித்து என்னிடம் குழைந்து எழுதி பழகி வருவதை என்னால் அவர்களின் செயல்களால் உணர முடிந்தது அவ்வாறு குழைந்து பேசும் போது கண்டிப்பதும் உண்டு மேலும் இப் பெண்கள் (ஐடியில் உள்ளோர்) மெஸஞ்சரில் நள்ளிரவு 11 மணிக்கு 3 முறை வீடியோ CALL முறையில் அழைப்புகளை விடுத்தனர் நான் அந்த 3 வீடியோ காலினையும் நிராகரித்தேன்.

தனிமையில் அந்நிய பெண்களுடன் குரல் மூலமாக பேசுவதும், முகத்தை காட்டும் வீடியோ காலில் தனிமையில் அந்நிய பெண்களோடு பழகுவதும் அதுவும் நள்ளிரவு 11 மணியில் பேசுவதும் விபச்சாரத்திற்கு நெருங்கும் செயல் என்பதை எனது உள்ளம் உணர்த்தியது அல்லாஹ் என்னை கண்காணிக்கிறான் என்று அச்சம் கொண்டேன் நபி யுசூப் (அலை) மற்றும் அன்னை மரியம் (அலை) ஆகியோரின் பரிசுத்தமான வாழ்க்கை முறையைப் பற்றி எனது பிளாக்தளம் மற்றும் முகநூலில் கட்டுரை எழுதி பிரசுரித்தவனாவேன் என் ஒழுக்கத்தை அல்லாஹ் என்னை கண்காணிக்க போதுமானவன்.  அந்த பரிசுத்தமானவர்கள் பற்றி நான் வரைந்த கட்டுரைகள் கீழே லிங்கில் பார்வைக்கு உள்ளது.

1.காம இச்சையை வேறருத்த நாயகன் நபி யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்)

2.மர்யம் (அலை) என் தாய்

மீண்டும் மீண்டும் அந்த மார்க்க பற்றுள்ள இரண்டு பெண்கள் (ஐடியில் உள்ளவர்கள்) சில பச்சிளம் குழந்தைகளின் புகைப்படங்களை கமண்டில் பதிவிட்டு என்னை வீண் வம்புக்கு இழுத்தனர்.

இந்த சம்பவத்திற்கு மறுநாள் மெஸஞ்சரில் 3 முறை வீடியோ CALL முறையில் தன் கணவனாக பாவித்து தொடர்பு கொள்ள நாடிய அந்த கேடுகெட்ட சகோதரிகளினால் வேதனைகளை அனுபவித்த நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் என்று எச்சரித்து தீய எண்ணங்களை என்னுள் விதைக்காதீர்கள் நான் அப்படிப்பட்ட குடும்பத்தை சார்ந்த ஆண் அல்ல என்று தெரிவித்ததோடு அவர்களிடம் என் முகத்தை காட்டவுமில்லை என் வீட்டு முகவரியை தெரிவிக்கவுமில்லை ஆனால் என் குடும்ப சூழல் பற்றியும் என் இயலாமை மற்றும் என் மனைவி மக்கள் பெயர்களை தெரிவித்துவிட்டு அந்த இரு பெண்களின் முகநூல் நட்பை முறித்துக் கொண்டேன்.

மார்க்க பற்றுள்ள பெண்கள் என்று எண்ணி முகநூல் நட்பில் இருந்த எனக்கு அந்த பெண்கள் (ஐடியில் உள்ளவர்க)ளின் ஈனச் செயல்கள் கண்டு மனமுடைந்தேன். அந்நிய ஆடவர்களை கணவனாக பாவிப்பது கணவனுக்கு செய்யும் துரோகமில்லையா? என் மனைவி இவ்வாறு செய்தால் என்னால் எவ்வாறு தாங்கிக் கொள்ள இயலும் இப்படித்தானே ஒவ்வொரு கணவரும் இருப்பார் என்று சிந்தித்து கண் கலங்கினேன். மனைவியை மிகவும் நேசிப்போருக்கு மட்டுமே இதுபோன்ற எண்ணங்கள் தோன்றும்.

எவரிடத்தும் அதிகம் பேசாமல் வாழும் என்னால் அதிகம் சிந்திக்கக் கூடிய திறன் இருப்பதால் இந்த கேடுகெட்ட பெண்களின் செயல்களை அதிகமதிகம் சிந்தித்ததன் விளைவாக மன உலைச்சல் ஏற்பட்டு 15 நாட்கள் நோய்வாய்ப்பட்டு ஹைபர் டென்சன் எனும் Blood Pressure நோய் 160/90 அளவுக்கு ஏற்பட்டு மருத்துவ மனையில் ஒரு வாரம் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

முகநூலில் ஆர்வம் குறைந்தது

அழகிய தமிழில் உயர்ந்த நடையில் இலக்கண நுட்பங்களோடு கருத்துக்களை நான் பதிவிடுவதால் அந்த இரண்டு பெண்களும் சுண்டி இழுக்கப்படுவதும் ஈர்க்கப்படுவதும் உணர்ந்த நான் இனி எவ்வாறு எழுதுவது என்று எண்ணி முகநூலில் கவனம் செலுத்துவதை சில காலம் தவிர்த்து வந்தேன். கொரோனாவுக்கு முன் 1 ஆண்டும் கொரோனா காலம் மற்றும் அதற்கு பிந்தைய 1 ஆண்டும் என கடந்த 3 ஆண்டுகளாக 2019-20ம் ஆண்டுக்கு பின் நான் முகநூலில் கருத்துக்களை பதிவிடுவதும் கட்டுரைகளை வரைவதும் வெளியிடுவதும் மிகவும் குறைவு.

2020ல் கொரோனா காலத்தில் எனக்கு 2 வது ஆண் குழந்தை பிறந்ததை முகநூலில் பதிவிட்டு அந்த குழந்தைக்கு ஆபித் அப்துல்லாஹ் என்று பெயரிட்டதையும் வெளியிட்டு அந்த பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கும் காணாமல் போன கணவன் நான் அல்ல என்பதற்கு ஆதாரமாக முன்வைத்தேன். என் குழந்தை என் சமூக அந்தஸ்து இது என் இறைவன் எனக்கு அளித்த பாக்கியம் மற்றும் உலக சாட்சியம் என்பது முகநூலில் உள்ள என் நட்புக்கள் அனைவரும் அறிந்ததே.

2019க்கு பின்னர் பல சந்தர்ப்பங்களில் சில தலைப்பகளை தேர்ந்தெடுத்து இந்த கட்டுரையை இந்த நாளில் விரைவில் வெளியிடுவேன் என்று அறிவித்திருப்பேன் ஆனால் அந்த கட்டுரைகளை வரைய முடியாமல் திணரி மன்னிப்பும் கோரியிருப்பேன் அதற்கான காரணம் அந்த பெண்கள் என்னில் ஏற்படுத்திய தாக்கத்தின் வலிகளாகும்.

மார்க்கம் சம்பந்தமான கட்டுரைகளை வரைய அமரும் போது சிந்திக்க முற்படுவேன் ஷைத்தான் அந்த பெண்களின் செயல்களை என் கண் முன்னே காட்டுவான் மனமுடைந்து எழுதுவதை நிறுத்திவிடுவேன் அதனால் சிந்திக்கும் திறனில் முடக்கம் ஏற்பட்டது இன்றளவும் அந்த பெண்களின் செயல்களால் மனதில் வெற்றிடமே நிலவுகிறது.

என்னைப் போன்று தூய்மையான எண்ணம் கொண்ட எந்த ஆண் மகனுக்கும் இந்த நிலை வரக்கூடாது என் வேதனைகளை மார்க்க அறிஞர்களால் மட்டுமே உணர இயரும் ஏனெனில் மார்க்க கட்டுரைகளை சிந்தித்து எழுதுபவர்களின் உள்ளங்கள் தூய்மையான சலனமில்லாத ஓடை போன்று இருக்க வேண்டும் அப்போதுதான் கருத்துக்கள் வெளிப்படும் உள்ளம் கடுமையான வேதனையில் இருந்தால் எழுதவோ சிந்திக்கபோ சற்றும் இயலாது.

சிராஜ்அப்துல்லாஹ் வெட்கப்படுகிறேன்

மனிதனாக பிறந்த ஒருவன் பாவத்தில் ஈடுபட்டு வெட்கப்படுவது இயல்பு ஆனால் நானோ பாவத்தில் ஈடுபடாமல் அந்த கேடுகெட்ட ஈனப் பெண்களின் அருவருக்கத்தக்க செயல்களைக் கண்டு வெட்கப்படுகிறேன்.

நான் இறைவனுக்கு அடிமையாக இருப்பதில் திருப்தியும் அதே நேரத்தில் வெட்கப்படுதல் ஈமானின் ஒரு பகுதி என்பதையும் உணர்ந்திருக்கிறேன் ஆகவே இஸ்லாத்தில் இப்படிப்பட்ட கேடுகெட்ட குடும்ப பெண்களும் இருக்கிறார்களா? என்று சிந்திக்கும் போது எனக்கு என்ன சொல்வது என்றே எழுத தெரியவில்லை.

இன்றளவும் என் வேதனைகளை என் இறைவன் முன் கொட்டிக் கொண்டுதான் உள்ளேன் அவன் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். என் இறைவன் மிகவும் ரோஷக்காரன் கோபக்காரன் என்பதை மட்டும் என்னால் கூற இயலும் அவன் என் மீது பரிதாபப்பட்டு அந்த கேடுகெட்ட பெண்களை தண்டிக்க முற்பட்டால் எவர்தான் காப்பாற்ற இயலும்?

மார்க்க பற்று என்பது வெளி வேஷமோ?

பல முகம் தெரியாத நட்புக்களோடு முகநூலில் எழுத்துக்களால் கருத்து பரிமாறியுள்ளேன் ஆனால் அவர்களில் ஒரு சிலர் மார்க்க பற்றுள்ள பரிசுத்தமானவர்களைப் போன்று நடித்து கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது கண்டு அதுவும் பெண்கள் இப்படியும் இருப்பார்களா?

அந்நிய ஆண்களை தனது கணவனாக நினைத்து ஏங்குவார்களா?

எனும் போது நம்முடன் ஷைத்தான் எப்படியெல்லாம் மோதுகிறான் என்று எண்ணத் தோன்றுகிறது.

நீங்கள் தான் என் கணவர் என்று அறிமுகமில்லாத ஆண்களிடம் கேட்பது எப்படி உள்ளது எனில் ஒரு மனிதன் அந்நிய நபரை தன் தகப்பனாக கருதுகிறானே அதற்கு சமமானதாகும் இப்படிப்பட்ட செயல் நரகவாதிகளின் செயல்களாகும். இதோ ஆதாரம்!

தன் தந்தை அல்லாத ஒருவரைத் தன் தந்தை என வாதிடுபவனுக்கு அல்லது தன்னை விடுதலை செய்த உரிமையாளர் அல்லாத ஒருவரைத் தன் உரிமையாளர் எனக் கூறுபவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் கூடுதலான வழிபாடு எதையுமே மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான் (ஸஹீஹ் முஸ்லிம் -2654)

மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் அந்த கேடுகெட்ட பெண்களின் நிலையை அந்த பெண்களே உணரட்டும் என்பதை மனதில் வைத்து இங்கு அந்த பெண்களின் முகத்திரைகளை வெளிப்படுத்தாமல் கண்ணியம் காக்கின்றேன்.

அல்லாஹ்விற்கான மன்னிக்கிறேன்

என்னை தன் காணாமல் போன கணவனாக கருதம் அந்த கேடுகெட்ட பெண்களின் செயலுக்குரிய தண்டனையை அல்லாஹ் நபிமொழி மூலம் அறிவித்துவிட்டதாக கருதி அவர்களை சபிப்பதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.

அவர்களை ஏக இறைவனாகிய அல்லாஹ்வே பார்த்துக் கொள்வானாக!

மறுமையில் அவர்களிடம் அவனே அவர்களுடைய செயல்களுக்குரிய தண்டனை வழங்குவானாக என்று அல்லாஹ்வின் பொறுப்பில் அவர்களை விட்டுவிடுகிறேன்.

ஒருவேளை எனது தாவா பணியைக் கண்டு நயவஞ்சகர்களில் ஆண்கள் யாரேனும் பெண் ஐடியில் வந்து நன்மை ஏவி தீமையை தடுக்கும் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க நாடியிருந்தால் அவர்களை அல்லாஹ் மன்னிக்காதவரை நானும் மன்னிக்கமாட்டேன் ஏனெனில் அவர்கள் எனக்கு எதிராக சதி செய்யவில்லை மாறாக அல்லாஹ்வுக்கு எதிராக சதி செய்திருப்பார்கள் என்பதை பிரகடனப்படுத்துகிறேன். இங்கு மன்னிப்பு எனும் செயல் அல்லாஹ்வைச் சார்ந்ததாகும்.

எவரேனும் என்னை தவறான வழிக்கு இட்டுச் செல்ல சதி செய்தால் அல்லாஹ்வே அவர்களை கண்காணிக்கவும் தண்டிக்கவும் போதுமானவன் என்று அல்லாஹ்வின் மீது பொறுப்பை விட்டு விடுகிறேன்.

சிராஜ்அப்துல்லாஹ் முகநூலை விட்டு விலகுகிறேன்

2019ம் ஆண்டுக்கு பின் 3 ஆண்டுகள் இடைவெளி கழித்து மீண்டும் முகநூலில் 2022 தினமும் தவ்ஹீத் சிந்தனையை வளர்க்கலாம் என்று நுழைய முற்பட்டேன் கடந்த சில நாட்களுக்கு மெஸஞ்சரில் புதிய பெயரில் பெண் பெயரில் ஒரு ஐடி மீண்டும் Hai How are You? என்று கேள்வி எழுப்பினார் நான் பதில் அளிக்கவில்லை.

முகநூலில் நான் ஒரு பதிவிட்டு இனி யாருக்கும் மெஸஞ்சரில் பதில் கொடுப்பதில்லை என்றும் மீறி கேள்வி எழுப்பினால் முகநூலை விட்டு நிரந்தமாக வெளியேறிவிடுவதாகவும் பொது வெளியில் அறிவித்திருந்தேன்.

இதை அறிந்த பின்னர் மீண்டும் முகநூல் மெஸஞ்சரில் அந்த பெண்ணின் கணவர் பெயரை முன்மொழிந்து நீங்கள்தான் அவரா? என்று கேள்வி எழுப்புகிறார்!

முகநூலில் மூன்று ஆண்டுகள் இடைவெளி விட்டும் இன்னும் இந்த கேடு கெட்ட பெண்கள் (ஐடியில் உள்ளோர்) இறைவனுக்கு அஞ்சி இத்தனை ஆதாரங்களை கண்டும் என் குழந்தை பிறப்பை ஆதாரமாக கண்டும் காணாமல் போன என் கணவரா என்று எண்ணி கருத்து கேட்பது மீண்டும் மன உலைச்சலைத் தவிர எதை கொடுக்கிறது?

இப்படிப்பட்ட நிலையில் முகநூலில் சிராஜ்அப்துல்லாஹ் என்ற பெயரில் கருத்து பதிவிடுவது கூடுமா? என்று சிந்தித்தேன், இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக முகநூலை விட்டும் சிராஜ்அப்துல்லாஹ் விடை பெற தீர்மாணித்துள்ளேன்.

ஒரு ஆணின் நற்செயல்கள் சில பெண்களுக்கு சபலத்தை தூண்டுவதாக அமைகிறது இதை தவிர்க்க எனக்கே நான் திரை இட்டுக் கொள்வது தவிர வேறு வழியில்லை இதனால் அவர்களின் பார்வையில் சபலம் எனும் நோய் தூண்டப்படாமலிருக்க வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன் எனவே சிராஜ்அப்துல்லாஹ் என்ற புனைப் பெயா் கொண்ட முகநூல் ஐடியில் மார்க்க கருத்துக்களை வெளியிடுவது இன்றுடன் இந்த சிராஜ் உண்மை பெயா்தாங்கியால் நிறுத்தப்படுகிறது.

என்னை யாராலும் தடுக்க இயலாது (இன்ஷா அல்லாஹ்)

சிராஜ்அப்துல்லாஹ் என்ற புனைப்பெயரில் இந்த சிராஜ் என்ற உண்மையான பெயர் கொண்டவனால் மார்க்க சிந்தனை கருத்து கட்டுரைகளை எழுதிவருவது எனை ஈன்ற பெற்றோருக்கும், என் மனைவி மக்களுக்கும், என் உடன் பிறந்தோருக்குமே தெரியாது எனும் போது எந்த கேடுகெட்ட பெண்களுக்கும் என் முகம் முகவரி தெரிய வேண்டாமே!

2009 முதல் இன்றுவரை சுமார் 13 ஆண்டுகள் இணையத்தில் முகத்தை காட்டாமல் தாவா செய்த எனக்கு புதிய ஐடியில் வளம்வருவது இயலாத காரியமல்ல எனது செயல்கள் அனைத்தும் இறைவன் அறிவான் அவன் எனக்கு எப்படியும் எந்த நிலையிலும் உதவுவான் மேலும் எனக்கான கூலி அவனிடமே நிரப்பமாக உள்ளது என்று எண்ணி இந்த சிராஜ்அப்துல்லாஹ் ஐடியிலிருந்து முகநூலை விட்டு நிரந்தமாக விலகுகிறேன்.

வேறொரு புணைப் பெயரில் எனது தாவா பணி இறை நாட்டப்படி நிகழ்ந்துக் கொண்டே இருக்கும் சிராஜ்அப்துல்லாஹ்வை மிகவும் நேசிக்கக் கூடிய நல்ல தோழர்களை சிராஜ் எனும் சிராஜ்அப்துல்லாஹ் அறிவான் அவர்களை அவ்வப்போது தவ்ஹீத் சிந்தனைகள் மூலம் உள்ளத்தை குளிரச் செய்வான் (இன்ஷா அல்லாஹ்) என்று கூறி சிராஜ் எனும் சிராஜ்அப்துல்லாஹ்-வாகிய நான் இன்று முகநூலை விட்ட முற்றிலும் நீங்கிவிடுகிறேன். என் முகநூல் தோழர்கள் என்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். (இன்னலில்லாஹ் வ இன்ன இலைஹி ராஜிவுன்)

குறிப்பு

நான் நாடியிருந்தால் அந்த கேடு கெட்ட பெண்களோடு குழைந்து பேசி கணவனாக நடித்திருக்க இயலும் ஆனால் என்னை கண்காணிக்க இறைவன் இருக்கிறான் என்று அஞ்சுகிறேன்.

மேற்கண்ட எனது வாழ்க்கைச் சம்பவங்கள் மற்றும் எனது செயல்திறன்கள் அனைத்தும் அந்த கேடுகெட்ட பெண்கள் அல்லது அந்த கேடுகெட்ட பெண்களின் பெயர்தாங்கி கள்ள ஐடிகளில் உள்ளோருக்கு ஆதாரமாக முன்வைக்கவே எழுதப்பட்டுள்ளது தவிர என் வாழ்க்கை சுயசரிதைக்காக அல்ல.

முகநூலில் சஹாபாக்களைப் போன்று ஒழுக்க நெறி கொண்டு பதிவிடும் அனைத்து ஆணும் பெண்ணும் ஒழுக்கமானவர்கள் என்று கருதிவிடாதீர்கள் ஒரு சிலரே ஒழுக்க நெறிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள் ஏனையோரின் ஒழுக்க நெறிகள் மஹ்ஷரில் இறைவன் வெளிப்படுத்துவான் என்பதே நான் கண்ட வேதனைகளாகும் எனவே தீனை விரும்புவோரும் உண்டு துண்யாவை விரும்புவோரும் உண்டு யாரையும் நம்பி மோசம் போகாதீர்.

யூஸுஃப் (அலை) அவர்களுக்கு ஏற்பட்ட அழகிய சோதனை!

அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) “வாரும்” என்று அழைத்தாள் – (அதற்கு அவர் மறுத்து,) “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் – அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று சொன்னார். (குர்ஆன் 12:23)

ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் – ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.  (அல்குர்ஆன் 12:24)

(யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.  (அல்குர்ஆன் 12:25)

அதற்கவள் “நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்களோ, அவர்தாம் இவர்; நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தினேன் – ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும் அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்து கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளப்படுவார்; மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்” என்று சொன்னாள். (அல்குர்ஆன் 12:32)

(அதற்கு) அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்தவராக) கூறினார். (அல்குர்ஆன் 12:33)

நபி யூஸுஃப் (அலை) அவர்கள் சிறையை தமக்கரிய திரையாக ஆக்கிக்கொண்டார் அதுபோல நானும் இந்த கேடுகெட்ட பெண்களின் தூண்டுதல்களை விட்டும் முகநூலை விட்டும் திரையிட்டுக் கொள்கிறேன்.

சகோதரத்துவத்துடன்

சிராஜ்அப்துல்லாஹ்! (சிராஜ்)

இணையற்ற இறைவனுக்கு சில வினாடிகள் இணை வந்தது எப்படி??

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

கேள்வி

அல்லாஹ்வின் சிபத்து படைப்பினத்திற்கு இருப்பதாக நம்பினால் (ஷிர்ருக்கு – இணைவைத்தல்) என்பது ஏக மனதான முடிவு. இப்போ..மூஸா நபிக்கு அல்லாஹ் நாடி கடலை பிளக்கும் வல்லமையை கொடுத்தால், இறைவனது குறித்த ஆற்றலில் மூஸாவுக்கும் சிரிது நேரம் வழங்கினான் என்ற கறுத்து வரும் சரிங்களா? அதே போன்றுதான், தஜ்ஜாலும் ஒரு முறை கொடுத்தாலும் பல முறை கொடுத்தாலும் அவனது ஆற்றலில் இருந்து கொடுக்கப்பட்டது சரிதானே! இதே அடிப்பைதான் ஈஸா நபிக்கும்! ஆக இங்கே நபிமார்களுக்கு மட்டுமின்றி அயோக்கிய தஜ்ஜாலுக்கும் இறைவன் அவனது ஆற்றலை சிறிது காலம் வழங்குவதாக நீங்களும் உலமாக்களும ஒத்த கறுத்தையே கூறுகிறீர்கள்! இப்போது குர்ஆனின் இன்னும் சில வசனங்கள் அவனைப் போல எதுவுமில்லை! அவனுக்கு நிகர் எதுவுமில்லை! அவனுக்கு சமம் எதுவுமில்லை! என பல வசனங்கள் கூறுகிறது. இப்போ அவன் நாடி அவனது அற்றலில் படைப்பினங்களுக்கு கொடுத்ததாக நம்பும் நீங்கள் மற்றும் உளமாக்கள் இந்த கொடுக்கப்பட்ட நேரத்தில் மாத்திரம் அவனைப் போல அவனது படைப்புகளில் சிலது உண்டு என நம்புவீர்களா??? பதில் சொல்லுங்கள்!

முகநூல் சகோதரர் Abu Muaas

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முகநூல் சகோதரர் Abu Muaas அவர்கள் தொடுத்த மேற்கண்ட கேள்வியில் கீழ்கண்ட பொருள் அடங்குகிறது!

அல்லாஹ்வுக்கே உரிய ஆற்றல்களை அல்லாஹ்

  • மூஸா (அலை) அவர்களுக்கு கடலை இரண்டாக பிரிக்கும் ஆற்றலை கொடுத்துள்ளான்.  
  • ஈஸா (அலை) அவர்களுக்கு இறந்த மனிதனை உயிர்பிக்கும் ஆற்றலை கொடுத்துள்ளான்
  • மனிதர்களை வழிகெடுக்கும் மஸீஹுத் தஜ்ஜாலுக்கும் ஒரே ஒரு முறை மட்டும் இறந்த மனிதனை உயிர்பிக்கும் ஆற்றல் கொடுத்துள்ளானே

அப்படியாயின் இறைவனின் ஆற்றலுக்கு இந்த மூவரும் இணையாக இருக்கும் பட்சத்தில் இறைவனுக்கு இணை துணை கிடையாது என்ற குர்ஆன் வசனம் முரணாக உள்ளது ஆகவே இறைவனுக்கு இணையாக உள்ள இந்த ஆற்றல்களை நாம் நம்பும் போது சிறிது நேரம் மட்டும் இறைவன் இணை கற்பிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம் இது முறையா?

சகோதரர் அபு முஆஸ் அவர்களின் மற்றுமொரு கேள்வி

அல்லாஹ்வின் ஆற்றல் நபிமார்களுக்கும் தஜ்ஜாலுக்கும் உண்டு எனில் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாகிறார்களே? அவன் நாடி அவனது அற்றலில் படைப்பினங்களுக்கு கொடுத்ததாக நம்பும் நீங்கள் மற்றும் உளமாக்கள் இந்த கொடுக்கப்பட்ட நேரத்தில் மாத்திரம் அவனைப் போல அவனது படைப்புகளில் சிலது உண்டு என நம்புவீர்களா??? பதில் சொல்லுங்கள்! (முகநூல் சகோதரர் Abu Muaas)

நபி ஆதம் (அலை) – அவர்களின் அற்புதம்

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள் என்றான். (குர்ஆன் 2:31)

முதல் மனிதரும் நமது ஆதி பிதாவாகிய நபி ஆதம் (அலை) அவர்களுக்கு உலகில் உள்ள அனைத்து பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தவன் இறைவனாகிறான் எனவே தனது கல்வி ஞானத்தை அல்லாஹ் அவருக்கு வழங்கியதன் காரணமாகவே அவர் அனைத்து பொருட்களின் பெயர்களையும் விவரித்துள்ளார். இங்கு ஆதம் நபி அல்லாஹ்வுக்கு இணையானவராக கருத இயலுமா?

அல்ல அல்ல குறையாத செல்வம் கல்வி என்று சொல்வது வழக்கம் அல்லாஹ்விடம் உள்ள கல்வியை அளக்க இயலுமா? ஆகவே அல்லாஹ் தனது தூதரான நபி ஆதம் (அலை) அவர்களுக்கு அவருடைய அறிவு எந்த அளவுக்கு தாங்கிக் கொள்ள இயலுமோ அந்த அளவுக்கு மட்டுமே கல்வியை செலுத்தியிருப்பான் காரணம் படைப்பினங்கள் பலவீனமானவையே அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமமப்படுத்துவதில்லை.

நபி நூஹ் (அலை) – அவர்களின் அற்புதம்

நபி நூஹ் (அலை) அவர்கள் ஒரு பிரம்மாண்டமான கப்பலை கட்டி மக்களையும் இன்ன பிற உயிரினிங்களையும் காப்பாற்றியுள்ளார் எனில் அந்த அளவுக்கு ஒரு பேராபத்து நிகழவிருப்பது முக்கூட்டியே அறிந்து வைத்துள்ளார் எனும் போது அவர் அல்லாஹ்வின் ஆற்றலுக்கு இணையாக கருதப்படுவாரோ என்றால் இல்லை என்றே பொருள் கொள்ள வேண்டும்

இன்னும், நூஹ் – அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம். (குர்ஆன் 21:76)

நபி மூஸா (அலை) – அவர்களின் அற்புதம்

மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்). (குர்ஆன் 2:50)

இங்கு அல்லாஹ் கடலைப் பிளந்து காப்பாற்றியதாக கூறும் போது அந்த செயலை நபி மூஸா (அலை) அவர்களின் மூலமாக நிறைவேற்றியுள்ளான் ஆகவே அவர் அல்லாஹ்வுக்கு இணையானவராக ஆகிவிடுவாரா? என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.

நபி ஈஸா (அலை) அவர்களின் அற்புதம்

மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.(குர்ஆன் 3:46)

குழந்தையாக தொட்டிலில் இருக்கும் போதே நபி ஈஸா (அலை) பேசும் ஆற்றலை பெற்றிருந்தார்.

இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்). (குர்ஆன் 3:49)

களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும் என்று இறைவசனம் கூறும் போது அல்லாஹ்வுக்கு இணையாக நபி ஈஸா (அலை) அவர்களை கருத இயலுமா? என்றால் இயலாது!

கொடிய மஸீஹுத் தஜ்ஜால் – அற்புதம்

ஒரு நாள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தஜ்ஜால் பற்றி நீண்ட விளக்கம் தந்தார்கள். மதீனாவின் நுழைவாயிலுக்கு வருவது அவனுக்கு விலக்கப்பட்டுள்ளது. எனவே மதீனாவிற்கு வெளியில் உள்ள உவர்நிலத்திற்கு வருவான். ஒரு நாள் சிறந்த மனிதர் ஒருவர் அவனிடம் செல்வார்.  ‘அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எச்சரிக்கை செய்த தஜ்ஜால் நீ தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் கூறுவார். ‘இவரைக் கொன்று விட்டு பின்னர் நான் உயிர்ப்பித்தால் (நான் கடவுள் என்ற) இவ்விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்களா?” என்று அவன் கேட்பான். அவர்கள் மாட்டோம் என்பார்கள். உடனே அவரை அவன் கொல்வான். பின்னர் உயிர்ப்பிப்பான். உயிர்ப்பிக்கப்பட்டதும் அந்த நல்ல மனிதர் ‘முன்பிருந்ததை விட இன்னும் தெளிவாக நான் இருக்கிறேன்” என்று கூறுவார். உடனே தஜ்ஜால் அவரைக் கொல்ல நினைப்பான். அவனால் அது இயலாது என்று நபி (ஸல்) (நூல்: புகாரி 7132, 1882)

இங்கு தஜ்ஜால் ஒரு மனிதரை உண்மையிலேயே கொலை செய்து உயிர் கொடுத்து எழுப்புவான் என்று உள்ளது ஆகவே கொடியவன் தஜ்ஜாலை அல்லாஹ்வுக்கு இணையாக நம்ப வேண்டுமா? என்றால் இல்லை என்றே கூற இயலும்! அதற்கான காரணம் இதோ!

”வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை என்று (நபியே!) நீர் கூறுவீராக: இன்னும் (அல்லாஹ்வுக்கு) வழிபடுபவர்களில் முதன்மையானவனாக இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக! இன்னும், நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம். (குர்ஆன் 6:14)

அல்லாஹ்வின் ஆற்றல்கள் எப்படிப்பட்டவை?

அல்லாஹ் இதுவரை இல்லாத எந்த ஒரு புதுமையான படைப்பு ஒன்றை படைக்க நாடினாலும் ”குன்” ஆகுக என்று கூறினால் போதும் அது அவன் நினைத்தவாறு அவ்வாறே ஆகிவிடும் இது அல்லாஹ்வின் ஆற்றலாகும். இந்த இடத்தில் அல்லாஹ் எந்த ஒன்றை நினைக்கிறானோ அதை அவ்வாறே ஆக்கும் வல்லமையை பெற்றுள்ளான் என்ற உண்மை அடங்கியுள்ளது. நினைத்ததை நினைத்தபடியே முடிப்பவன் அல்லாஹ் என்பதே உட்கருத்தாகும்.

2:117 بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் குன் – ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (குர்ஆன் 2:117)

சகோதரர் அபு முஆஸ் அவர்களுக்கு மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் விளக்கம் உள்ளது அதாவது!

அல்லாஹ் எந்த ஒன்றை படைக்க நாடினாலும் குன் ஆகுக என்று கூறினால் அது அவன் நினைத்தவாறே ஆகிவிடும் அவ்வாறு ஆகக்கூடிய அந்த வஸ்து அதற்கு முன் இருந்திருக்காது அதாவது இல்லாத ஒன்றை உருவாக்குவதே அல்லாஹ்வின் வல்லமையாகும்.

களிமண்ணிலிருந்து மனிதனையும், நெருப்பிலிருந்து ஜின் இனத்தையும், ஒளியிலிருந்து மலக்குமார்களையும் அல்லாஹ் படைத்ததாக குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான் ஆகவே மனிதனையும், ஜின்னையும், மலக்குமார்களையும் படைக்கும் முன் அந்த படைப்பினம் இருந்திருக்கவில்லை என்பதை உணர வேண்டும்.

  • அல்லாஹ் படைத்த படைப்பினங்களின் பெயர்களையே நபி ஆதம் (அலை) உச்சரித்தார் இங்கு இந்த செயல் குன் ஆகுக என்பதில் அடங்குவதில்லை ஆதம் நபியின் செயல் அல்லாஹ்வின் முதல் தரமான ஆற்றலுக்கு கீழ் இரண்டாவதாக அமைந்துள்ளது!
  • நபி மூஸா (அலை) கடலை பிளந்து காட்டினார்கள் இங்கு கடலை ஏற்கனவே அல்லாஹ் படைத்துவிட்டான் ஆகவே இந்த செயல் குன் ஆகுக என்பதில் அடங்குவதில்லை மூஸா நபியின் செயல் செயல் அல்லாஹ்வின் முதல் தரமான ஆற்றலான கடல் அதை பிளவுபடச் செய்யும் இரண்டாவதாக அமைந்துள்ளது!
  • நபி ஈஸா (அலை) தொட்டிலில் இருக்கும் போதே பேசினார் எனும் போது அவரே ஒரு படைப்பினம் அதை அல்லாஹ் ஆதம் நபியை போன்ற படைத்ததாக கூறுகிறான் எனவே சுயம்புவாக தாமாக உருவாகாத ஈஸா (அலை) அவர்களின் செயல் இரண்டாம் தரமானது அவரை படைத்த அல்லாஹ்வின் வல்லமை முதல்தரமானது இங்கு அல்லாஹ் உயர்ந்து நிற்கிறான்.
  • களிமண்ணால் ஒரு பறவை உருவாக்கி அதில் நபி ஈஸா (அலை) ஊதினால் அந்த பறவை உயிர் பெற்றுவிடும் என்பது உண்மைதான் இங்கு களிமண் அல்லாஹ் படைத்தது அதைக் கொண்டு இரண்டாம்தரமான படைப்பைத்தான் நபி ஈஸா (அலை) செய்து காட்டுகிறார்கள் இங்கு களிமண் இல்லாமல் எந்த உயிரும் படைக்கப்படவில்லை ஆகவே அல்லாஹ்வின் ஆற்றல் இங்கு உயர்ந்து நிற்கிறது!
  • பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் நபி ஈஸா (அலை) அவர்கள் குணப்படுத்துவதாக கூறுகிறார்கள் அவர் குணப்படுத்தும் குருடரும் வெண்குஷ்டரோகியும் அல்லாஹ் படைத்தவையாகும் ஆகவே அல்லாஹ்வின் படைப்பினத்தையே நபி ஈஸா (அலை) அவர்கள் குணப்படுத்தினார்கள் எனும் போது அல்லாஹ்வின் ஆற்றலுக்க நிகர் ஈஸா (அலை) இல்லை என்ற கூற முகாந்திரம் உள்ளது.
  • இறந்தோரை உயிர்ப்பிப்பேன் என்று நபி ஈஸா (அலை) அவர்கள் கூறும்போது அல்லாஹ் படைத்த ஒரு உயிர் அல்லாஹ் விதித்த விதிப்படி மரணத்தை எய்துகிறது அதை அல்லாஹ் விதித்த விதிப்படி மீண்டும் உயிர்பிப்பதாகவே ஈஸா (அலை) கூறுவதாக நாம் கருத வேண்டும் இங்கு விதியை அல்லாஹ் படைத்துள்ளான் அந்த விதியை ஈஸா (அலை) அவர்கள் பின்பற்றுகிறார்கள் எனும்போது அல்லாஹ்வை விட ஈஸா (அலை) அவர்களுக்கு ஆற்றல் இல்லை என்பது மிகத் தெளிவாக விளங்க இயலுகிறது.
  • கொடியவன் தஜ்ஜால் வருவான் ஒரு முறை மட்டும் ஒரு மனிதரை கொலை செய்வான் அவா் இறந்த பின்னர் உயிர் கொடுத்து எழுப்புவான் மீண்டும் அந்த செயல் அவனால் செய்ய இயலாது என்று நபி மொழி உள்ளது இதன் மூலம் கொடிய தஜ்ஜால் அல்லாஹ்வின் ஆற்றலை பெற்றுள்ளானா என்று கருதினால் நாம் காஃபிர் ஆகிவிட வேண்டியதுதான். ஏனெனில் தஜ்ஜால் கொலை செய்வதும் அல்லாஹ் படைத்த உயிரைத்தானே தவிர தாமே உருவாக்கிய உயிரை அல்ல.

சிந்திக்க சில வரிகள்

நாம் அனைவரும் மனிதர்களாக பிறந்துள்ளோம்! (அல்லாஹ்வின் அருளால் இந்த பதிவை ஜின்கள் படித்துக் கொண்டிருந்தாலும் ஜின்களாகிய நீங்களும் அல்லாஹ்வின் படைப்பினமே)

மனிதர்களுக்கு மனிதர்களின் பார்வையில் எது பிரம்மாண்டமாக தோன்றுகிறதோ அதையே அத்தாட்சியாக அல்லாஹ் வைத்து மனிதர்களுக்கு சாட்சியாக நிறுத்துகிறான்

நபி மூஸா (அலை) அவர்களையும் அவரை பின்பற்றி வந்த சமூகத்தாரையும் கடலை பிளந்து காப்பாற்ற வேண்டிய அவசியம் அல்லாஹ்வுக்கு இல்லை அல்லாஹ் நாடியிருந்தால் கடல்களுக்கு மத்தியில் திரை அமைத்ததை போன்று கொடியவன் ஃபிர்அவ்னுக்கும் மூஸா நபியின் சமூகத்தாருக்கும் இடையில் திரை அமைத்திருந்தால் அங்கு கடல் பிளக்க வாய்ப்பு இல்லை இது அல்லாஹ்வுக்கு இயலாத காரியமா? இங்கு அல்லாஹ் கடலை மூஸா நபியின் மூலம் பிளக்கச் செய்து காட்டியதன் மூலமாக நான்கு சோதனைகளை முன்வைக்கிறான்!

முதல் சோதனை

நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப் படி தன்னுடைய அந்த கைத் தடியை கடலின் மீது அடிக்கிறாரா? அவ்வாறு அடித்தால் கடல் பிளக்குமா? என்ற தயங்குகிறாரா? என்று நிலை தடுமாறச் செய்வது நபி மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் விதித்த சோதனை அதில் அவர் வெற்றி பெற்றுவிடுகிறார்.

இரண்டாம் சோதனை

கடல் பிளந்தவுடன் அந்த மக்கள் அதில் நுழைந்து தம் உயிர்களை இறைவனின் பாதையில் காப்பாற்றிக் கொள்கிறார்களா? அல்லது எதிர்த்து வரும் ஃபிர்அவ்னின் சேனைகளிடம் மண்டியிட்டு சரணாகதியடைகின்றார்களா? என்பது நபி மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்திற்கு அல்லாஹ் விதித்த இரண்டாவது சோதனை! அதில் அவர்களும் வெற்றி பெற்று விடுகின்றனா்.

மூன்றாவது சோதனை

நான்தான் கடவுன் என்ற மார்தட்டிக் கொண்ட கொடிய ஃபிர்அவ்ன் அந்த கடல் பிளந்த காட்சியைக் கண்டு அக்கனமே அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறானா? என்பது அல்லாஹ் ஃபிர்அவ்னுக்கு விதித்த சோதனை அதில் அவன் சருகிவிடுகிறான் மேலும் பிளவுபட்ட கடலுக்கு நடுவில் அவனும் பயணித்து மக்களை தாக்க முற்படுகிறான் பிளவுண்ட கடல் தன் சகஜ நிலைக்கு திரும்பும்போது பயந்துவிடுகிறான் இதில் ஃபிர்அவ்ன் தோற்று விடுகிறான் இது ஃபிர்அவ்னுக்கான சோதனை!

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான். (குர்ஆன் 10:90) 

நான்காவது சோதனை

கியாம நாள் வரை உலகில் பிறக்கின்ற மக்கள் இந்த நிகழ்வை அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆன் மூலம் உணர்ந்து நபி மூஸா (அலை) அவர்கள் மூலம் நிகழ்த்தப்பட்ட இந்த கடல் பிளவுண்ட சம்பவத்தை அறிந்தும் அவரின் செயலை அல்லாஹ்வின் செயலுக்கு இணையாக கருதி தனக்கு இணை கற்பிக்கிறார்களா? என்று சோதிப்பது உலக மக்கள் அனைவருக்கும் எனக்கும் படிக்கின்ற உங்களுக்கும் ஏன் கேள்வி கேட்ட நமது அருமைச் சகோதரர் அபு முஆஸ் அவர்களுக்கும் உரிய சோதனையாகும் எனவே இங்கு இவ்வாறு இறைவனுக்கு நிகராக நபி மூஸா (அலை) அவர்களை சிறிது நேரம் கருதினாலும் அது இணைகற்பித்தல் என்ற வகையில் அமைந்துவிடும் ஆகவே இது இறைவனால் இறைவனது விதிப்படி மனிதர்களுக்குரிய சோதனை என்ற கருதி தவ்பா செய்து மீள்வதே நமக்குரிய நன்மையான காரியமாகும்.

முடிவுரை

  • நபி ஈஸா (அலை) அவர்கள் தொட்டிலில் குழந்தையாகவே பேசினார்,
  • அவர் பிறக்கும் போதே நபியாக இருந்தார்
  • குருடரையும் குஷ்டரோகிகளையும் குணப்படுத்தினார்
  • இறந்தவர்களை உயிர்பித்தார்

ஆனால் நம் இறுதி நபி

முஹம்மது (ஸல்) அவர்களோ

  • தமது 40 வயதில்தான் நுபுவத்து நபித்துவம் பெற்றார்
  • பிறக்கும்போதே நபியாக பிறக்கவில்லை மனிதராகவே இருந்தார்
  • தன்னுடன் இருந்த குருட்டு சஹாபியை குணப்படுத்த இயலவில்லை மேலும் அந்த பார்வையற்றவரிடம் ஒருமுறை கடுகடுத்தார் என்பதற்காக அல்லாஹ்விடம் எச்சரிக்கை பெற்றார்!
  • இறந்த எத்தனையோ சத்திய சஹாபாக்களில் (தம் தோழா்களில்) எவரையும் உயர்கொடுத்து எழச் செய்யவில்லை

ஆக இங்கு நபி ஈஸா (அலை) அவர்களை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆற்றலில் பின்தங்கியுள்ளாரே என்ற கருதினால் அது பாவத்தில் நம்மை இட்டுச் செல்லும்

உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம். (குர்ஆன் 17:55) 

(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான் என்று கூறுகிறார்கள். (குர்ஆன் 2:285)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தஜ்ஜாலும்

கொடியவன் தஜ்ஜால் ஒரு மனிதரை ஒரு முறை மட்டும் கொலை செய்வான் அவரை ஒரு முறை மட்டும் உயிர் கொடுத்து எழுப்புவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அறிவிப்பு கூறும் போது அந்த தெய்வீக சக்தி இறை ஆற்றல் தமக்கு கிடைக்கவில்லையே என்று எண்ணி கொடிய தஜ்ஜால் அல்லாஹ்வுக்கு இணையான சக்தியை பெற்றிருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருதியிருந்தால் நம் நிலை என்னவாகும்?

ஆக இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் இந்த செயல் இறைவனின் அனுமதி பெற்ற இறைவன் அவனுக்க விதித்த விதியின் அடிப்படையிலேயே நடக்கிறது என்று மறைமுகமாக கூறுகிறார் ஆகவே கொடியவன் தஜ்ஜால் மனித குலத்திற்கு ஒரு சோதனை என்பதை உணர்ந்து இறைவனுக்கு நிகராக அவன் ஆற்றல் பெற்றிருக்கவில்லை என்று கருதவே அந்த உயிர்பித்தல் நிகழ்வதாக நாம் கருத இயலும் இதோ அதற்கான ஆதாரம்

மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். அது மழை பொழியும், முளைப்பிக்குமாறு பூமிக்குக் கட்டளையிடுவான். அது (பயிர்களை)முளைப்பிக்கும்என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரழி), நூல்: முஸ்லிம் 5228)

பின்னர் மக்களிடம் வந்து (தன்னைக் கடவுள் என்று ஏற்குமாறு) அழைப்பு விடுவான். அவனை ஏற்க மக்கள் மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகி விடுவான். காலையில் அம்மக்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுவார்கள்என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரழி, நூல்: முஸ்லிம் 5228)

அல்லாஹ்வும் தஜ்ஜாலும் ஓர் படிப்பினை

அல்லாஹ் மக்களின் முன் தோன்றாமல் தன்னுடைய ஆற்றலை தனது படைப்பினங்களின் மூலம் வெளிப்படுத்தி மக்களை சோதித்து தன்னை இறைவன் என்பதை நிறூபித்து அன்றும் இன்றும் என்றும் நிலைத்து நிற்கிறான். ஆனால்

கொடியவன் தஜ்ஜால் மக்களின் முன் தாமாக தோன்றுவான் இறைவனிடமிருந்து பெற்ற பிச்சையின் காரணமாக ஆற்றல்களை வெளிப்படுத்துவான் அந்த இறை பிச்சையை தனது ஆற்றலாக அறிவிப்பான் ஆனாலும் மக்களில் மூமின்களான இறைவிசுவாசிகள் அவனை பின்பற்றமாட்டார்கள் மாறாக அல்லாஹ்வையே சார்ந்திருப்பார்கள் இங்கு தஜ்ஜால் எத்தனை உயிர்களை கொன்று உயிர்பித்தாலும் அவன் மரணிக்க பிறந்தவனே எனும்போது அல்லாஹ்வே உயர்ந்து நிற்கிறான்.

அனைத்து நபிமார்களும் பிறந்து, வளர்ந்து மரணிக்கக்கூடியவர்களே மீண்டும் இறையருளாள் மஹ்ஷரில் உயிர்கொடுத்து எழுப்பப்படுபவர்களே!

அனைத்து ஜின்களும், ஷைத்தான்களும் பிறந்து, வளர்ந்து மரணிக்கக்கூடியவர்களே மீண்டும் இறையருளாள் மஹ்ஷரில் உயிர்கொடுத்து எழுப்பப்படுபவர்களே!

அனைத்து மனிதர்களும் பிறந்து, வளர்ந்து மரணிக்கக்கூடியவர்களே மீண்டும் இறையருளாள் மஹ்ஷரில் உயிர்கொடுத்து எழுப்பப்படுபவர்களே!

அனைத்து மலக்குமார்களும் மரணிக்கக்கூடியவர்களே மீண்டும் இறையருளாள் மஹ்ஷரில் உயிர்கொடுத்து எழுப்பப்படுபவர்களே!

மரணிக்காத ஒருவன் அல்லாஹ் மட்டுமே ஆகவே அவனுக்கு நிகர் அவனே அவனுக்கு நிகர் ஆற்றல் எவனுக்கும் கிடையாது என்பதே முடிவுரையாகும்.

(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

(குர்ஆன் 112:1-4)

அனைத்து புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே

அல்ஹம்துலில்லாஹ்! சுபுஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்!

அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

அறிவிப்பு

அன்புள்ள கொள்கைச் சகோதர சகோதரிகளுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு

கடந்த 2020ம் ஆண்டு முகநூலில் காணப்பட்ட மார்க்க சச்சரவுகள், ஜமாஅத் சண்டைகள், மார்க்க அறிஞர்களின் மீது சுமத்தப்பட்ட களங்கங்கள் ஆகியவற்றினால் மனமுடைந்து உண்மை எது பொய் எது என ஆராய முடியாத நிலையில் முகநூலில் உளா வருவது எனது இம்மைக்கும் மறுமைக்கும் ஆபத்தானது என்ற ஐயத்தின் காரணமாக தற்காலிகமாக என்னை முகநூல், பிளாக் வளைத்தளம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த குர்ஆன் ஹதீஸ் மார்க்க பேனர்க்கள் பணிகளிலிருந்து தனித்திருந்தேன் மேலும் கொடிய கொரோனா காலகட்டத்தில் என்னை தனிமைப்படுத்திக் கொண்ட நான் மன விரக்தியின் காரணமாக மார்க்கம் சம்பந்தமான சிந்தனைகளிலிருந்தும் விலகியிருந்தேன்.

சிராஜ் அப்துல்லாஹ் ஆகிய நான் 2005ம் ஆண்டு முதல் இணையத்திலும் 2010ம் ஆண்டு முதல் முகநூலிலும் உளாவரும் மார்க்கம் சம்பந்தமான கட்டுரைகளை வரையும் சாதாரண பிளாக்கர் என்பதைத் தவிர சிறப்பாக கூற ஏதுமில்லை.

ஹாருத் மாருத் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் நிலையில் தவிர்க்க இயலாத மன உலைச்சலின் காரணமாக எனது சிந்தனைகள் கனமாகிவிட்டன அதன் காரணமாக 2020ம் ஆண்டுக்கு பிறகு வளைத்தளத்தில் எனது ஆக்கங்களில் சில பாதியிலேயே நின்று விட்டன.

ஆலிம் என்ற அந்தஸ்துக்கு என்னை உயர்த்திக் கொள்ள விருப்பப்பட்டும் அதற்குரிய வசதி வாய்ப்புகள் இருந்தும் மார்க்க கல்வியை கற்க இயலாத நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இருப்பினும் மார்க்கத்தை அழகாக்குவோரே இறைவனிடம் அழகானவர்கள் என்ற கூற்றுப்படி எனக்கு இறைவன் வழங்கிய சிந்தனைத் திறனைக் கொண்டு என்னையும் என் மார்க்கத்தையும் அழகாக்கி வருகிறேன். பல்வேறு மார்க்க அறிஞர்களின் அறிவுரைகள் சொற்பொழிவுகளின் அடிப்படையில் எனது கட்டுரைகளை வரைகிறேன் ஆகவே எனது ஆக்கங்களில் மார்க்கம் சம்பந்தமான குறைகள் காணப்படலாம் அவ்வாறு காணப்படின் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் திருத்திக் கொள்ள அறிவுறுத்தலாம் இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்வோம்.

முகநூலில் தற்போது தவ்ஹீத் சித்தாந்தங்களை சிதைக்கும் வகையில் சில இணைவைப்பு செயல்கள் அறங்கேற்றப்பட்டு வருவதை அறிந்து மன உளைச்சல் ஏற்பட்டது மேலும் சில முகநூல் நட்புக்களின் தொடர் அழைப்புகள் காரணமாக கனமான எனது சிந்தனையும் சற்று உறுகி இலேசாக்கியுள்ளதாக உணர முடிகிறது இறைவன் எதை நாடுகிறானோ அதையே விதியாக்குகிறான் என்ற அடிப்படையில் முகநூலில் மீண்டும் களம் காண்கிறேன். இன்ஷா அல்லாஹ் இறைநிராகரிப்பு மற்றும் ஷிர்க் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியில் என்னையும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும் மீண்டும் கட்டுரைகள் வரைவதற்கும் மார்க்க அறிவு சம்பந்தமான சிந்தனைகளை என்னில் தூண்டிவிடவும் நாடிவிட்டேன். உண்மையான நேர்மையான கருத்துக்களை உள்ளத்திலிருந்து வெளிக்கொண்டு வர துவா செய்யுங்கள் இறைவனின் மார்க்கத்தை அழகாக்குவோம்.

அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

மனிதனின் மனதை ஆட்டிப்படைக்கும் ஷைத்தான்கள்

அவுஜுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

மனிதனின் மனதை ஆட்டிப்படைக்கும் ஷைத்தான்கள்

(தொடர் -1)

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)

இஸ்லாத்தின் பார்வையில் ஆழ்மனதின் அதிசயங்கள் எனும் இந்த கட்டுரை மிக நீண்ட விளக்கம் கொண்டதாக காணப்படுவதால் இதனை பல தொகுப்புகளாக ஒவ்வொரு வாரமும் பதிப்பதாக அறிவித்தபடி இதோ மனிதனின் மனதை ஆட்டிப்படைக்கும் ஷைத்தான்கள் என்ற கட்டுரையை அதன் தொடர்ச்சியாக வரைந்துள்ளேன்.

இந்த கட்டுரையில் நான்கு வகையான செய்திகள் அடங்கியுள்ளது உண்ணிப்பாக கவனிக்க தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

மனிதனின் மனதை ஆட்டிப்படைக்கும் ஷைத்தான்கள்

  1. மனிதன்
  2. மனம்
  3. ஷைத்தான்
  4. ஆட்டிப்படைத்தல்

மனிதன் என்பவன் யார்?

மண்ணிலிருந்து படைக்கப்பட்டவன்தான் மனிதன். இதை இன்றைய நவீன விஞ்ஞான அறிவியல் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

ஆக்ஸிஜன், கரிமம், ஹைட்ரஜன், நைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கந்தகம், குளோரின், சோடியம், மக்னீசியம், இரும்பு, ஃவுளூரின், துத்தநாகம், சிலிக்கான், சிர்க்கோனியம், ருபீடியம், ,ஸ்ட்ரோன்ஷியம், புரோமின், ஈயம், நையோபியம், செப்பு, ,அலுமினியம், காட்மியம், போரான், சீரியம், பேரியம், ஆர்செனிக், வனேடியம், வெள்ளீயம், பாதரசம், செலீனியம், மாங்கனீசு, அயோடின், தங்கம், நிக்கல், மாலிப்டினம், ஜெர்மானியம், டைட்டேனியம், டெலூரியம், ஆண்ட்டிமனி, லித்தியம், குரோமியம், சீசியம், கோபால்ட், வெள்ளி, லாந்த்தனம், காலியம், யுரேனியம், பெரிலியம், ரேடியம், இற்றியம், பிஸ்மத், தாலியம், இண்டியம், ஸ்காண்டியம், டாண்ட்டலம், தோரியம், சமாரியம், டங்க்ஸ்டன் ஆகியவையாகும்.

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவையாகும் இதைத்தான் குர்ஆன் கீழ்க்கண்டவாறு மெய்ப்பிக்கிறது!

(நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன் என்றும், (குர்ஆன் 15:28)

சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான். (குர்ஆன் 55:14)

ஆகவே அல்லாஹ் முதல் மனிதராகிய நபி ஆதம் (அலை) அவர்களை தட்டினால் சப்தமுண்டாகும் அதாவது ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து படைக்கப்போவதாக கூறுகிறான்.

இதுதான் மனிதன் என்பதற்கான இலக்கணமாக என்னால் அறிவிக்க முடிகிறது.

மனம் (உள்ளம்) என்பது என்ன?

இறைவனின் படைப்புகளில் மனம் அல்லது உள்ளம் என்பது மிக இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. ஒரு படைப்பு தன்னிச்சையாக செயல்பட மனம் தேவைப்படுகிறது. உதாரணமாக ஒரு இயந்திர மனிதன் ரோபோவுக்கு மனம் கிடையாது ஆகவே அது எவ்வளவு நேர்த்தியாக செய்யப்பட்டாலும் சுயமாக சிந்திக்க இயலாத ஜடமேயாகும்.

மனம் எதற்கு பயன்படுகிறது?

ஒரு படைப்பினம் சிந்திக்க, இறை கட்டளைகளை ஏற்க, நிராகரிக்க, சுயமாக செயல்பட உதவுகிறது. மனம் என்னும் ஒரு கட்டமைப்பின் மூலம் மனிதன் உள்ளிட்ட படைப்பினங்களிடம் இறைவன் மறைமுகமாக பேசுகிறான் அவனது உள்ளத்தில் தீமைக்கு எதிராக அச்ச உணர்வு ஏற்படுவதன் மூலம் இறைவன் நம்முடன் குர்ஆன் எனும் தனது வார்த்தைகள் மூலமாக பேசுவதாக நாம் எண்ணலாம் ஆனால் அதை நாம் நிறூபிக்க இயலாது!

மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகி விட்டது – அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை – அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 6:115)

அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன; தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து – விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன – இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் – இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (குர்ஆன் 39:23)

ஷைத்தான் என்பவன் யார்?

ஷைத்தான் என்பதை குர்ஆன் படிக்கத் தெரியாத பல அறிவுமேதாவிகள் இறந்த மனிதரது ஆத்மா பேய் என்று குறிப்பிடுவார்கள் ஆனால் அது தவறான புரிதலாகும்.

இஸ்லாமிய கோட்பாடுகளின்படி ஷைத்தான் என்பது இறைவன் படைத்த ஒரு படைப்பினம் ஆகும்.

அந்த ஷைத்தான் எனும் படைப்பினம் மனித உள்ளங்களில்  வஸ்வஸா (وَسْوَسَة) எனும்  தீய எண்ணங்களை விதைத்து இறைவழியிலிருந்து மனிதனை தடுக்கும் செயலை செய்கிறது.

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. (குர்ஆன்4:120)

ஷைத்தானை இப்லிஸ் என்றும் அழைப்பதுண்டு இந்த படைப்பை இறைவனாகிய அல்லாஹ் நெருப்பிலிருந்து படைத்தான். ஆதாரம்

நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது? என்று அல்லாஹ் கேட்டான்; நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய் என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (குர்ஆன் 7:12)

ஆட்டிப்படைத்தல் என்றால் என்ன?

ஒரு குழுவாக வாழும் மக்களுக்கு மத்தியில் தலைவனாக ஆட்சிபுரிதல், ஆளுமை புரிதல் மற்றம் தான் நினைத்தது சரியோ தவறோ அக்குழுவினர் மீது திணித்தல் என்பது போன்ற அர்த்தத்தில் இதை உணரலாம்.

ஆகவே இங்கு மனிதனின் மனதை ஆட்டிப்படைக்கும் ஷைத்தான்கள் என்று கட்டரையின் தலைப்பாக வைத்திருப்பதன் உட்பொருள்

இறைவன் படைத்த மனிதனை அந்த இறைவனிடமிருந்து பிரித்து அந்த மனிதனது மனம் அல்லது உள்ளத்தில் தீய செயல்களை ஆசை வார்த்தைகளால் தூண்டி அவனை தன்பால் ஈர்த்து நரகப் படு குழிக்குள் தள்ள அலங்கரித்து அந்த மனிதனை இறைகட்டளைகளுக்கு கட்டுப்படாமல் நிர்மூலமாக்கும் செயலையே ஆட்டிப்படைத்தல் என்று வர்ணித்துள்ளோம்.

மனிதனது மனதில் ஷைத்தான் நுழைய முடியுமா?

முதல் மனிதர் ஆதம் (அலை) மற்றும் அவரது துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களின் உள்ளத்திலேயே இந்த ஷைத்தான் ஊடுருவி அவர்களை வழிகெடுத்தான் என்பதற்கு குர்ஆன் சாட்சியாக நிற்கிறது.

அல்லாஹ் தனது படைப்பினமாகிய ஆதம் மற்றும் ஹவ்வா ஆகிய இருவருக்கு வழங்கிய கண்ணியம் இதோ!

மேலும் நாம், ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள் என்று சொன்னோம். (குர்ஆன் 2:35)

அல்லாஹ் தனது படைப்பினமாகிய ஆதம் மற்றும் ஹவ்வா ஆகிய இருவரையும் ஷைத்தான் எனும் இப்லீஸ்-ன் குணங்களை எடுத்துக் கூறி அச்சமூட்டி எச்சரித்த ஆதாரம்!

அப்பொழுது ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனானான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர். (குர்ஆன் 20:117)

ஆதம் மற்றும் ஹவ்வா ஆகிய இருவரையும் ஷைத்தான் எனும் இப்லீஸ் தனது மாய வார்த்தைகளால் அவர்களின் மனம் (உள்ளத்தில்) விதைத்த நச்சு வார்த்தைகள்

ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா? என்று கேட்டான். (குர்ஆன் 20:120)

அல்லாஹ் யாரிடம் நேரிடையாக பேசி அறிவுரை கூறினானோ அத்தகைய சிறப்புமிக்க முதல் மனிதர் மற்றும் நபிமார்களில் முதல் இறைத்தூதர் ஆதம் மற்றும் ஹவ்வா ஆகியோரிடமே இப்லீஸ் எனும் ஷைத்தான் நுழைந்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்த நிலையில் நம்முடைய மனதில் உள்ளத்தில் நுழைய முடியாமல் இருக்க இயலுமா?

இதோ இப்லீஸ் பற்றி அல்லாஹ்வின் எச்சரிக்கை

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. (குர்ஆன்4:120)

இதோ இப்லீஸின் ஒப்புதல் வாக்குமூலம்

இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான். (குர்ஆன் 4:119)

குறிப்பு

ஷைத்தான் வருவான் மனிதனை வழிகெடுப்பான் என மிக மிக இலகுவாக சொல்லிவிட இயலும் ஆனால் இங்கு இவ்வாறு கதை கதையாக ஏன் எழுத வேண்டும் என்பதை நீங்கள் சிந்திக்க முற்படுவீர்கள் அதற்கான காரணம் எனது எழுத்துக்கள் உங்கள் உள்ளத்தில் ஆழமாக பதிய வேண்டும் என்பதே!

எனது உள்ளத்தில் எழும்பும் கேள்விகளுக்கு நான் ஆழமாக சிந்தித்து பதில் தேடுகிறேன் அந்த தேடலை தங்களிடம் கட்டுரையாக முன்வைக்கிறேன் இதனால் சிந்திக்காமல் பயன் அடையப்போவது நீங்கள்தான் ஆகவே நான் எவ்வாறு ஆழமாக சிந்திக்கிறோனோ அவ்வாறே தாங்களும் ஆழமாக அந்த கருத்துக்களில் முத்துக் குளித்து உங்கள் சிந்தனைகளை சீர்படுத்த வேண்டும் என்று பேரவா கொள்கிறேன்!

மனிதனின் மனதை ஆட்டிப்படைக்கும் ஷைத்தான்கள் எனும் கட்டுரையின் தொடர்ச்சியாக ஜின் ஷைத்தான்கள் மனித உள்ளதை எவ்வாறு வசப்படுத்துகிறது என்பதை (இன்ஷா அல்லாஹ்) எழுதப் போகிறேன். எனது அடுத்த கட்டுரையின் பெயர்!

ஜின் ஷைத்தான்கள் மனிதனை வசப்படுத்துமா?

(அடுத்த தொடர் – இன்ஷா அல்லாஹ்)

மேற்கண்ட கட்டுரையில் ஜின்கள் ஷைத்தான்கள் மனிதனின் மனதை மயக்கும் சூனியம் போன்ற வித்தைகளை எழுத உள்ளேன். அதில் மனிதனுக்கு தீங்கிழைக்க சூனியம் செய்ய இயலுமா? என்றும் விவரிக்க உள்ளேன்! இன்ஷா அல்லாஹ்!

எல்லாம் வல்ல ரஹ்மான் எனக்கும் உங்களுக்கும் நல்லருள் புரிய போதுமானவன்

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)

அல்ஹம்துலில்லாஹ்!  ஸுபுஹானல்லாஹ்!  அல்லாஹு அக்பர்!

அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

நாள்:29.06.2021

இஸ்லாம் கூறும் உளவியல் கோட்பாடு

அவுஜுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இஸ்லாத்தின் பார்வையில் ஆழ்மனதின் அதிசயங்கள்

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

நாம் இங்கு காண இருக்கும் செய்தி மனிதன் மற்றும் அவனது எண்ணங்கள் பற்றியதாகும். எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள் ஆம் அவ்வாறுதான் பிறக்கும் மனிதன் உருமாறுகிறான். ஒருவரிடம் நல்ல எண்ணங்கள் காணப்படும் போது அவன் நல்ல மனிதனாகவும் கெட்ட எண்ணங்கள் காணப்படும் போது தீய மனிதனாகவும் மாறிவிடுகிறான். இந்த இலக்கணம் அறிவு கொண்டு சிந்திக்கும் மனிதனுக்கு மட்டுமே பொருந்தும் மாறாக அறிவைக் கொண்டு சிந்திக்க இயலாத மூளை வளர்ச்சியற்றவர்களுக்கு பொருந்தாது.

மனம் என்பது என்ன?

மனம் என்பது உள்ளம் என்றும் பொருள்படும். ஒருவன் எதைப் பற்றி சிந்திக்கிறானோ? அந்த சிந்தனை நடைபெறும் இடம் மனம் அல்லது உள்ளம் என்று கூறலாம்.

குழந்தைகளும் மனமும்

நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்படும் குழந்தைகளின் உள்ளத்தில் நற்சிந்தனைகளும் போதனைகளும் விதைக்கப்படுகின்றன இதனால் அக்குழந்தைகள் சிந்திக்க முற்படும் முன் வளர்த்தவர்களை மனதில் நினைத்து செயல்படுகிறது

தீய ஒழுக்கத்துடன் வளர்க்கப்படும் குழந்தைகளின் உள்ளத்தில் தீய சிந்தனைகளான பொய் பேசுதல், திருடுதல், பொறாமை கொள்ளுதல், கோள்மூட்டுதல் போன்ற கேடுகெட்ட செயல்கள் விதைக்கப்படுகின்றன இதனால் அக்குழந்தைகள் எதையும் சிந்திக்க முற்படுவதில்லை மாறாக வளர்த்தவர்களை மனதில் நினைத்து செயல்படுகிறது.

ஆகவே, குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் அல்லது வளர்ப்போரது சொல், செயல், அங்கீகாரங்கள் அக்குழந்தையின் மனதில் சீனப் பெருஞ் சுவர்களாக நின்றுவிடுகிறது.

குழந்தைகள் வளர்ந்து பக்குவப்படும் போது அவைகள் அனுபவ ரீதியினால் இந்த எண்ணச் சுவர்கள் இடிந்து தரைமட்டமாகிறது. ஆகவே குழந்தைகளை வளர்ப்பதில் மிகுந்த கவனம் தேவை.

மனதில் நிகழும் மாற்றங்கள் என்ன?

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ 16 வயது பருவம் எய்தியவுடன் தனது எதிர் பாலினத்தைச் சேர்ந்த அழகு அல்லது உடல்வாகு ஆகியவற்றை காணும் போது கண்டதும் இனம் புரியாத காதல் தோன்றுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மனிதன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்கிறான் பின்னர் அவனுடைய எண்ணங்கள் கற்பனை உலகில் மிதக்க ஆரம்பிக்கிறது.

நாள்பட நாள்பட உடலில் சில ஜீன்களின் வேதி மாற்றத்தால் காதல் எனும் கற்பனை உலகம் காமமாக உருமாறிவிடுகிறது. நினைத்த நேரத்தில் காமம் கைக்கூடாத நிலையில் அவன் அவனைப் போன்ற தோழர்களின் நட்பில் இணைகிறான். வயது வரம்பு பாராமல் பிறரை எள்ளி நகையாடுதல், புகை பிடித்தல், மது போதை, ஆபாச வீடியோக்கள் மற்றும் சிற்றின்பம் போன்றவற்றில் ஈடுபட்டு அதன் விரக்தியில் சிக்கி சின்னாபின்னமாகிறான் அவனது இறுதி முடிவு தகாத நட்புகளுடன் ஒன்றிணைந்து பேரின்பம் காண விபச்சாரத்தில் ஈடுபடுகிறான். இவ்வாறாக மனித மனம் அவனை அழிவுப் பாதைக்குள் செலுத்திவிடுகிறது.

மனித மனதை ஆட்டிப்படைப்பது எது?

மனிதனின் மனதில் நவரச நாயகனாக கதாநாயகனாக வளம் வருபவன் ஒருவனே அவனே இப்லிஸ் எனும் ஷைத்தான்களின் தலைவனாவான்!

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. (குர்ஆன் 4:120)

இப்லிஸ் எனும் ஷைத்தான்களின் தலைவன் மிக எளிமையாக இன்றைய இளைய தலைமுறையினரிடம் சினிமா கதாநாயகர்கள் கதாநாயகிகள் வடிவத்தில் உள்ளத்தில் நுழைகிறான்.

நான் தம் அடிக்கிற ஸ்டைல பார்த்து தனலட்சுமி விரும்பிச்சு,

நான்தான் ரம் அடிக்கிற ஸ்டைல பார்த்து ராக்கம்மா விரும்பிச்சு

இப்படிப்பட்ட பாடல் வரிகளையும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆபாச நடனம் ஆகியவற்றின் மூலம் சிகரெட் குடிப்பதையும், மது அருந்துவதையும் காதல் வல்லுறவு கொள்வதையும், தகாத உடலுறவு கொள்வதையும் தவறில்லை என்ற கூறி மிக நேர்த்தியாக ஷைத்தான் இளைய தலைமுறையினரின் உள்ளத்தில் தாஜ்மஹால் கட்டிவிடுகிறான்.

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (குர்ஆன்: 5:91)

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் – நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம். (குர்ஆன்: 7:27)

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! மனம் அல்லது உள்ளம் என்றால் என்ன என்பதையும் மனதில் (உள்ளத்தில்) எவ்வாறு தீய எண்ணங்கள் தோன்றுகிறது என்பதையும் தெளிவாக்கி விட்டோம்.

அல்லாஹ் போதிக்கும் மனம் எனும் அழகிய பாடம்

மனம் அல்லது உள்ளம் பற்றிய கட்டமைப்பை நாம் விளக்கிக் கூறுவதைவிட படைத்த இறைவன் கூறும்போது அதன் சிறப்பு மிக அழகாக புரியும் ஆகவே  அல்லாஹ் எவ்வாறு தனது அருள்மறை குர்ஆனில் மனம் அல்லது உள்ளம் பற்றிய கட்டமைப்பை தெளிவு படத்தி பகுத்தறிவுப் பாடம் நடத்துகிறான் என்பதை காண்போம்

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (குர்ஆன்: 50:16)

இங்கு அல்லாஹ் மனிதனைப் படைத்தோம் என்று கூறும் போது அதனுடன் அவனது மனம் என்பதையும் கூறுகிறான் இங்கு நாம் சிந்திக்க வேண்டியது மனிதனை அவனது மனதுடன் இணைத்துப் பார்ப்பதேயாகும்.

மனம் என்பது மனிதனுக்கு மட்டும் உரியது அல்ல மாறாக

  • ஒளியினால் படைக்கப்பட்ட மலக்குமார்கள் எனும் வானவர்கள்,
  • சுட்ட களிமண்ணால் படைக்கப்பட்ட மனிதன்
  • நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின், ஷைத்தான்களின் தலைவன் இப்லீஸ்

போன்ற இனத்தை படைக்கும் போது அவைகளுக்குள் மனம் எனும் அம்சத்தை படைத்துள்ளான்

ஆதாரம் இதோ!

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள் என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். (குர்ஆன் 2:34)

மேற்கண்ட இறைவசனத்தில் அல்லாஹ் தன்னுடைய அழகான படைப்பாகிய ஆதம் எனும் முதல் மனிதருக்கு சிரம் பணிய கட்டளையிடுகிறான். வானவர்கள் கட்டுப்படுகிறார்கள் ஆனால் இப்லீஷ் சிரம்பணிய மறுத்துவிடுகிறான். மேலும் இதுபற்றி அல்லாஹ் விசாரிக்கும் போது

நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது? என்று அல்லாஹ் கேட்டான்; நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய் என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (குர்ஆன்: 7:12)

ஆகவே மனிதன், வானவர்கள் மற்றும் இப்லிஸ் எனும் ஷைத்தான்களின் தலைவன் ஆகிய ஒட்டு மொத்த படைப்பினங்களுக்கு அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கும் போது அவை தன்னிச்சையாக செயல்படுகிறது இங்கு தெளிவாக புரிகிறது ஆகவே அல்லாஹ் தனது மேற்கண்ட அடிமைகளை சுதந்திரமாகவும் தமக்கு கட்டுப்பட்டும் நடக்கவே அவர்களுக்குள் மனம் எனும் ஒரு செயல்பாட்டை படைத்துள்ளான்.

அல்லாஹ் அமைந்த அந்த மனம் எனும் பொக்கிஷம் அந்த படைப்பினங்களின் செயல்களை தீர்மானிக்கும் கருவியாக செயல்படுகிறது ஆகவே மனிதன், வானவர்கள் மற்றும் ஜின்களின் தலைவன் இப்லிஸ் ஆகியோர் தங்களின் செயல்களால் யார் சிறந்தவர்கள் என்பதை தீர்மானிக்கும் கருவியாகவே மனம் அமைகிறது.

மேற்கண்ட கட்டுரையின் அடுத்த கட்டமாக மனிதனின் மனதை ஆட்டிப்படைக்கும் ஷைத்தான்களின் தலைவன் இப்லிஸ் மற்றும் ஜின்கள் கட்டுரை தொடரும் (இன்ஷா அல்லாஹ்)

குறிப்பு

இஸ்லாத்தின் பார்வையில் ஆழ்மனதின் அதிசயங்கள்

எனும் இந்த கட்டுரை மிக நீண்ட விளக்கம் கொண்டதாக காணப்படுவதால் இதனை பல தொகுப்புகளாக ஒவ்வொரு வாரமும் பதிக்க உள்ளேன் (இன்ஷா அல்லாஹ்). ஆகவே இதன் தொடர்ச்சி சில வாரங்கள் இருக்கும். எனது நோக்கம் உங்கள் உள்ளத்தை தூய்மைப்படுத்தும் பணியே தவிர வேறில்லை. ஆகவே எனது ஆழ்மனதின் தேடல்களின் போது எனக்கு கிடைத்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன் இதன் மூலம் சிலரது வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள் வேதனைகள் சோதனைகளுக்கு தீர்வு கிடைக்கலாம் மேலும் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது என்பதையும் தீய பழக்கங்களால் சிக்கி தவிப்போர் அவைகளிடமிருந்து விடுபட வழி பிறக்கலாம்.

எல்லாம் வல்ல ரஹ்மான் எனக்கும் உங்களுக்கும் நல்லருள் புரிய போதுமானவன்

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)

அல்ஹம்துலில்லாஹ்!  ஸுபுஹானல்லாஹ்!  அல்லாஹு அக்பர்!

அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

நாள்:26.06.2021

யா நபி ஸலாம் அலைக்கும் பாடல் பாடலாமா?

அவுஜுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிா் ரஹ்மானிர் ரஹீம்!

அல்லாஹ்வை சிறுமைப்படுத்தி நபிகளார் புகழ் பாடுவதா?

யா நபி ஸலாம் அலைக்கும் பாடல் பாடலாமா?

அன்பிற்கினிய அன்பின் சகோதர சகோதரிகளுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு

முஸ்லிமாக வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் ஆணாக, பெண்ணாக அல்லது குழந்தையாக இருந்தாலுமே ஒருவருடைய பெயர் சொல்லிவிட்டால் உள்ளம் பூரித்துப் போய்விடும் அந்த ஒருவருடைய பெயர்தான் கத்தமுன் நபியாகிய முஹம்மது (ஸல்) ஆகும்.

முஹம்மது நபியை விரும்பாதவர் ஒரு முஸ்லிமாக இருக்க வாய்ப்பே இல்லை அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் அவருக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு அன்றும் இன்றும் என்றும் கியாம நாள் வரை நிலைத்தே நிற்கும் ஆதாரம் இதோ!

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (குர்ஆன் 94: 4)

எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும், அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பானவனாக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 14

மேற்கண்ட இறை வசனத்தில் அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயர்த்திவிட்டான் மேன்மைப்படுத்திவிட்டான் அவனை விட மேன்மைப்படுத்துபவன் உலகில் எவருமில்லை ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த மாதமும் இறந்த மாதமும் வந்துவிட்டால் அல்லாஹ்வை மிஞ்சும் அளவுக்கு ஹஜரத்மார்கள் தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்கின்றனர் மேலும் அந்த காத்தமுன் நபியின் பெயரால் வயிறு வளர்க்க ஸலாம் பாடல்களை ஆடிப்பாடி மக்களை முட்டாள்களாக ஆக்கிவிடுகின்றனர்.

நபிகள் நாயகத்தின் பெயரால் மீலாது விழா (நபிகளாரின் பிறந்த நாள்) கொண்டாடி அந்த நாட்களில் யா நபி ஸலாம் அலைக்கும் பாடல்களை பாடி மக்களிடம் நற்பெயரை சம்பாதிப்பது போன்று நடித்து பொருளாதாரத்தை சுரண்டி வாழ்கின்றனர்.

யா நபி ஸலாம் அலைக்கும் பாடலின் விளக்கம் என்ன?

மார்க்கத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் சொல்லிக்கொடுக்காத எந்த ஒன்றும் மார்க்கம் ஆகாது அவ்வாறு புதிதாக உருவாக்குவதை பித்அத் என்று கூறுவோம் அப்படிப்பட்ட ஒரு புதுமை எனும் பித்அத் செயல்தான் மீலாது விழா மற்றும் அதில் பாடப்படும் சுபுஹான மவ்லூது இதன் இறுதியில் பாடப்படும் ஸலாம் எனும் பாடல்தான் யா நபி ஸலாம் அலைக்க! இதோ இந்த பாடல் வரிகளில் உள்ள அநாச்சாரங்கள் மற்றும் அபத்தங்களை இங்கே வெளிச்சம் போட்டு காட்டுகிறோம்.

நபியே!  உங்கள் மீது சாந்தி அமைவதாக!

தூதரே! உங்கள் மீது சாந்தி அமைவதாக!

அன்பரே! உங்கள் மீது சாந்தி அமைவதாக!

பூரணச் சந்திரன் எங்களிடை பொலிவாய் அந்த நாள் உதித்தெழுந்த காரணத்தால் பிற முழுமதிகள் கவினார் ஒளியில் மங்கியதே!

மங்களம் தவழும் திருமுகமே! மாண்பர் தங்கள் எழிலைப் போல் இங்கிதமாக எதனையுமே என்றும் நாங்கள் கண்டதில்லை!

பகலில் ஒளிக்கும் சூரியன் தாங்களன்றோ! பவுர்ணமி நிலவும் தாங்களன்றோ! உகப்பிற்குரிய நல் ஒளிகளுக்கு எல்லாம் உன்னத ஒளியும் தாங்களன்றோ!

அஞ்சுக மருந்தும் தாங்களன்றோ! அரும் விலை உயர் பொருள் தாங்களன்றோ! நெஞ்சங்களில் படரும் இருளை அகற்றும் நித்திய விளக்கும் தாங்களன்றோ!

சீருயர் அன்புக்கு உரியவரே! சிறப்பாய் புகழப்பட்டவரே! ஈருலக காமிரு மணவரைக்கும் எழில் மணவாளர் ஆனவரே!

உறுதி செய்யப்பட்டவரே! உயரிய தலைமைக்கு உரியவரே! அருமை இரு கிப்லாக்களுக்கும் அன்புத் தலைவர் பெருந்தகையே!

கண்ணியம் கமழும் தாய் தந்தை கனிவாய் ஈன்ற கண்மணியே! புண்ணியமான உங்கள் திருமுகம் பார்த்தோர் புனிதப் பேறினை ஏய்துவரே!

தங்களின் தெளிந்த குளிர்ச்சி மிகும் தண்ணீர் தடாகம் மறுமையிலே! எங்களின் தாகம் தீர்த்து வைக்க ஏற்ற நல்லிடமாய் அமைந்திடுமே!

இழிவையுட்டும் சிறு பிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ! அழிவேற்படுத்தும் வன் பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ!

எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ! நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கி விடுபவர் தாங்களன்றோ!

நன்மையான செயல்களுக்கு நாளும் நேசர் ஆனவரே! உன்னதம் மிக்க பதவிகளை உயரச் செய்யும் உத்தமரே!

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித்து அருள்வீரோ! சின்னஞ் சிரிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிவீரோ!

அகமிய ரகசியம் அறிபவரே! ஆழிய மர்மம் அறிபவரே! அகமுணர்ந்து இறக்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே!

அனைத்து வகையிலும் அமைகின்ற அருள் நன்மைகளை பொழிந்த வண்ணம் அனைத்தும் வல்லோன் எம் இறைவா! அருள் புரிவாய் எங்கள் அனைவரின் பால்!

யா நபி ஸலாம் அலைக்கும் பாடல்களில் உள்ள இத்தனை ஷிர்க் வசனங்களை பாடிக்கொண்டு அல்லாஹ்வை சிறுமைப்படுத்தி நபிகளாரை பெருமைப்படுத்துவதா?

இதோ ஷிர்க்கான வரிகள் உங்கள் பார்வைக்கு!

பகலில் ஒளிக்கும் சூரியன் தாங்களன்றோ! பவுர்ணமி நிலவும் தாங்களன்றோ! உகப்பிற்குரிய நல் ஒளிகளுக்கு எல்லாம் உன்னத ஒளியும் தாங்களன்றோ!

கவிதை பாடும் கயவர்கள் பொய்யர்கள் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் தேவை? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூரியனாக இருக்கிறாராம், பவுர்ணமி நிலவாகவும் இருக்கிறாராம் மேலும் ஒளிகளுக்கெல்லாம் உன்னதமான ஒளியாக இருக்கிறார்களாம்! இவ்வாறு இந்த ஹஜரத்கள் கவிதை பாடுகிறார்களே அல்லாஹ் எந்த இடத்திலாவது இவ்வாறு நபிகளாரைப் பற்றி அறிவித்திருக்கிறானா? அல்லாஹ்வின் ஆற்றலுக்கு மேல் இந்த ஹஜரத்மார்கள் ஆற்றல் பெற்றுவிட்டனரா?

புண்ணியமான உங்கள் திருமுகம் பார்த்தோர் புனிதப் பேறினை ஏய்துவரே!

நபிகளாரின் திருமுகத்தை பார்த்தோர் புனிதப் பேற்றினை ஏய்துவதாக இந்த கவிபாடும் ஹஜரத்கள் கப்சாக்களை அள்ளி வீசுகிறார்கள் அப்படியானால் அபு ஜஹல் போன்ற கொடியவர்கள் நபிகளாரின் திருமுகத்தை தினம் தினம் பார்த்துள்ளனரே அவர்கள் கூட புனிதம் அடைவார்களா? சொர்க்கம் செல்வார்களா? நபிகளாரின் திருமுகத்தை தரிசித்தோர் சொர்க்கம் செல்வதாக இருந்தால் அன்றைய அனைத்து காட்டு அரபிகளும் முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த அனைத்து மக்கத்து காஃபிர்களும்தானே புனிதப் பேற்றினை ஏய்த இயலும் இது அறிவீனமாக தெரியவில்லையா?

தங்களின் தெளிந்த குளிர்ச்சி மிகும் தண்ணீர் தடாகம் மறுமையிலே! எங்களின் தாகம் தீர்த்து வைக்க ஏற்ற நல்லிடமாய் அமைந்திடுமே!

நபிகளாரின் மீது பொய்களை இட்டுக்கட்டும் இந்த தர்காஹ் ஹஜரத்கள் மறுமையில் கவ்ஸர் தடாகத்தில் நின்று தாகம் தீர்க்க நாடுகிறார்களாம் கிடைக்குமா அந்த பாக்கியம் இந்த அயோக்கியர்களுக்கு?

இழிவையுட்டும் சிறு பிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ! அழிவேற்படுத்தும் வன் பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ! எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ! நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கி விடுபவர் தாங்களன்றோ!உன்னதம் மிக்க பதவிகளை உயரச் செய்யும் உத்தமரே! என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித்து அருள்வீரோ!சின்னஞ் சிரிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிவீரோ!

அல்லாஹூ மேற்கண்ட அப்பட்டமான ஷிர்க்கு வரிகள் முற்றிலும் அல்லாஹ்வை மறந்து அல்லாஹ்வின் அடியார்களிடம் சரணாகதி அடையும் தர்காஹ் வாடைதான் வீசுகிறது!

கேடுகெட்ட ஹஜரத்மார்களே!

நபிகள் நாயகம் (ஸல்) எந்த காலகட்டத்திலாவது உங்கள் சிறிய பெரிய பாவங்களை மன்னிப்பதாக அறிவித்துள்ளாரா?

உங்கள் பாவங்களை தீங்குகளை அவர் அல்லாஹ்விடம் மறைப்பதாக அறிவித்துள்ளாரா?

உங்களுக்கு ஏற்படும் சோதனைகளை நபிகளார் (ஸல்) நீக்கிவிடுவதாக அறிவித்துள்ளரா?

உங்கள் பதவிகள் உயர்வுகள் தர்ஜாக்களை தாம் உயர்த்திவிடப்போவதாக எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்களா?

நீங்கள் செய்யும் சிறிய பெரிய பாவங்களை தாம் பொருத்துக் கொள்வதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்களா?

என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 108, 1291

மார்க்கத்தின் எச்சரிக்கைகள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை புகழ்கிறோம் என்ற பெயரில் அவரது பெயரை வைத்து வயிறு வளர்ப்பது மார்க்க குற்றமாகும் மேலும் இவ்வாறு செய்வது நரகத்தில் உங்களைச் சேர்க்கும் இதோ நபிகளார் மூலமாக அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு விடும் எச்சரிக்கை!

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) “உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே’ என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 18:110)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தம்மைப் பற்றி புகழ் பாடக்கூடாது என்றும் அதற்கு ஆதாரமாக தமக்கு முன்னர் வாழ்ந்த இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களை உதாரணம் காட்டும் அறிவிப்பும் கீழே கொடுக்கப்பட்பட்டுள்ளது!

“கிறித்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை (கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான் தான். (என்னைப் புகழ்வதாயிருந்தால்) “அல்லாஹ்வின் அடியார்’ என்றும் “அல்லாஹ்வின் தூதர்’ என்றும் கூறுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: புகாரி 3445, 6830

இதற்கு மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதாத சுபுஹான மவ்லூது, யா நபி ஸலாம் அலைக்க கவிதை பாடல்கள் மற்றும் கொண்டாடாத மீலாது நபி எனும் நபி பிறந்த நாள் ஆகியவற்றை நீங்கள் கொண்டாடினால் உங்களை விட அநியாயக்கார மனிதன் இந்த உலகில் எவருமில்லை என்பதாக அறிவித்துக் கொள்கிறோம்.

உண்மையை உள்ளவாரு எத்திவைப்பதே எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டளை ஆகவே அல்லாஹ்வை சாட்சியாக்கி இங்கு உண்மையை எத்திவைத்துவிட்டோம் நேர்வழியில் செலுத்துவது இறைவன் புறத்தில் தான் உள்ளது ஆகவே திருந்தி நபிவழியில் செயல்பட உங்களுக்கு இக்கட்டுரை ஒரு பாலமாக அமையட்டுமாக!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

ஸலாம்!

அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

ஹாருத் மாருத் கதை!

அவுஜுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹீா் ரஹ்மானிர் ரஹீம்!

ஹாருத் மாருத் கதை!

அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு

முன்னுரை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு கட்டுரையையும் தொகுத்து வழங்க இயலாத சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டு சிந்திக்க தவறி வாழ்ந்து வந்தேன் இறைவனின் கருணையால் சிறு முயற்சி சிரமம் எடுத்து இக்கட்டுரையை தமிழாக்கம் செய்துள்ளேன். காரணம் இஸ்லாத்தில் சூனியம் என்பதைக் கொண்டு பல்வேறு தரப்பு மக்களும் பல்வேறு சித்ததாந்தங்களில் மூழ்கி குழம்பியுள்ளனர்.

குழப்பங்களை நீக்குவது சிந்திப்பவர்களுக்குரிய பண்பாகும் ஆகவே மக்களுக்காக சிந்திக்க முற்பட்டு இந்த சூனியத்தைப் பற்றி தகவல் திரட்ட நாடினேன் வல்ல ரஹ்மான் பேருதவி புரிந்தான்.

இந்த கட்டுரையில் சூனியத்துடன் தொடர்புடைய குர்ஆனில் கூறப்பட்ட ஹாருத் மற்றும் மாருத் ஆகிய இருவரைப் பற்றிய தேடல் முக்கிய பணியாகும். ஆகவே ஹாருத் மற்றம் மாருத் ஆகிய இருவரைப் பற்றி மார்க்க அறிஞர்கள் எவ்வாற விளங்கி வைத்துள்ளனர் என்பதை தேடியதில் ஒரு மாபெரும் கட்டுக்கதை புணையப்பட்டுள்ளது கண்டு அதிர்ந்து போனேன்.

இங்கு தமிழாக்கம் செய்துள்ள அனைத்தும் அக்காலத்து மார்க்க அறிஞர்கள் கூறிய செய்திகாளக ஆங்கிலத்திலும் உருது பேசக் கூடிய மக்களிடமும் பரவலாக காணப்படுகிறது. எனவே உருது பயான்களை கேட்டும் ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை ஆராய்ந்தும் இந்த கட்டுரைகளை தமிழாக்கம் செய்துள்ளேன்.

முதல் கோணல் முழுவதும் கோணல் என்பது போன்று ஹாருத் மாருத் ஆகிய இருவரும் மலக்குமார்கள் என்ற பல மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுவது எனது பார்வையில் முதல் கோணலாகவே அமைந்துள்ளது.

மலக்குமார்கள் தூய்மையானவர்கள் அவர்களைக் கொண்டு இறைவன் பாவத்தை சூனியத்தை கற்றுத்தருவானா? என்கிற சந்தேகம் என்னில் எழுகிறது இதோ அவ்வாறு மலக்குமார்களாக ஹாருத் மாருத் இருக்க வாய்ப்பே இல்லை என்பதை கீழ்க்கண்ட தமிழாக்கம் மூலம் தெளிவாகிறது.

ஆதாரம்: நூல்: ஹயாத்துல் குலூப் – பாகம் 1 (அல்லமா முஹம்மத் பாகிர் அல் மஜ்லிஸ்)

ஹாருத் மற்றும் மாருத் யார்? இமாம்களின் கதைகள்

இமாம் முஹம்மத் அல் பாகிர் என்பவர் அறிவித்ததாக அலி இப்னு இப்ராஹீம் மற்றும் அய்யாஷி ஆகிய இரு அறிஞா்கள் தங்களது தஃப்சீர்களில் குறிப்பிட்டுள்ள ஹாருத் மாருத் பற்றிய தகவல்கள் உங்கள் பார்வைக்கு!

நபி சுலைமான் (அலை) அவர்கள் வாழ்ந்த காலத்தில் தினமும் காலையிலும் மாலையிலும் உலகில் வாழும் மக்களின் நன்மை தீமைகளை மதிப்பிட வானவர்கள் எனும் மலக்குமாா்கள் வருகை புரிந்தார்களாம்.

அச்சமயம், மக்களின் தீய நடவடிக்கைகளான இறைவனுக்கு கீழ்ப்படியாமை மற்றும் கெட்ட நடத்தைகளை கண்டு வானவர்கள் மிகுந்த  மன உலைச்சலில் தங்களுக்குள் மனிதர்களின் குறைகளை அலசிப் பேசிக்கொள்வார்களாம்.

ஒருநாள் வானவர்களின் குழு ஒன்று இறைவனை சந்தித்து அல்லாஹ்விடம், இரட்சகனே உன்னுடைய படைப்பினங்கள் செய்யும் நீ தடுத்த காரியங்களான இணைவைப்பு, அநியாயம், அக்கிரம அட்டூழியங்களைக் கண்டு உனக்கு முகம் சுழிப்பு ஏற்படவில்லையா? என்று வினவினார்களாம்.  மேலும் அல்லாஹ்விடம் முறையிட்டார்களாம்

யா அல்லாஹ்! நீ இந்த மனித பிறவிகளுக்கு நற்போதனைகளை அறிவிப்பாயாக! உனது கட்டுப்பாட்டில்தான் அகில உலகமும் சுழல்கிறது என்பதை அவர்கள் உணர வழிவகை செய்வாயாக என்றனராம்.

உடனே அல்லாஹ் இந்த மலக்குமார்களுக்கு தனது ஆற்றலை காட்டவும் தனது கட்டளைகளை இந்த உலகில் மக்கள் எவ்வாறு செயல்படத்திவருகிறார்கள் என்பதை தெளிவாக்கவும் நாடினானாம்.

அல்லாஹ் தனது ஆற்றலைக் கொண்டு மலக்குமார்களை எவ்வாறு எந்த ஒரு பாவத்தையும் செய்ய இயலாத வகையில் உருவாக்கினான் என்பதை நிறூபிக்க ஒரு ஏற்பாட்டை செய்தானாம். அதன்படி நடந்த சம்பவம் இதோ!

அல்லாஹ் வானவர்களை அழைத்து, உங்கள் சமூகத்தை சேர்ந்த இரண்டு மிகச்சிறந்த மலக்குகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் அவர்களை நான் புமிக்கு அனுப்ப நாடுகிறேன் மேலும் அவர்கள் ஆதம் நபியின் சந்ததியினரைப் போன்று உண்டு, உடுத்தி, பருகி சம்பாதித்து வாழும் வழிவகையை ஏற்படுத்தி விடுகிறேன் பிறகு அவர்கள் எனக்கு கீழ்ப்படிகிறார்களாக என்று சோதிக்கப் போகிறேன் என்று கூறினானாம்.

இந்த வானவர்களான மலக்குமார்களும் அல்லாஹ்வின் அறிவுரையை ஏற்று, ஹாருத் மாருத் என்ற இரண்டு வானவர்களை இறைவனின் சோதனைக்கு தேர்ந்தெடுத்தார்களாம். இந்த ஹாருத் மாருத் என்ற வானவர்கள்தான் மனிதர்களின் குற்றம் குறைகளை அதிகமாக துருவித் தேடி அவர்கள் மீது கோபம் கொண்ட இரண்டு மலக்குமார்களாம்.

அல்லாஹ் அந்த இரண்டு மலக்குமார்களான ஹாருத் மாருத் ஆகியோரிடம் கூறினானாம், இதோ நீங்க்ள இருவரும் ஆதமின் சந்ததியினருக்கு உள்ள அனைத்து அம்சங்களையும் பெற்றுவிட்டீர்கள் எனவே உலகில் மக்களோடு மக்களாக வாழ்ந்து வாருங்கள் என்று கூறி அவர்களுக்கு கீழ்க்கண்ட 4 கட்டளைகளை விதித்தானாம்.

  1. மது அருந்த கூடாது
  2. விபச்சாரம் செய்ய கூடாது
  3. கொலை செய்யக்கூடாது
  4. தனக்கு இணைவைக்க கூடாது

இந்த நான்கு கட்டளைகளையும் ஹாருத் மாருத் ஆகிய இருவருக்கும் கூறிவிட்டு அவர்களின் செயல்களை மலக்குமார்கள் எனும் வானவர்க்ள் பார்ப்பதற்காக அல்லாஹ் வானத்தின் அனைத்து திறைகளையும் அகற்றிவிட்டானாம்.

பிறகு, ஹாருத் மற்றும் மாருத் ஆகிய இரண்டு மலக்குமார்களும் இரண்டு அழகான மனிதர்களின் உருவத்தில் பாபிலோனிய நகரத்திற்கு பிரவேசிக்கச் செய்து சூனியக் கலைகளை மக்களுக்கு கற்றுத் தர ஏற்பாடு செய்தானாம்.

ஒருநாள் அந்த பாபிலோனிய பிரதேசத்தில் ஹாருத் மற்றும் மாருத் ஆகிய இருவரை நாடி திருமணமான ஒரு பேரழகி சூனியக் கலையை கற்க வந்தாளாம். அந்த பெண்ணைப் போன்ற நருமணம் கமழும் பேரழகி அந்த பட்டணத்தில் யாருமே கிடையாதாம் அவளுடைய அழகில் மயங்கிய இந்த ஹாருத் மற்றும் மாருத் ஆகிய இருவரும் தங்களை மெய் மறந்து காதல் வயப்பட ஆரம்பித்தனராம்.

ஆனால் அந்த இரண்டு மலக்குமார்களான ஹாருத் மற்றும் மாருத் இருவரும் இந்த செயல் தவறான வழிக்கு தங்களை இட்டுச் செல்லும் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்களாம் இருப்பினும் அவர்களின் சபலம் அவர்கள் இருவரையும் அந்த பேரழகியின் இல்லத்தை நாடிச் செய்ய தூண்டியதாம்.

அந்த இரு மலக்குமார்களும் அந்த பேரழகியின் இல்லத்தை நாடி தாங்கள் சூனியக் கலையை கற்றுத் தர விரும்புவதாகவும் அதற்கு பிரதிபலனாக அந்த இருவருடனும் அந்த பெண் தகாத அந்தரங்க உறவு கொள்ள வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்தனராம்.

அந்த பேரழகியான பெண் அந்த இருவருடனும் அந்தரங்க உறவை மேற்கொள்ள மறுத்து விட்டாளாம். ஆயினும் தன்னுடன் அந்தரங்க உறவை மேற்கொள்ள அந்த இரு மலக்குமார்களுக்கும் சில நிபந்தனைகளை அந்த பேரழகி விடுத்தாளாம் இதோ அந்த நிபந்தனைகள்:

எனது சமுதாயத்தவர்கள் வேற்று குலத்தாருடன் படுக்கையை பகிர அனுமதிப்பதில்லை ஆகவே நீங்கள் இருவரும் எனது குலத்தில் சேராத வரை தகாத உறவு சாத்தியமில்லை.

ஹாருத் மற்றும் மாருத் இதை  அறிந்தவுடன் அவளது குலத்தை பற்றி விசாரித்தனராம். அதற்கு அந்த பேரழகி கூறினாளாம்.

நான் ஒரு இறைவனைத்தான் வணங்குவேன், என் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்க கூடிய பெண் ஆவேன், எனது இறைவனின் சமூகத்தில்தான் விபச்சாரம் புரிய ஆசைப்படுகிறேன் எனது இறைவன் மிகவும் மகத்தானவன் அவன்தான் இவன் என்று ஒரு கற்சிலையை காண்பித்தாலாம்.

உடனே அந்த இரண்டு மலக்குமார்களான ஹாருத் மற்றும் மாருத் இருவரும் தங்களுக்கிடையே பேசிக் கொண்டனராம் அதாவது இவளுடன் தகாத உடலுறவு கொள்வதற்கு இரண்டு பாவங்களை நாம் செய்தாக வேண்டும்

  1. பல கடவுள் கொள்கையைான இணைவைப்பை ஏற்க வேண்டும்
  2. தகாத தடுக்கப்பட்ட விபச்சாரம் புரிய வேண்டும்

இந்த இரண்டு செயல்களை செய்தால் மட்டுமே உன்னுடன் உடலுறவு கொள்ள இயலும் என்றால் அது எங்களால் இயலாது இருப்பினும் உன் மீதான எங்கள் ஆசைகள் எங்களை தூண்டுகிறது என்று ஹாருத் மற்றும் மாருத் கூறிவிடவே அந்த பெண் மேலும் ஒரு நிபந்தனையை இவர்களிடம் விதித்தாளாம் அதாவது

  • மது அருந்தினால்தான் உடலுறவுக்கு சுகமானதாக அமையும்

ஆகவே மது அருந்தாமல் என்னுடன் உடலுறவில் நீங்கள் இருவரும் ஈடுபடுபது எனக்கு திருப்தி ஏற்படாது எங்கள் குல வழக்கப்படி மது அருந்திவிட்டுத்தான் விபச்சாரத்தில் ஈடுபட இயலும் என்றாலாம்.

மூன்றாவதாக கூறப்பட்ட மது அருந்தும் நிபந்தனையை கேட்டவுடன் இந்த ஹாருத் மற்றும் மாருத் ஆகிய இருவருக்கும் பேரதிர்ச்சி ஏற்பட்டதாம் உடனே அந்த பேரழியிடம் வினவினார்களாம்,

பேரழகியே உனது மூன்று நிபந்தனைகளான (மது அருந்துதல், சிலை வணங்குதல், விபச்சாரம் புரிதல்) எங்களுக்கு மிகப் பெரிய தலை வலியை ஏற்படுத்திவிட்டது இருப்பினும் உன் மீதுள்ள சபலம் எங்களை எங்கள் கோட்பாடுகளை விட்டும் திசை திருப்புகிறது என்று கூறினார்களாம்.

இவர்களின் மறுப்பை ஏற்காத அந்த பேரழகி இவர்கள் மீது விதித்த அந்த நிபந்தனைகள் நிறைவேறாத வரை தன்னை அர்ப்பணிப்பதாக இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிடவே வேறு வழியின்றி ஹாருத் மற்றும் மாருத் ஆகிய இருவரும் மது மட்டும் அருந்தி விபச்சாரம் புரிய சம்மதித்தனராம்.

இந்த இரண்டு மலக்குமார்களான ஹாருத் மற்றும் மாருத் ஆகியோர் அந்த பேரழகியின் அறைக்குள் நுழைந்தனராம் பின்னர் அந்த பேரழகி கொடுத்த மது போதையை அருந்தி தன் சுய நினைவை இழந்தனராம். பின்னர் சுய நினைவு இன்றி கற்சிலையை வணங்க முற்பட்டனராம்.

இதற்கிடையே ஒரு பிச்சைக்காரன் அந்த அறையில் திடீரென நுழைந்து இவர்களின் தீய செயல்களை கண்டு பாவமான காரியத்தை நீங்கள் மூவரும் செய்துக் கொண்டுள்ளீர்கள் என்று கடிந்துக் கொண்டு வெளியேறிவிட்டானாம்.

பிச்சைக்காரனின் செயலைக் கண்டு கோவமடைந்த பேரழகியோ ஹாருத் மற்றும் மாருத் ஆகிய இருவரிடமிருந்து விலகி நின்று அந்த பிச்சைக்காரனை கொலை செய்தால்தான் உங்களுடன் உறவு கொள்வேன் அவ்வாறு செய்ய தவறினால் என் குலத்தாரிடம் இவன் இங்கு நடந்த சம்பவங்களை கூறி நம் மூவரையும் அவமானப்படுத்திவிடுவான் என்று எச்சரித்தாளாம்.

பேரகியுடன் உடல் சுகத்தை விபச்சாரத்தைக் கொண்டும் நெருங்கியும் பிச்சைக்காரனால் அச் சுகம் தவறிப் போனதைக் கண்டு வெகுண்டெழுந்த அந்த ஹாருத் மற்றும் மாருத் ஆகிய இரு மலக்குமார்களும் ஓடிச் சென்று அந்த பிச்சைக்காரனை கொலை செய்துவிடடனராம்.

கொலை செய்துவிட்டு மீண்டும் பேரழகியின் வீட்டை அடைந்து அவளுடன் தகாத உறவை மேற்கொள்ள விரைந்தனராம் ஆனால் அந்த வீட்டினுள் அந்த பேரழகி தென்படவில்லையாம் உடனே ஹாருத் மாருத் ஆகிய இரு மலக்குமார்களும் தங்கள் தவறுகளை உணரத் துவங்கினராம் ஆனால் அவர்களின் ஆடைகள் அவிழ்ந்து விடவே இருவரும் முழு நிர்வாணிகளாக மாறி தங்கள் விரல்களை தங்கள் முகங்களில் வெட்கத்துடன் மூடிக் கொண்டனராம்.

அவர்களை நோக்கி அல்லாஹ் கூறினானாம்,

ஹாருத் மாருத் ஆகிய மலக்குமார்களான உங்கள் இருவரையும் நான் ஆதமின் சந்ததிகள் வாழும் உலகில் சிறிது காலத்திற்கு மட்டுமே அனுப்பி சோதித்தேன். ஆனால் நீங்கள் அச்சிறிய காலத்திற்குள்ளாகவே நான் பிறப்பித்த அனைத்து கட்டளைகளையும் மீறி பாவிகளாக மாறிவிட்டீர்கள். நீங்கள் இருவரும் என்னை அஞ்சவும் இல்லை என்னைக் கண்டு வெட்கப்படவுமில்லை.

நீங்கள் இருவரும் இந்த மனித குலத்தாரை விட பெரிய பாவிகளாக மாறிவிட்டீர்கள் இதுதான் உங்களது விதியாகும். என்னை வணங்குவதை நான் உங்கள் மீது விதியாக்கியுள்ளேன் எனினும் நான் நாடாத எவரும் என்னை வணங்குவதில்லை.

நான் என்னுடைய அருளை படைப்பினங்களை விட்டும் நீக்கிவிட்டால் படைப்பினங்களான நீங்கள் பாவிகளாக மாறி அனைத்து பாவங்களையும் செய்துக் கொள்வீர்கள் மேலும் நான் என்னுடைய அருளை படைப்பினங்கள் மீது இறக்கிவிட்டால் படைப்பினங்கள் என்னை முற்றிலும் வழிபட்டவர்களாகவே வாழ்ந்து மடிவீர்கள்.

இறுதியாக அல்லாஹ் அவர்களிடம் இரண்டு நிபந்தனைகளை விதித்தானாம் இதில் எதை தேர்ந்தெடுத்து பாவ மன்னிப்பு பெறுவது என்று விதியாக்கினானாம்.

  1. உலகத்தில் தண்டனை அனுபவிப்பது
  2. மறுமையில் தண்டனை அனுபவிப்பது

ஹாருத் மற்றும் மாருத் ஆகிய இருவரில் ஒரு மலக்கு கூறினாராம்,

இறைவா! நாங்கள் மனிதர்களாக வந்து பாவங்களை செய்தோம் ஆகவே மறுமையில் கிடைக்கும் தண்டனை ஏற்கிறோம்.

ஹாருத் மற்றும் மாருத் ஆகிய இருவரில் ஒரு மலக்கு கூறினாராம்,

இறைவா! மறுமையின் தண்டனை நிரந்தரமானது ஆகவே எங்களை இம்மையில் பாவத்திற்கு தண்டனை அளித்துவிட்டால் எங்கள் மரணத்துடன் எங்கள் தண்டனை நீங்கிவிடும்

இரண்டாவது மலக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று இறைவன் அவர்களுக்கு இம்மையில் தண்டனையை கொடுத்தானாம். ஹாருத் மாருத் ஆகியோரது தண்டனைகள் இதோ!

  1. ஆதமின் மக்களுக்கு (மனிதர்களுக்கு) சூனியத்தை கற்றுத் தருவது
  2. சூனியத்தை கற்றுத் தந்தவுடன் மறுமை நாள் வரை ஒரு கிணற்றில் நிர்வாணமாகவே தலைகீழாக தொங்குவது.

மேற்கண்ட செய்தி கீழ்க்கண்ட லிங்கில் ஆங்கிலத்தில் உள்ளது அதை தமிழாக்கம் செய்து உங்கள் பாா்வைக்கு சமா்பித்துள்ளேன்!

ஆதாரம்: ஹயாத்துல் குலூப் – பாகம் 1 (அல்லமா முஹம்மத் பாகிர் அல் மஜ்லிஸ்)

https://www.al-islam.org/hayat-al-qulub-vol-1-allamah-muhammad-baqir-al-majlisi/account-harut-and-marut

குறிப்பு

அடுத்த பதிப்பில் ஹாருத் மாருத் ஆகிய இருவரும் மலக்குகளா? என்பதை பற்றி ஆய்வு செய்து கட்டுரை வரைவோம் (இன்ஷா அல்லாஹ்)

தொடரும்

அடுத்த கட்டுரை பதிப்பு

ஹாருத் மாருத் மலக்குகளா?

முகநூல் டிப்ஸ்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதர சகோதரிகளே! நாம் முகநூலில் சில பதிவுகளை ஆவேசத்துடன் எழுதிவிடுவோம் பின்னர் அவ்வாறு பதிவிட்ட பதிவுகள் பற்றி எச்சரிக்கைகளை கண்டவுடன் பயத்தில் உறைந்துவிடுவோம் அந்த கவலை இனி வேண்டாம் இதோ உங்களுக்கு எளிய முறையில் பயத்தை போக்குகிறேன்.

முகநூலில் இரண்டு வகையான வழிகளில் உங்கள் மீது பிரச்சினை வரலாம்

1) உங்கள் பதிவுகளை Search செய்து பார்த்து குற்றம் கண்டுபிடிக்கலாம்

2) உங்கள் பழைய பதிவுகளை நேரடியாகவே பார்த்து குற்றம் பிடிக்காலாம்

எனவே இங்கு இரண்டு வகையிலிருந்தும் தற்காத்துக் கொள்ள சில டிப்ஸ்களை இங்கு வழங்குகிறேன்!

பாடம் 1

டிப்ஸ் 1

முகநூலில் நீங்கள் பதித்துள்ள பதிவுகளை தேடாமல் இருக்க முகநூல் பக்க Search Engine Data-வை அழித்தல் தொடர்பாக

1

உங்கள் முகநூலின் மேல் பக்க மூளையில் தலைகீழாக ஒரு முக்கோன வடிவம் உள்ளது அதை கிளிக் செய்யவும்! பின்னர் கீழ்க்கண்டவாறு ஒரு பாக்ஸ் அறிவிப்பு தோன்றும் அதில் Activity log என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்!

2.jpg

இதை கிளிக் செய்தவுடன் கீழ்க்கண்ட பகுதி தென்படும்

3

இதில் வட்டமிடப்பட்டுள்ள MORE என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் பின்னர் கீழ்க்கண்ட பகுதி தோன்றும் அதில் வட்டமிடப்பட்டுள்ள Search Historyயினை கிளிக் செய்யவும்!

4.jpg

கீழ்க்கண்ட பகுதியில் உங்கள் பதிவுகளை யாரும் தேடி அதில் உள்ள தவறான கருத்துக்களை நோட்டமிடாமல் இருக்க Clear Searches என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் முகநூலில் நீங்கள் பதிவு செய்த டேட்டாக்களை யாராலும் தேடி கண்டுபிடிக்க இயலாது!

5.jpg

பாடம் 2

டிப்ஸ் 2

உங்கள் பழைய பதிவுகளை டெலிட் செய்ய

முகநூல் பக்கத்தில் நீங்கள் பதித்த சில தவறான பதிவுகள் அல்லது தேவையில்லாத பதிவுகளை ஒரே வீச்சில் டெலிட் செய்ய (அழிக்க) சில டிப்ஸ்கள்!

உங்கள் முகநூல் பக்கத்தில் Profile Page போகவும்

6.jpg

மேலே உள்ள வட்டமிடப்பட்ட பகுதியில் இருக்கும் Manage Posts-ஐ கிளிக் செய்யதவுடன் Posted by பகுதியில் YOU என்று உள்ளதை கிளிக் செய்தால் நீங்கள் பதிவேற்றம் செய்த அனைத்து POSTகளும் வரும் பின்னர் November 2019 ஐ கிளிக் செய்தால் 29 முதல் 50 வரையிலான POSTகள் Select ஆகும்

7.jpg

பின்னர் அதே பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள NEXT பட்டனை அழுத்தவும்

8.jpg

NEXT என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் கீழ்க்கண்ட டையலாக் பாக்ஸ் வரும்

9.jpg

இதில் டெலிட் போஸ்ட் என்று கிளிக் செய்து Done கொடுத்தால் நிரந்தரமாக உங்கள் 50 வரையிலான BULK பதிவுகள் அழிக்கப்பட்டுவிடும்!

பயப்படாமல் மீ்ண்டும் புதிய பதிவுகளை பதிவிடலாம்!

 

கிருஸ்தவ மதத்தை இயேசு உருவாக்கினாரா?

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

கிருஸ்தவ மதத்தை இயேசு உருவாக்கினாரா?

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு

(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)

CHRIS.jpg

சகோதரர் Dr Mohamed Musthafa அவர்களின் கேள்வி

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக.,
சகோதரா உங்கள் இந்த கட்டுரையில் எனக்கு சில சந்தேகங்கள்,
ஈஸாவின் (pbuh) விண்ணேற்றத்திற்கு பிறகு மக்கள் தாமாக கிறிஸ்தவத்தை உறுவாக்கிக் கொண்டார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள்.,
நான் கிறிஸ்தவம் தெரிந்தே வேண்டும் என்றே திட்டமிட்டு சிலரால் உறுவாக்கப்பட்டது என்றே கருதுகிறேன்.,
மேலும் திருவெளிப்பாடு நூல் ஒரு இரகசிய சுற்றறிக்கை என்றே நான் கருதுகிறேன்., அது குறித்து நாம் பின்னால் பேசலாம்.,
நீங்கள் திருவெளிப்பாட்டின் ஆசிரியர் யோவன், திருமுழுக்கு யோவான் (யஹ்யா(pbuh)) என்ற முடிவிற்கு எப்படி வந்தீர்கள் சகோதரா.,
திருமுழுக்கு யோவான் இயேசுவின் விண்ணேற்றத்திற்கு முன்பே கொல்லப்படு விட்டதாக பைபிள் சொல்கிறது.,
மேலும் இந்நூலை இயேசுவின் சீடர்களில் ஒருவரான யோவான் தான் எழுதினார் என்று நீண்டு காலமாக திருச்சபை சொல்லி வந்தாலும் இதை எழுதிய யோவான் அவர் இல்லை என்று இவர் மூப்பர்களில் ஒருவரான வேறொரு யோவான் என்பதுமே விவிலிய ஆய்வாளர்களின் கருத்து.

பதில்

சகோதரர் DR MOHAMED MUSTHAFA அவர்களின் கேள்வி பல கேள்விகளின் தொகுப்பாக உள்ளது எனவே இந்த கேள்விகள் ஒவ்வொன்றையும் மிகவும் உண்ணிப்பாக பதிலளிக்க வேண்டியதாக அமைகிறது!

கேள்வி எண் 1:

ஈஸாவின் (pbuh) விண்ணேற்றத்திற்கு பிறகு மக்கள் தாமாக கிறிஸ்தவத்தை உறுவாக்கிக் கொண்டார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள்., நான் கிறிஸ்தவம் தெரிந்தே வேண்டும் என்றே திட்டமிட்டு சிலரால் உறுவாக்கப்பட்டது என்றே கருதுகிறேன்., (DR MOHAMED MUSTHAFA)

பதில்:

சகோதரரே! நாம் சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் இருக்கின்றோம் எனவே நாம் இஸ்லாத்திற்கு தொடர்புடைய சித்தாந்தங்களை அதன் உண்மையான வடிவில் ஆராய்ச்சி செய்வதன் மூலமாக மட்டுமே சத்தியத்தை உணர இயலும் ஆகவே இஸ்லாத்தின் சத்தியத்தை உரசுவதற்கு அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனும் நபிகளாரின் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் அடங்கிய ஹதீஸ்களும் ஆதாரமாக எடுத்துக் கொள்வது இன்றி யமையாததாக ஆகிறது.

இங்கு கிருஸ்தவ மதத்தை பற்றி நாம் சிந்திக்கும் போது அந்த மதத்தை ஏதோ இயேசு கிருஸ்து உருவாக்கித் தந்ததாகவும் அவர் கிருஸ்தவ மதத்தை பரப்ப வந்த இறைத்தூதராகவும் கருதினால் அது நம்முடைய பலவீனமான கருத்தாக அமையும் காரணம் இயேசு கிருஸ்து என்பவர் இஸ்லாத்திற்கு அறிமுகமாகாத நபர் அல்ல மாறாக பிறக்கும் போதே இறைத்தூதர் எனும் நபியாக பிறந்தவர் இந்த பாக்கியம் அனைத்து நபிமார்களுக்கும் கிடைப்பதில்லை மாறாக இறைவன் தேர்ந்தெடுத்த ஒரு சிலருக்கே இந்த பாக்கியம் கிடைக்கிறது.

இங்கு இந்த கேள்விக்கு நாம் விடையை கொடுக்கும் போது இயேசு என்றே எழுத நாடுகிறோம் அப்போதுதான் கிருஸ்தவர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றி முறையாக அறிய முடியும் மாறாக நாம் நபி ஈஸா (அலை) என்று எழுதுவோமானால் இக்கேள்விக்கான பதிலை படிக்கும் கிருஸ்தவ சகோதரர்கள் இஸ்லாத்தின் ஏதோ இறைத்தூதர் பற்றிய கருத்து என்று எண்ணிக் கொள்ளலாம் எனவே நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி கிருஸ்தவர்களின் பாணியில் இயேசு கிருஸ்து என்றே எழுதுகிறேன் இதை உள்ளத்தில் நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) என்று படித்துக் கொள்ளுங்கள்!

இயேசு என்பவர் யார்?

இயேசு என்பவர் கிருஸ்தவ மார்க்கத்திற்காக இந்த உலகில் பிறக்கவில்லை மாறாக இஸ்ரவேலர்களான யூதர்களின் தீர்க்கதரிசியாக மோஸஸ் எனப்படும் மோஸேவின் சத்திய பிரச்சாரத்தை எத்திவைக்க பிறந்தார்.

இயேசுவின் பிறப்பு எங்கு நிகழ்ந்தது?

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, (புதிய ஏற்பாடு மத்தேயு நற்செய்தி அதிகாரங்கள் 2:1)

இயேசுவின் பிறப்பு பற்றி பைபிள் கூறும் ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறந்ததாக பைபிள் கூறுகிறது. இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் மூன்று அவையாவன:

  • யூதேயாவா நாடு
  • ஏரோது அரசன் காலம்
  • பெத்லகேம் சிற்றூர்

யூதேயாவா நாடு

எந்த ஒரு மனிதரின் பிறப்பு பற்றி அறியும் முன் அவன் பிறந்த இடத்தின் வரலாறு படிப்பது அவசியமாகிறது எனவே இங்கு இயேசு என்பவர் பிறந்ததாக பைபிள் குறிப்பிடும் நாடாகிய யூதேயாவா பற்றிய வரலாறு முதலில் ஆய்வு செய்ய எடுத்துக் கொள்கிறோம்.

யூதேயாவா நாட்டை ஆங்கிலத்தில் JUDAH என்று அழைப்பார்கள் அதன் அரசாட்சியை KINGDOM OF JUDAH என்று கூறுவர். இந்த நாட்டின் தலைநகரம்தான் சர்ச்சைக்குரிய ஜெருசலேம் எனும் நகரமாகும்.

இந்த யூதேயாவா நாட்டை ஆண்ட முதல் அரசன் சாவோல் எனப்படும் மன்னராவார் இவருக்கு தீர்க்கதரிசி சாமுவேல் என்பவர் ஆட்சி அதிகாரம் அமைத்துக் கொடுத்ததாக பைபிள் கூறுகிறது. இந்த சாவோல் மன்னருக்கு பின் டேவிட் (நபி தாவுத் (அலை) மற்றும் அவரது மகனார் சாலமோன் (நபி சுலைமான் (அலை) இந்த நகரத்தை ஆண்டனர். இதோ ஆதாரங்கள்

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? “எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்என்று தமது நபியிடம் கூறினர். “உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா?” என்று அவர் கேட்டார். “எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும்போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது?” என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டபோது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன். (குர்ஆன் 2:246)

தீர்க்கதரிசி மோஸஸ் எனும் நபி மூஸா (அலை) அவர்களுக்குப் பின் இஸ்ரவேலர்கள் ஒரு சமுதாயமாக வாழந்து வந்தனர் என்றும் அவர்களுக்கு நேர்வழிகாட்ட ஒரு தீர்க்கதரிசியை இறைவன் அருளினான் என்றும் பைபிள் கூறுவதை குர்ஆனும் மெய்ப்படுத்துகிறது இதைத்தன் மேலே உள்ள குர்ஆன் வசனம் 2:246 கூறுகிறது. மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் இஸ்ரவேலர்களைப் பற்றி அல்லாஹ் கூறும் போது தமது நபியிடம் கூறினர் என்று வர்ணிக்கிறான் ஆனால் இங்கு அந்த நபியின் பெயரை அல்லாஹ் குறிப்பிடவில்லை இது மறைவான ஞானத்தின் திறவுகோளாக அதாவது முந்தைய வேதங்களை மெய்ப்படுத்துவதற்கான ஆதாரமாக அல்லாஹ் விட்டுவைத்துள்ளான் என்றே நாம் அறிய முடிகிறது. (ஸுபுஹானல்லாஹ்)

தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். “எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லைஎன்று அவர்கள் கூறினர். “உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வியையும், உடலையும் (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்என்று அவர் கூறினார். (குர்ஆன் 2:247)

மேற்கண்ட வசனத்தில் இஸ்ரவேலர்களின் கோரிக்கையை ஏற்ற இறைவன் அவர்களுக்கு தாலூத் என்ற அரசனை நியமித்ததாக வர்ணிக்கிறான் இந்த தாலூத் என்பவர்தான் அந்த சாவோல் என்று அறிய முடிகிறது அதற்கான ஆதாரங்கள் இதோ!

அரபு மொழியில் உள்ள தாலூத் என்ற பெயருக்கு ”தால்” என்று  பொருள்படுவதாகவும் இந்த தால் என்கிற வார்த்தை “துல்” என்கிற அடைமொழியிலிருந்து பிறந்ததாகவும் துல் என்ற வார்த்தையே மறுவி சாவோல் என்று வந்ததாக அறிய முடிகிறது.

அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மனநிறைவு இருக்கும். மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதில் உங்களுக்கு தக்க சான்று உள்ளதுஎன்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். (குர்ஆன் 2:248)

படைகளுடன் தாலூத் புறப்பட்டபோதுஅல்லாஹ் உங்களை ஒரு நதியின் மூலம் சோதிக்கவுள்ளான். அதில் அருந்துபவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர். அதை உட்கொள்ளாதவர் என்னைச் சேர்ந்தவர்; கையளவு அருந்தியவர் தவிரஎன்றார். அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) அதில் அருந்தினார்கள். அவரும், அவருடனிருந்த நம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்தபோதுஜாலூத் மற்றும் அவனது படையினருடன் (போரிட) இன்று எங்களுக்கு எந்த வலிமையும் இல்லைஎன்றனர். அல்லாஹ்வைச் சந்திக்கவுள்ளோம் என்று நம்பியோர், “எத்தனையோ சிறு படைகள், பெரும் படைகள் பலவற்றை அல்லாஹ்வின் விருப்பப்படி வென்றுள்ளன. சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்என்றனர். (குர்ஆன் 2:249)

ஜாலூத்தையும், அவனது படையினரையும் அவர்கள் களத்தில் சந்தித்தபோதுஎங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!” என்றனர். (குர்ஆன் 2:250)

 இந்த சாவோல் என்கிய மன்னர் தாலூத் பற்றிய நபிமொழிகளை ஆராய்ச்சி செய்யும் போது கீழ்க்கண்ட செய்தி நமக்கு விருந்தாக அமைகிறது!

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
பத்ருப் போரில் பங்கெடுத்த நபித்தோழர்கள் என்னிடம் கூறினார்கள்: தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்றவர்களான முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலான அவர்களின் தோழர்களின் எண்ணிக்கையில் நாங்கள் இருந்தோம்.  மேலும், பராஉ(ரலி) கூறினார்:
அல்லாஹ்வின் மீதாணையாக! தாலூத் அவர்களுடன் இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை. (ஆதாரம் நூல்:புகாரி: 3957)

இந்த சாவோல் எனப்படும் மன்னர் தாலூத் அனுப்பிய படையில் தீர்க்கதரிசி டேவிட் அதாவது நபி தாவூத் (அலை) இருந்தார்கள் இவரே அந்த கோலியாத் எனும் ஜாலூத்தை போரில் எதிர்கொண்டு வென்று அவனை கொன்றார்கள் இதற்கு பிரதி உபகாரமாக தாவீது அதாவது நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஆட்சி அதிகாரம் வழங்கி அவருக்கு மகத்தான கண்ணியத்தை அளித்தான் அதற்கான ஆதாரம் இதோ!

அவர்களை அல்லாஹ்வின் விருப்பப்படி (தாலூத் படையினர்) தோற்கடித்தனர். தாவூத், ஜாலூத்தைக் கொன்றார். அவருக்கு அல்லாஹ் அதிகாரத்தையும், ஞானத்தையும் வழங்கினான். தான் நாடியவற்றை அவருக்குக் கற்றுக் கொடுத்தான். மனிதர்களில் சிலர் மூலம் வேறு சிலரை அல்லாஹ் தடுக்காதிருந்தால் பூமி சீர்கெட்டிருக்கும். எனினும் அகிலத்தார் மீது அல்லாஹ் அருளுடையவன். (குர்ஆன் 2:251)

தாவீது மகன் சாலமோன்

மன்னரும் தீர்க்கதரிசியுமாகிய தாவீது எனும் நபி தாவூத் (அலை) அவர்களின் அன்பு மகனாக மன்னரும் தீர்க்கதரிசியுமாகிய சாலமோன் பிறந்தார் இதைப் பற்றி குர்ஆன் வர்ணிக்கும் போது இதோ

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளன. இதுவே தெளிவான அருட்கொடையாகும்” என்று அவர் கூறினார். (குர்ஆன் 27:16)

தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். “நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்என்று அவ்விருவரும் கூறினர். (குர்ஆன் 27:15)

தாவீதின் குமாரர் இயேசு

இயேசு கிருஸ்துவைப் பற்றி பைபிளின் பல பாகங்கள் விவரிக்கும் போது அவரை தாவீதின் குமாரராகவே கூறுகிறது (குமாரர் மகனல்ல மாறாக வழி வழியாக வந்தவர் வாரிசு என்ற அர்த்தமாக பொருள்படுகிறது ஆக இயேசு என்பவர் தேவனுடைய குமாரர் இல்லை மனுஷ குமாரர் என்பதே இதன் பொருளாகும்) இதற்கு ஆதாரமாக திகழும் ஒரு வசனம் உங்கள் பார்வைக்கு இதோ!

 ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய  வம்ச வரலாறு (மத்தேயு 1:1)

மேற்கண்ட பைபிள் வசனத்தை குர்ஆனும் மெய்ப்படுத்துகிறது இதோ ஆதாரம்

அவருக்கு இஸ்ஹாக்கையும், யாகூபையும் வழங்கினோம். அனைவருக்கும் நேர்வழி காட்டினோம். அதற்கு முன் நூஹுக்கும், அவரது வழித்தோன்றல்களில் தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ், இஸ்மாயீல், அல்யஸஃ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். அனைவரும் நல்லோர்கள். அனைவரையும் அகிலத்தாரை விடச் சிறப்பித்தோம்.  (குர்ஆன்6:84,85,86)

ஆகவே இஸ்ரவேலர்களின் முதல் மன்னராகிய சாவோல் (தாலூத்), அவருக்குப்பின் மன்னர் தாவீது (நபி தாவூத் (அலை) அவருக்குப் பின் மன்னர் சாலமோன் (நபி சுலைமான் (அலை) ஆகியோர் ஆட்சி செய்த பகுதிக்கு யூதேயாவா என்று பெயர் கூறப்படுகிறது.

இந்த யூதேயாவா எனப்படும் நாட்டை ஆண்ட மன்னர்களுல் ஏரோது மன்னனும் ஒருவனாவான் இவன் கொடுங்கோலன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறான் எனவே இந்த ஏரோது மன்னனின் ஆட்சிக்கு கீழ் இருந்த யூதேயாவா எனப்படும் நாட்டின் ஒரு கிராமமே பெத்லஹேம் எனப்படும் பகுதியாகும் இந்த பகுதியில் இயேசு பிறந்ததாக வரலாறு கூறுகிறது.

ஜெருசலேம் நகரின் கிழக்குப்பகுதியில் பெத்லஹேம் நகரம் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் இதோ குர்ஆன் இதைப்பற்றி கூறும் போது

இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார். (குர்ஆன் 19:16)

இங்கு பெத்லஹேம் என்ற நகரத்தை பற்றி குர்ஆன் குறிப்பிடவில்லை எனவே நாம் இந்த இடத்தில்தான் இயேசு பிறந்தார் என்ற அறுதியிட்டுக் கூற இயலாது எனினும் பைபிளின் கூற்றுப்படி பெத்லஹேம் என்பதை அனுமானமாக வேண்டுமானால் நாம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

இயேசு எந்த சமுதாயத்திற்கு வந்தார்?

இயேசு கிருஸ்து கிருஸ்தவர்களுக்கு இறைவனின் தூதுச் செய்தியை எத்திவைக்கவே வந்தார் என்ற தவறான வாதத்தில் கிருஸ்தவ சகோதர சகோதரிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது” (என்றார்) (குர்ஆன் 3:49)

கிருஸ்தவம் என்றால் என்ன?

இயேசு கிருஸ்து என்ற பெயரில் உள்ள கிருஸ்து என்ற சொல்லிலிருந்து பிறந்த பெயர்தான் கிருஸ்தவம் அதாவது கிருஸ்துவை பின்பற்றக்கூடிய சமூகம் என்ற பொருள்படுகிறது.

கிருஸ்து என்றால் சொல் ஹீப்ரு மொழியிலிருந்து பிறந்த சொல்லாகும் இதற்கான பொருள் அபிஷேகம் அல்லது திருமுழுக்கு என்பதாகும் அதாவது மாட்சிமை பொருந்திய கண்ணியமிக்க ஒன்று என்பதாக பொருள்படுகிறது.

ஆதி கால எகிப்தியர்கள் தங்களுடைய மன்னர்கள் மரணித்தவுடன் அவர்களது உடலை பதப்படுத்தி அவற்றை பிரமிடுகளில் மம்மீஸ்களாக வைப்பது வழக்கம் அவ்வாறு வைப்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் எண்ணெய்க்கு கிருஸ்ட் (KRST) என்று பெயர்.

அதாவது அபிஷேகத்திற்குரிய எண்ணெய் என்று கூறுவர். இந்த எண்ணெய் நீண்ட காலம் ஒரு உடலை பதப்படுத்தி வைக்கும் ஆற்றலுடையதாகும் எனவே கிருஸ்ட் என்ற வார்த்தை மருவி கிருஸ்து என்ற வார்த்தையாகி நீண்டகாலம் பயணிக்கக்கூடிய எனப்படும் மஸீ்ஹ் என்ற வார்த்தையுடன் தொடர்பு கொண்டுள்ளது.

உதாரணமாக மஸீஹுத் தஜ்ஜால் (நீண்ட காலம் வாழக்கூடிய தஜ்ஜால்) என்று கூறலாம் எனவே மஸீஹா என்ற வார்த்தையின் மூலம் கிருஸ்து என்ற வார்த்தை பிறக்கிறது.

மஸீஹுத் தஜ்ஜால் என்று நாம் கூறுவது போல அந்திக் கிருஸ்து என்று கிருஸ்தவர்கள் கூறுவது இதன் மூலம் தெளிவாக உணர முடிகிறது.

கேள்வி

சகோதரர் Dr Mohamed Musthafa அவர்களின் கேள்வி

நான் கிறிஸ்தவம் தெரிந்தே வேண்டும் என்றே திட்டமிட்டு சிலரால் உறுவாக்கப்பட்டது என்றே கருதுகிறேன்.,

பதில்

சகோதரர் Dr Mohamed Musthafa அவர்களின் கேள்வி நியாயமான கேள்விதான் காரணம் இறைவன் எந்த ஒரு சமுதாயத்திற்கும் தூதரை அனுப்புவதாக இருந்தால் மதத்தின் அடிப்படையில் அனுப்புவது கிடையாது மாறாக சமுதாயங்களுக்கு தூதுவராகத்தான் அனுப்புகிறான்.

உலகில் இஸ்லாத்தை தவிர வேறு மார்க்கத்தை இறைவன் மனிதனுக்காக தேர்ந்தெடுக்கவில்லை ஆனால் மனிதன் தமக்காக தம் சமுதாயத்திற்காக மதங்களை உருவாக்கிக் கொள்கிறான். இவர்களை சீர்திருத்தம் செய்யவே நபிமார்களை அல்லாஹ் அனுப்புகிறான் இதைத்தான் கீழ்க்கண்ட குர்ஆன் வசனம் சான்று பகர்கிறது

இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? நன்கு அறிந்தோர் நீங்களா? அல்லாஹ்வா?” என்று கேட்பீராக! அல்லாஹ்விடமிருந்து தனக்குக் கிடைத்த சான்றை மறைப்பவனை விட அநீதி இழைத்தவன் யார்? நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. (குர்ஆன் 2:140)

இயேசு கிருஸ்தவரா?

இயேசு வாழும் போது தமக்காக ஒரு சமயத்தை உருவாக்கிக் கொள்ளவும் இல்லை தம்மை பின்பற்றுவோருக்கு கிருஸ்தவ மார்க்கத்தை தேர்வு செய்யவுமில்லை காரணம் அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார். இதை குர்ஆன் தெளிவாக பின்வருமாறு விளக்குகிறது.

இப்ராஹீம், யூதராகவோ, கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை. (குர்ஆன் 3:67)

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே தீர்க்கதரிசி ஆபிரகாம் எனும் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் முஸ்லிமாக இருக்கும் போது அவரது வாரிசாக வந்த இயேசுகிருஸ்து எனும் நபி ஈஸா (அலை) எவ்வாறு யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்க இயலும் மாறாக ஆபிரகாம் எனும் இப்ராஹீம் நபியின் வாரிசாக முஸ்லிமாகவே இயேசு இருந்திருக்கிறார் இதற்கு அவருடைய சீடர்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள் இதோ அந்த வசனம்

அவர்களிடம் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்தபோது “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுவோர் யார்?” என்று கேட்டார். (அவரது) அந்தரங்கத் தோழர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள். அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்றனர். (குர்ஆன் 3:52)

மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் இயேசுவை பின்பற்றிய சீடர்கள் (அவரது தோழர்கள்) முஸ்லிம்களாக இருந்துள்ளது வெட்ட வெளிச்சமாக அம்பளமாகிவிட்டது எனவே கிருஸ்தவம் என்ற ஒன்றை இயேசு உருவாக்கவும் இல்லை அவர்களின் சீடர்கள் யாரும் உருவாக்கி வைக்கவும் இல்லை மாறாக கிரேக்கர்களால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட மதம்தான் கிருஸ்தவ மதமாக இன்றளவும் மக்களால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது ஆகவே தேவனால் அங்கீகரிக்கப்படாத, இயேசு கிருஸ்துவால் அங்கீகரிக்கப்படாத ஏன் இயேசுவின் சீடர்களால் கூட அங்கீகரிக்கப்படாத கிருஸ்தவ மதம் எவ்வாறு புனிதமான மதமாக இருக்கும் 100% வாய்ப்பே இல்லை என்பதே அறிஞர்களின் கருத்தாகவும் எனது கருத்தாகவும் அமைகிறது.

எனவே நான் கிறிஸ்தவம் தெரிந்தே வேண்டும் என்றே திட்டமிட்டு சிலரால் உறுவாக்கப்பட்டது என்றே கருதுகிறேன். என்ற சகோதரர் Dr Mohamed Musthafa அவர்களின் கேள்வி முற்றிலும் நியாயமானதாகவும் உண்மையானதாகவுமே அமைகிறது.

முடிவுரை

Dr Mohamed Musthafa அவர்களின் மேற்கண்ட கேள்வியின் ஒரு பகுதி முடிவுற்றது மேலும் இதே கேள்வியின் அடுத்த பகுதி இதோ கீழே

திருவெளிப்பாடு நூல் ஒரு இரகசிய சுற்றறிக்கை என்றே நான் கருதுகிறேன்., நீங்கள் திருவெளிப்பாட்டின் ஆசிரியர் யோவன், திருமுழுக்கு யோவான் (யஹ்யா(pbuh)) என்ற முடிவிற்கு எப்படி வந்தீர்கள் சகோதரா.,
திருமுழுக்கு யோவான் இயேசுவின் விண்ணேற்றத்திற்கு முன்பே கொல்லப்படு விட்டதாக பைபிள் சொல்கிறது.,
மேலும் இந்நூலை இயேசுவின் சீடர்களில் ஒருவரான யோவான் தான் எழுதினார் என்று நீண்டு காலமாக திருச்சபை சொல்லி வந்தாலும் இதை எழுதிய யோவான் அவர் இல்லை என்று இவர் மூப்பர்களில் ஒருவரான வேறொரு யோவான் என்பதுமே விவிலிய ஆய்வாளர்களின் கருத்து.

மேற்கண்ட கேள்வியில் நிலுவையில் உள்ளவை

திருவெளிப்பாடு இரகசிய சுற்றறிக்கையா?

யோவான் மற்றும் திருமுழுக்கு யோவான் (யஹ்யா PBUH) வேறுபாடு?

திருமுழுக்கு யோவான் இயேசுவின் விண்ணேற்றத்திற்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டதாக பைபிள் சொல்கிறது.,

மூப்பர்களில் ஒருவரான வேறொரு யோவான் என்பதுமே விவிலிய ஆய்வாளர்களின் கருத்து

மேற்கண்ட கேள்விகளின் விளக்கங்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து தொடரும் (இன்ஷா அல்லாஹ்)!

அதிகமாக வரலாற்றை ஆராய்ந்து சிந்திப்பதால் மூளையில் சற்று வலி ஏற்பட்டுவிடுகிறது எனவே இன்றைக்கு இந்த கேள்விக்கான பதிலாக இந்த கட்டுரையை முடித்துவிடுகிறேன். இது இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை ஆனால் இதை சொல்லித்தான் ஆக வேண்டிய நிர்பந்தம் ஏனெனில் உலக விஷயத்திற்காக பகலின் பணிச் சுமைகளை சுமந்து மறுமை ஆதாயத்திற்காக இரவில் ஓய்வு நேரத்தில் சுமார் 4 மணி நேரம் நள்ளிரவு 12 மணிவரை கட்டுரையில் மூழ்கிவிடுகிறோம் இதனால்தான் கேள்விகளுக்கான விடைகளை தேடுவதில் தொய்வு ஏற்படுகிறது. அல்லாஹ்வுக்காக பொருத்துக் கொள்ளவும் நம் சிந்தனைகளுக்கு விடையளிக்க அல்லாஹ் போதுமானவன்! அல்ஹம்துலில்லாஹ்

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர்வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன். (குர்ஆன் 16:125)

 அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

இருந்தவரும், இருக்கின்றவரும், வரவிருக்கினறவருமான கடவுள் யார்?

அவுஜுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இருந்தவரும், இருக்கின்றவரும், வரவிருக்கினறவருமான கடவுள் யார்?

(பாகம் – 1)

(யோவான் எழுதிய திருவெளிப்பாடு)

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு)

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!

இன்று நாம் காண இருக்கும் தலைப்பு திருவெளிப்பாடு என்ற நூலிலிருந்து உள்ள ஒரு வசனத்தை குறித்ததாகும். காரணம் இந்த திருவெளிப்பாடு என்ற நூலில் நுணுக்கமான முன்னறிவிப்பு ஒன்று நம் கண்களில் தென்படுகிறது இந்த முன்னறிவிப்பின் மூலம் இந்த திருவெளிப்பாடு எழுதிய யோவான் அவர்கள் ஒரு தீர்க்கதரிசனத்தை கிருஸ்தவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அது என்ன? இதோ கீழே உங்கள் பார்வைக்காக பதிக்கிறோம்.

B-1

இவற்றைக் கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளவற்றைக் கடைப்பிடிப்போரும் பேறு பெற்றோர். இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.

ஆசியாவில் உள்ள ஏழு திருச்சபைகளுக்கும் யோவான் எழுதுவது, இருந்தவரும், இருக்கின்றவரும், வரவிருக்கின்றவருமான கடவுடமிருந்தும், அவரது அரியணை முன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

இந்தக் கிருஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி. இறந்தோருள் முதலில் உயிர்பெற்ற எழுந்தவர், மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம் மீது அன்பு கூர்ந்தார். தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்.

புதிய ஏற்பாடு : திருவெளிப்பாடு ஆதி 1:1-5

மேற்கண்ட வசனம் புதிய ஏற்பாட்டின் திருவெளிப்பாடு அத்தியாத்தில் இடம் பெறுகிறது எனவே இந்த திருவெளிப்பாடு மற்றும் இதனுடன் தொடர்புடைய யோவான் என்ற நபரைப் பற்றியும் அந்த யோவான் கூறும் சில தீர்க்க தரிசனங்களையும் ஆராய நாம் கடமைப்பட்டுள்ளளோம் எனவே இதனை வரிசையாக இப்போது காண்போம்!

கிருஸ்தவ மதத்தை உருவாக்க இயேசு அவதரித்தாரா?

ஆதம் நபியின் வழித்தோன்றல்களே இந்த உலக மக்கள் அனைவருமாவர். இந்த ஆதிபிதா ஆதம் நபியின் வாரிசாக வந்தவர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுமாவார்கள் இவரை கிருஸ்தவர்கள் தீர்க்கதரிசி ஆபிரகாம் என்றும் இஸ்லாமியர்கள் நபி இப்ராஹீம் (அலை) என்றும் அழைப்பதுண்டு.

இயேசு கிருஸ்து என்பவர் கிருஸ்தவத்தை பரப்ப வரவில்லை மாறாக யூதர்களான இஸ்ரவேலர்களுக்கு தூதுவராக வந்தார்.

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது” (என்றார்) (குர்ஆன் 3:49)

ஆனால் யூதர்களான இஸ்ரவேலர்கள் தங்கள் திருத்தூதரான மோஸஸ் (நபி மூஸா (அலை) அவர்களை மட்டுமே திருத்தூதராக ஏற்றனர் ஆனால் அவருக்குப் பின்னர் வந்த இயேசு கிருஸ்துவை இறைத்தூதராக ஏற்கவில்லை காரணம் தந்தையின்றி இயேசு பிறந்தார் என்ற ஒரே காரணம்தான்.

இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோதுஇது தெளிவான சூனியம்எனக் கூறினர். (குர்ஆன் 61:6)

இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்துவிட்டதாக அச்சமூக மக்கள் நம்பினார்கள் அது தவறான வாதமாகும் மாறாக இயேசு சிலுவையில் அறையப்படவுமில்லை மாறாக கொல்லப்படவும் இல்லை என்பதை அருள்மறை குர்ஆன் சான்று பகர்கிறது இதோ!

அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. (குர்ஆன் 4:156,157)

இயேசு மக்களை விட்டு பிரிந்ததற்கு பின்னர் அந்த சமூகத்தின் மக்கள் தமக்கென்று ஒரு மார்க்கம் இல்லை என்று கருதி கிருஸ்தவ மார்க்கத்தை தங்கள் மார்க்கமாக அதாவது யுத இஸ்ரவேலர்களின் மதத்திலிருந்து பிரிந்து புதிதாக ஒரு மதத்தை தாமாக உருவாக்கிக் கொண்டார்கள். ஆனால் இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் நபி இப்ராஹீம் (அலை) எனும் ஆபிரகாமின் மார்க்கமான இஸ்லாத்தை மெய்ப்படுத்தவே வந்தார் ஆதாரம் இதோ!

நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், மார்க்கத்தை நிலைநாட்டுங்கள்! அதில் பிரிந்துவிடாதீர்கள்!” என்பதே.  நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணைகற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ், தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழிகாட்டுகிறான். (குர்ஆன் 42:13)

புதிய ஏற்பாடு என்றால் என்ன?

பரமண்டலங்களின் பிதாவும் இறைவனுமாகிய அல்லாஹ் இந்த மக்களை சீர்திருத்தம் செய்ய அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளுக்கு வேதங்களை அருளினான் அவ்வாறு அருளப்பட்ட வேதங்களில் மக்களுக்கு சட்ட திட்டங்களை வகுத்து கொடுப்பான் எனவே நபி ஈஸா (அலை) எனும் இயேசுவுக்கும் அல்லாஹ் ஒரு வேத புத்தகத்தை அருளினான் அதற்கு பெயர் இன்ஜீல் எனப்படுவதாகும் ஆதாரம் இதோ!

மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும்,  தவ்ராத்தையும், இஞ்சீலையும்  நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி269 (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போதுஇது தெளிவான சூனியமேயன்றி வேறில்லைஎன்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறியபோது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!” என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக! (குர்ஆன் 5:110)

ஆனால் இன்று கிருஸ்தவர்களிடம் காணப்படும் இறைவேதம் இயேசுவுக்கு அருளப்பட்ட இன்ஜீல் அல்ல மாறாக இயேசுவுக்குப் பின்னர் கிரேக்க தத்துவ அறிஞர்களின் கையேடுகளேயாகும்.

பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்றால் என்ன?

இன்று கிருஸ்தவர்களிடம் இரண்டு வகையான வேதங்கள் காணப்படுகிறது

  1. பழைய ஏற்பாடு
  2. புதிய ஏற்பாடு

கிரேக்கர்கள் எழுதிய விவிலியம் என்ற ஏட்டிற்கு இரண்டு பகுதிகள் உள்ளது முதல் பகுதி பழைய ஏற்பாடு என்றும் இரண்டாம் பகுதி புதிய ஏற்பாடு என்றும் கூறப்படுகிறது.

பழைய ஏற்பாட்டு என்றால் என்ன?

பரமண்டலங்களிலில் உள்ள பிதாவானவர் தம் மக்களுக்கு இட்ட கட்டளைகளின் தொகுப்பு உள்ளதாகவும் அந்த கட்டளைகள் அனைத்தும் மக்களுக்கும் அந்த மக்களைப் படைத்த பிதாவுக்கும் உரிய ஒப்பந்தங்களாகவும் இந்த கிரேக்கர்கள் வகுத்துவிட்டனர். எனவே அன்று முதல் இன்று வரை கிருஸ்தவர்கள் இந்த பழைய ஏற்பாட்டை ஏட்டளவில் மட்டுமே மதிக்கின்றனர்.

புதிய ஏற்பாடு என்றால் என்ன?

இயேசு கிருஸ்து உன்னதமானவர் என்றும் கடவுளின் பிள்ளை என்றும் அவர் மனிதர்களுக்காக அவதரித்து சிலுவையை சுமந்து இறந்து சகல பாவங்களையும் சுத்திகரிக்க பிறந்த தேவ ஆட்டுக் குட்டி என்று அவரை வர்ணித்து இயேசுவின் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாகக் கடவுள் மனித குலம் முழுவதோடும் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்துகொண்டார் என்பது கிரேக்கர்களும் கிறித்தவர்களும் நம்பி அதன் அடிப்படையில் வகுத்துக் கொண்ட புத்தகமே புதிய ஏற்பாடு என்றாகிவிட்டது.

எனவே, யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், கிறிஸ்துவின் காலத்திற்கு முற்பட்டதுமான புனித நூல் தொகுப்பைக் கிறித்தவர் பழைய ஏற்பாடு என்பர். கிறிஸ்துவின் காலத்திலும் அவர் இறந்த ஒரு நூற்றாண்டுக்குள்ளும் எழுதப்பட்ட  நூல் தொகுப்பு புதிய ஏற்பாடு என்று அழைத்துக் கொள்கின்றனர்.

புதிய ஏற்பாடு இறைவேதம் அல்ல என்பதற்கு சான்றுகள்

இயேசு கிருஸ்து மக்களை விட்டு பிரிந்த பிறகு அதாவது கி.பி. 50ல் உருவான புத்தகம்தான் இந்த புதிய ஏற்பாடு. இந்த புத்தகம் 27 தனிப்பட்ட சிறிய நூல்களின் தொகுப்பாக உள்ளது மேலும் இது கெயினே கிரேக்க மொழியில் எழுதப்பட்ட நூலாகும். இந்த 27 தனிப்படட சிறிய நூல்களை உள்ளடக்கிய பைபிளின் புதிய ஏற்பாட்டை கி.பி. 150ம் ஆண்டு காலத்தில் கத்தோலிக்க கிரேக்கர்கள் தாங்களாகவே எழுதி முடித்துள்ளனர். அதாவது கிருஸ்தவர்களின் நம்பிக்கையின் படி இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்து சுமார் 150 ஆண்டுகாலம் இந்த புதிய ஏற்பாடு இருக்கவில்லை மாறாக 150 ஆண்டுகாலத்திற்கு பின்னர் எழுதப்பட்ட காவியமே இந்த புதிய ஏற்பாடு ஆகும் ஆகவே இதற்கு இயேசுவின் அங்கீகாரம் என்பது கிடையவே கிடையாது ஆக இந்த நூல் ஒரு மனிதனின் நூல்தானே தவிர இறைவனின் வேதமாக கருத 100% வாய்ப்பே இல்லை!

திருவெளிப்பாடு என்பது என்ன?

புதிய ஏற்பாட்டில் உள்ள ஒரு அதிகாரத்தின் பெயர் திருவெளிப்பாடு என்பதாகும். பொதுவாக கிருஸ்தவர்களால் இந்த அத்தியாயம் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகும் காரணம் இந்த நூலில் இடம் பெரும் செய்திகள் அனைத்தும் மர்ம முடிச்சுகளாக திகழ்கிறது. உதாரணமாக சில உங்கள் பார்வைக்கு:

அந்த நான்கு உயிர்களும் மூப்பர்களும் புடை சூழ, அரியணை நடுவில் ஆட்டுக்குட்டி ஒன்று நிற்கக் கண்டேன். கொல்லப்பட்டதுபோல் அது காணப்பட்டது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. அக்கண்கள் மண்ணுலகெங்கும் அனுப்பப்பெற்ற கடவுளின் ஏழு ஆவிகளே. (புதிய ஏற்பாடு: திருவெளிப்பாடு 5:6)

போருக்கு ஆயத்தமாய் இருக்கும் குதிரைகளைப்போல் அந்த வெட்டுக்கிளிகள் காணப்பட்டன. அவற்றின் தலைகளில் பொன் முடிகள் போன்றவை தென்பட்டன. அவற்றின் முகங்கள் மனித முகங்கள்போல் இருந்தன. அவற்றின் முடி பெண்களின் கூந்தலையும், பற்கள் சிங்கங்களின் பற்களையும் ஒத்திருந்தன. அவற்றின் மார்பில் இரும்பாலான மார்புக் கவசம் அணிந்திருந்தது போலத் தோன்றியது. சிறகுகளின் இரைச்சல் போருக்கு விரையும் தேர்ப்படையின் இரைச்சல் போன்று இருந்தது. தேள்களைப் போல் அவை வாலும், கொடுக்கும் கொண்டிருந்தன. ஐந்து மாதம் மனிதருக்குத் தீங்கு இழைக்கும் ஆற்றல் அவற்றின் வால்களில் இருந்தது. (புதிய ஏற்பாடு: திருவெளிப்பாடு 9:7-10)

மேற்கண்ட வசனங்களைப் போன்று மனித அறிவுக்கு சற்றும் ஏற்றுக் கொள்ள இயலாத வசனங்கள் இந்த திருவெளிப்பாடு அத்தியாயத்தில் உள்ளது இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் இன்றளவும் கிருஸ்தவர்கள் திக்கு முக்காடுகிறார்கள் எனவே இந்த அத்தியாயத்தை கிருஸ்தவர்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை ஆனால் இந்த திருவெளிப்பாடு அத்தியாயத்த கூறுபவர் யோவான் என்பவராவா்.

யார் இந்த யோவான் யார்?

பொதுவாக கிருஸ்தவர்களின் மத வழக்கப்படி யோவான் என்றால் இயேசு கிருஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான யோவான் என்ற நபர்தான் அனைவரது நினைவுக்கும் வரும் ஆனால் இந்த யோவன் என்பவர் இயேசுவின் சீடர் அல்ல மாறாக ஒரு தீர்க்கதரிசியாவார்.

தீர்க்கதரிசியான இயேசுவின் சமகால தீர்க்கதரிசி யோவான் ஆவார் அதாவது இவரது உண்மையான பெயர் புனித திருமுழுக்கு யோவான் (JOHN THE BAPTIST) என்பதாவும்.

இந்த யோவான் வேறு யாருமில்லை நபி ஜக்கரியா (அலை) அவர்களின் மகனாகிய நபி யஹ்யா (அலை) அவர்களேயாவார்கள். இவர் இயேசுவுக்கு முன் பிறந்தவர் இயேசுவுக்கு சமகால இறைத்தூதராவார். இதோ ஆதாரம்

கடவுளுடைய பிரதிநிதியாக அனுப்பப்பட்ட ஒரு மனிதர் வந்தார்; அவருடைய பெயர் யோவான். (புதிய ஏற்பாடு: யோவான் 1:6)

யோவான் எனும் நபி யஹ்யா (அலை) இயேசுவை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டவர்

(அவரைப் பற்றி யோவான் சாட்சி கொடுத்தார்; “‘எனக்குப் பின்னால் வரப்போகிறவர் எனக்கு முன்னால் போயிருக்கிறார்; ஏனென்றால், அவர் எனக்கு முன்பிருந்தே இருக்கிறார்’ என நான் சொன்னது இவரைப் பற்றித்தான்” என்று சத்தமாகச் சொன்னார்) (புதிய ஏற்பாடு: யோவான் 1:15)

 யோவான் அறிவித்த செய்தி என்ன?

பைபிள்: திருவெளிப்பாடு ஆதி 1:1

இவற்றைக் கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளவற்றைக் கடைப்பிடிப்போரும் பேறு பெற்றோர். இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.

  1. ஆசியாவில் உள்ள ஏழு திருச்சபைகளுக்கும் யோவான் எழுதுவது, இருந்தவரும், இருக்கின்றவரும், வரவிருக்கின்றவருமான கடவுடமிருந்தும், அவரது அரியணை முன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

5.இந்தக் கிருஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி. இறந்தோருள் முதலில் உயிர்பெற்ற எழுந்தவர், மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம் மீது அன்பு கூர்ந்தார். தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்.

குறிப்பு:

கட்டுரை மிக நீண்டதாக உள்ளதால் இதை பல பகுதிகளாக எழுத நாடுகிறேன் காரணம் முழு நீளமான கட்டுரையாக இருக்கும் போது அதனை படிப்பது சிரமம் ஏற்பட்டு சலிப்பு ஏற்பட்டுவிடும் ஆகையால் கட்டுரையின் முதல் பகுதி இதுவாகவும் மற்றும் இதர பகுதிகள் 2, 3, 4 என தொகுத்து வழங்குகிறேன்!

காரணம் இந்த புனித திருமுழுக்கு யோவான் (JOHN THE BAPTIST) எழுதிய அதாவது கூறும் செய்திகள் அனைத்தும் மர்ம தேசத்தின் மர்ம முடிச்சுகளாக காணப்படுகிறது இவரின் அறிவிப்புகளில் இஸ்லாம் கூறும் மறைவான ஞானத்தின் அறிவுப்புகள் ஒத்துப் போகின்றன. ஆகையால் இந்த கட்டுரை பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆக அல்லாமல் பல பகுதிகளாக நாம் ஒவ்வொன்றும் ஆராய முற்பட்டுள்ளோம்!

இன்ஷா அல்லாஹ்! (இறைவன் நாடினால்) இந்த அறிவிப்பாளர் தீர்க்கதரிசி யோவான் எனும் நபி யஹ்யா (அலை) அவர்களின் அறிவிப்புகளை குர்ஆன் மற்றும் ஹதீஸ்வழியில் ஆராய்ந்து உண்மையை உள்ளவாறு உலகிற்கு எடுத்துக் கூற நாமும் கடமைப்பட்டுள்ளோம்!

இந்த கட்டுரையின் தொடர்ச்சி மிக சுவாரஸ்யமாக அடுத்த பதிப்பில் காணலாம் (இன்ஷா அல்லாஹ்)

முகநூல் சகோதரர்களான DrMohamed Musthafa மற்றும் Sheik Fareed Abu ஆகியோரின் அறிவுத் தேடலுக்கு இந்த ஆராய்ச்சிகள் பயன்பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை அவர்களின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்!

alhamdulillah

அல்லாஹ் நமக்கு மென்மேலும் ஞானத்தை வழங்குவானாக!

ربِّ زِدْنِي عِلْماً

அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

 

 

நாய்கள் வீட்டில் வளர்க்க இஸ்லாம் தடுத்தது ஏன்?

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

dog 1.jpg அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே என் இளைஞர் சமுதாயமே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு

(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)

முன்னுரை!

இஸ்லாம் என்றாலே மக்களை நல்வழிப்படுத்தும் அறிவுப்புர்வமான மார்க்கம் என்பதற்கு குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகளுமே பறைசாற்றகின்றன.

இந்த அறிவுரைகள் அனைத்தும் அறிவியல் என்றால் என்ன என்று அறியப்படாத 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.பி. 622ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் இன்று உறுதியாகிக்கொண்டு வருகிறது. இதன் வரிசையில் நாய் வளர்ப்பது குறித்து இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களுக்கு கூறிய செய்தி என்ன இதோ நபிகளாரின் பொன்மொழிகளாக:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி)  ஆதாரம்:புகாரி 172

நாய்கள் என்றால் என்ன?

உலகம் முழுவதும் பரவலாக வீட்டீல் வளர்க்கப்படும் இனங்களில் நாய்களின் இனமும் ஒன்றாகும். நாய்கள் மனிதர்களின் காவலர்கள் என்றும் மனிதனின் நண்பன் என்றும் கூறுவதுண்டு. ஆனால் இந்த நாய்கள் மனிதனுக்கு நன்றியுள்ள ஜீவனாக இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் நிலைமை அவ்வாறு அல்ல எந்த ஜீவனாக இருந்தாலும் அதை சோறூட்டி, பாலூட்டி வளர்த்தால் அவை மனிதனுக்கு தன் நன்றியை ஏதாவது ஒரு விதத்தில் காட்டும் என்பதே நிதர்சன உண்மையாகும்.

என்னத்தான் மனிதன் நட்பாக வீட்டு விலங்குகளை வளர்த்தாலும் அவைகளால் மனிதனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது நாய்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல!

நாய்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்!

நாய்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவைகளாவன:

  1. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்கள்
  2. உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்கள்

நாய்களும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களும்

நாய்களின் உடலில் ஏற்படும் கொடிய நோய்கள் மனிதனின் உயிருக்கு 90% ஆபத்தை விளைவிப்பதாக அமைந்துவிடுகிறது அவ்வகையில் கீழ்க்கண்ட நோய்கள் மனிதனை மரணிக்க செய்யும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை அவைகளாவன:

கம்பைளோ பாக்டீரியோஸிஸ் (CAMPYLOBACTERIOSIS)

வீட்டில் வளர்க்கும் உங்கள் செல்லப்பிராணிகளான நாய்கள் சில நேரம் மனிதன் தூக்கிப் போடும் அசுத்தமான மாமிசம் மற்றும் முட்டைகளை உட்கொள்கின்றன இப்படிப்பட்ட அசுத்தமான உணவுகளால் அவைகளின் செரிமான குடல் பாதிக்கப்பட்டு கம்பைலோபாக்டர் என்ற கொடிய நோய் உருவாகிறது இந்த கொடிய நோய் கிருமிகள் நாய்கள் மலம் கழிக்கும் போது அவற்றின் வயிறுகளிலிருந்து வெளியேறி காற்றில் கலந்துவிடுகிறது. இந்த நோய்களின் தாக்கம் நாய்களிடம் தென்படாது ஆனால் நாய்களுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவதே இந்த நோயின் அறிகுறியாகும்.

d1.jpg

நாய்களை வளர்க்கும் மனிதர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும் போது அவர்களின் இரத்தங்களை பரிசோதித்தால் கம்பைளோ பாக்டீரியோஸிஸ் கிருமி தொற்று உள்ளது வெளிச்சத்திற்கு வரும். இந்த நோயின் காரணமாக மனிதர்களுக்கு தசைப்பிடிப்பு, வயிற்று வலி, 2 முதல் 5 நாட்கள் தொடர் காய்ச்சல் காணப்படும்.

குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இந்த நோய் தாக்கம் ஏற்பட்டால் அவர்கள் உயிர்வாழ்வது சாத்தியமற்ற ஒன்றாக மருத்துவத்துறை எச்சரித்துள்ளது.

நாய் நாடாப்புளு நோய் (DOG TAPEWORM)

நாய்களுக்கு ஏற்படும் நாடாப் புளு நோய்கள் ஒட்டுண்ணி வகையைச் சார்ந்தது. இது நாய்களுக்கு மட்டுமின்றி பூனைகளுக்கும் மனிதர்களுக்கும் எளிதில் பரவக்கூடிய ஒரு நோய்கிருமியாகும். அதாவது நாய்களின் ரோமங்களில் உருவாகும் ஒருவகை பேன்களாகும். இந்த பேன்கள் மூலமாக விலங்குகளுக்கு எடை குறைதல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது இது படிப்படியாக மனிதனுக்கும் தொற்றிக் கொள்கிறது.

d2.jpg

குழந்தைகளுக்கு இந்த நாய்கள் நாடாப்புளு ஒட்டுண்ணி பேன் தொல்லைகள் உடனே தொற்றிக் கொள்கிறது மேலும் இந்த நோய் தொற்றின் அறிகுறிகள் சாதாரணமாக புலப்படாது மாறாக சில வாரங்களிலேயே உயிர்க்கொல்லியாக மாறிவிடும். இந்த நோயை தவிர்க்க ஒரே வழி நாயை அப்புறப்படுத்துவதேயாகும்.

கொக்கிப்புழு நோய்கள் (HOOKWORM)

நாய்களுக்கு ஏற்படும் கொக்கிப் புளு நோய்க்கிருமிகள் மிக நுண்ணியதாக காணப்படும் இவை வெறும் கண்களால் காண இயலாது. மேலும் இது தரையில் எளிதில் ஊடுறுவிச் சென்று மனிதனை தாக்கும் ஓர் கொடிய நோய்க்கிருமியாகும்.

நாய்கள் பாலூட்டி இனத்தை சார்ந்தது எனவே நாய்கள் தரையில் உருண்டு புரண்டு விளையாடுவதால் மண்ணில் உள்ள கிருமிகள் நாய்களின் காம்புகளில் ஒட்டிக் கொள்கின்றன இதனால் பெண் நாய் தன் குட்டிகளுக்கு நாய்ப்பாலூட்டும் போது அவை பாலின் மூலமாக குட்டிகளின் வயிற்றுக்கு சென்று அங்கு அஜீரண கோளாறுகளை உண்டாக்குகிறது.

d3.jpg

நாய்க்குட்டிகளுக்கு இந்த கொக்கிப்புளு நோய் தாக்கம் அடைந்த நிலையில் அவற்றின் நிறம் கருத்துவிடுகிறது, நாய்களின் மலத்தில் இரத்தம் கசிதல் மற்றும் நாய்களுக்கான இரத்த சோகை நோய்கள் உருவாகிறது. இதனால் சில நாய்க்குட்டிகள் பிறந்த சில மாதங்களிலேயே இறந்துவிடுகிறது.

d4.jpg

நாய் வளர்ப்போரின் உடல் உறுப்புகள் சேதமுறுதல்

இந்த கொக்கிப்புளு நோயின் தாக்கத்தால் நாய்களும் அதன் குட்டிகளும் வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடும் அவ்வாறு வாந்தி எடுக்கும் போது அந்த வாந்தியின் மூலமாக கொக்கிப்புளுக்கள் தரையில் தெரிக்கவிடப்படுகிறது.

d5.jpg

குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி அரிப்பு நோய்

இப்படிப்பட்ட சூழலில் மனிதனின் வெறும் கால்களால் நடக்கும் போது, மண்டியிட்டு நாய்களை கொஞ்சும் போதும், தரையில் நாய்களுடன் படுத்து விளையாடும் போதும் அந்த கொக்கிப்புளு எளிதில் மனிதனின் உடலில் ஊடுறுவி கடுமையான லார்வாக்கள் எனும் தோல் நோய் கிருமிகளை உருவாக்கிவிடுகிறது. இதை Cutaneous Larva Migrans அதாவது அரிப்பு நோய் என்று அழைப்பர்.

ராப்பிஸ் நோய் (நாய்க்கடி RABIES)

ராப்பிஸ் என்பது அபாயகரமான கொடிய நரம்புமண்டல நோயாகும். இது நாய்களிடமிருந்து மனிதனுக்கு ஏற்படும் கிருமி ஒட்டுண்ணி நோயாகும்.d6.jpg

விலங்குகளுக்கு கொடிய நோய் தாக்கம் ஏற்பட்டு அதன் மூலம் உயிர் பிரியும் காலங்களில் அதன் விஷத்தண்மை அதிகமாக காணப்படுகிறது இப்படிப்பட்ட ஒரு விலங்கு மற்றொரு விலங்கினை கடித்தால் அந்த நோய் அதே விரியத்துடன் கடிபட்ட விலங்கிற்கும் தொற்றிக் கொள்கிறது.

rabid-dogs.jpg

உதாரணமாக ஒரு சொறி சிரங்கு பிடித்து மரணிக்கும் நிலையில் இருக்கும் சொறிநாய் மற்றொரு நல்ல நாயை கடித்துவிட்டால் நல்ல ஆரோக்கியமாக இருந்த நாய்க்கும் அந்த சொறி சிரங்கு நோய் ராப்பிஸ் வடிவில் தொற்றிக் கொள்கிறது இந்த சொறிநாய் கடியின் மூலமாக அவதிப்படும் நாய்கள் மனிதனை கடித்தால் மனிதனுக்கு நாய்க்கடி என்று கூறப்படும் ராப்பிஸ் தொற்றிக் கொண்டு மனித உயிர் மூளை நரம்பு மண்டல பாதிப்பின் காரணமாக பிறிந்து விடுகிறது மனிதன் அகால மரணமடைகிறான்.

bulldog.jpg

ராப்பிஸ் நோய் பரவாமல் தடுக்க தடுப்பு ஊசிகள் உள்ளன எனினும் மனிதனைப் போன்று நாய்கள் பேச இயலாததால் அந்த நோயின் தன்மையை மனிதனால் அறிய முடிவதில்லை. எனவே ராப்பிஸ் நோய் தொற்று மனிதனின் உயிருக்கு கேடுவிளைவிக்கும் அபாயகரமான நோயாகும்.

உருளைப்புழு நாக்குப் பூச்சி நோய் (ROUNDWORM)

ரவுண்டு ஒர்ம் எனப்படும் உருளைப்புழு நாக்குப்பூச்சி என்ற கிருமிகள் நாய்களின் மலத்திலிருந்து வெளியேறும் கண்ணுக்குத் தெரியக்கூடிய கிருமியாகும். நாய்கள் எதை வேண்டுமானாலும் உண்ணக்கூடியதாக உள்ளது சில நேரங்களில் இறந்து போன எலிகளைக் கூட உணவாக உட்கொள்ளும் எனவே அவ்வாறு உண்ட நோய்தொற்று எலிகளால் நாயின் செரிமான குடல்கள் அழுகி அதனால் ஏற்படும் நோய்க் கிருமியே இந்த ரவுண்டு ஒர்ம் எனப்படும் உருளைப்புழு நாக்குப் பூச்சியாகும்.

d7.jpg

நாயின் மலத்தில் உள்ள கிருமிகள்

மனிதனுக்கு இந்த நோய் தொற்றிக் கொள்வதால் Ocular larva migrans எனப்படும் வியாதி ஏற்பட்டுவிடுகிறது. இந்த வியாதி மனிதனின் கண்களில் கருவிழிப் பகுதியில் கண்ணின் ஒளித்திரையில் (ரெட்டினா) பகுதியில் கிருமி தொற்று உருவாகி கருவிழி வெள்ளை நிரமாக மாறிவிடுகிறது இதன் காரணமாக கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது.

e1.jpg

நாய்களின் உடலில் பரவும் இந்த ஒட்டுண்ணிகள் மனிதனின் நுரையீரல் மற்றும் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக மூளை நரம்புகளுக்கு மெதுவாக நகர்ந்து ரெட்டீனா எனும் கண் பார்வை இழப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

 நாய்களால் ஏற்படும் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தாத நோய்கள்

நாய்களுக்கு ஏற்படும் நோய்களில் விஷத்தன்மை குறைவான மனிதனுக்கு உயிர் சேதம் விளைவிக்காத ஆனால் உடல் அளவில் குறைபாடுகளை ஏற்படுத்தும் 16 சிறிய வியாதிகளை உண்டாக்கும் நோய்களையும் நோய்க் கிருமிகளையும் கீழே பதித்துள்ளேன் அவைகளை விளக்கமாக கூறினால் உங்களால் இந்த கட்டுரையை படிக்க சிரமமாக ஆகிவிடும் என்பதால் பெயர்களை மட்டும் பதித்து உள்ளேன்.

dfs.jpg

  1. BRUCELLOSIS
  2. CAPNOCYTOPHAGA
  3. CRYPTOSPORIDIOSIS
  4. ECHINOCOCCOSIS
  5. EHRLICHIOSIS
  6. GIARDIASIS
  7. LEISHMANIASIS
  8. LEPTOSPIROSIS
  9. LYME DISEASE
  10. MRSA (METHICILLIN-RESISTANT STAPHYLOCOCCUS AUREUS)
  11. PASTEURELLOSIS
  12. PLAGUE
  13. RINGWORM
  14. ROCKY MOUNTAIN SPOTTED FEVER
  15. SALMONELLOSIS
  16. SARCOPTIC MANGE

முடிவுரை

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே நாய்களை வீடுகளில் வளர்க்கக்கூடாது என்று இஸ்லாம் வண்மையாக தடுத்துள்ள நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் கீழ்க்கண்ட மகத்துவமான சொல்லை கீழே பதித்துள்ளோம். மீண்டும் ஒருமுறை சற்று கவனமாக சிந்தித்து படித்துப் பாருங்கள்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்’ அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி)  ஆதாரம்:புகாரி 172

ஒரு மனிதர் 1400 ஆண்டுகளுக்கு முன் இன்றைய அறிவியல் உண்மைகளை மருத்துவ உண்மைகளை சர்வ சாதாரணமாக கூற இயலுமா? முடியவே முடியாது என்பதாகவே உங்களது கருத்தாக அமையும் எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரண மனிதர் அல்ல மாறாக அல்லாஹ்வின் அருளாக மனிதர்களின் இறுதி இறைத்தூதராக உள்ளார் என்பதற்கு இதுவும் ஒரு ஆதமாரமாக திகழ்கிறது. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) தாமாக எதையும் கூறவில்லை மாறாக அல்லாஹ் தமக்கு அறிவித்த செய்தியைத்தான் நமக்கு கூறியிருக்கிறார் இதோ ஆதாரம்

“இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. நான் சுயமாக உருவாக்கிக் கூறுபவனல்லன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (குர்ஆன் 38:86)

அறிவைக் கொடுத்தவன் அல்லாஹ்!

புகழனைத்தும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே!

alhamdulillah

அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

thanks: https://www,cdc,gov

மார்க்க அறிஞர்களை நோவினை செய்தல்!

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அன்பிற்கினிய என் தீன்குல சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு

(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)

மார்க்க அறிஞர்களை நோவினை செய்தல்!

mk.jpg

முன்னுரை

இன்றைய காலகட்டத்தில் கல்வி அறிவு கொடுக்கப்பட்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவுக்கு மார்க்க கல்வியில் முஸ்லிம்கள் பின்னோக்கிச் சென்றுவிட்டனர். தன் மகன் டாக்டராக, சாஃப்ட்வேர் இஞ்ஜீனியராக, ஆடிட்டராக வாழ வேண்டும் என்ற உலகாதாய ஆசையின் காரணமாக மறுமையின் வெற்றிக்குரிய மார்க்க கல்வியை கற்பது முற்றாக நின்று போய்விட்டது.

அன்றைய காலகட்டத்தில் கல்வியில் முன்னேறியிருந்த சமுதாயம் இன்று மார்க்க கல்வியில் பின்தங்கிய சமுதாயமாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மார்க்கம் பயின்ற கண்ணியமிக்க சில மார்க்க அறிஞர்களை உதாரணமாக ஜாகிர் நாயக் மற்றும் சகோதரர். PJ போன்றோரை கல்வி அறிவே அல்லாத குருடர்கள் நக்கலடிப்பதும், ஏளனமாக பேசுவதும், அவர்களைப் பற்றி விதவிதமான மீம்ஸ்களை எழுதி அகமகிழ்வதும் பொழுதுபோக்காக மாறிவிட்டது. அறிந்துக் கொள்க கல்வி அறிவு அல்லாஹ்வின் பேரருளாகும் அதை பெற்றுள்ளவர்களை ஏளனம் செய்வது அல்லாஹ்வின் ஆற்றலை நக்கல் நையாண்டி செய்வதற்கு சமமானதாகும்.

ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஆதாரம் நூல் : புகாரி 73.

கல்வியாளர்களின் சிறப்பு

images.jpg

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(
மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. அது அ(வ்வாறு பின்தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது. தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும்
குறைத்துவிடாது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி:5194

மார்க்க கல்வியாளர்களை இழிவுபடுத்துவதற்கு ஓர் உதாரணம்

மார்க்க கல்வி கற்ற அறிஞர்கள் உண்மையை உள்ளவாறு ஆதாரங்களுடன் எத்திவைப்பதை நக்கலடித்து கிண்டல் அடிக்கும் சகோதரர்களுக்கு பின்வரும் ஒரு கற்பனைக் கதையை உவமையாக முன்வைக்கிறோம் இதை படித்தாவது திருந்திக் கொள்ளுங்கள்!

1236.jpg

முற்காலத்தில் ஒரு சமுதாயம் காட்டில் கூட்டமாக வசித்து வந்தது. அந்தக் கூட்டத்தில் சில மாவீரர்களின் படைகள் இருந்தன. அவர்களுக்கோர் வீரமிக்க படைத்தளபதியும் இருந்தான்! ஒவ்வொரு நாளும் பகலில் வேட்டையாடி இரவில் கடற்கரையில் தங்கள் கூடாரங்களுக்கு அருகே மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து வந்தனர். அவர்களை மகிழ்விக்கவே இரவின் ஓரத்தில் மேகங்களுக்கிடையே பிரகாசத்தால் ஜொலிக்கும் பௌர்ணமி நிலவும் காத்திருந்தது!

images3.jpg

அந்த சமுதாயத்தில் உள்ள மக்கள் வட்ட நிலவின் பிரகாசத்தைக் கண்டு வியந்து அதன் ஜொலிப்பில் லயித்துப் போய் இருந்தனர்! நிலவை கண்டு ரசித்துக் கொண்டிருந்த மக்களை கவனித்துக் கொண்டிருந்த அந்த படைத்தளபதி தன்னை யாரும் மதிக்கவில்லையே என கடுமையான கோபம் கொண்டான்!

உடனே தன்னிடமிருந்த கூர்மையான ஈட்டியைக் கொண்டு நிலவை நோக்கி வீசினான் அதுவோ வேகமாக வானத்தை நோக்கி சென்று கடலில் விழுந்தது! தங்கள் படைத்தளபதியின் செயலைக் கண்டு அங்கு குழுமியிருந்த மக்கள் அதிர்ந்தனர்! தன் படைத்தளபதியை பகைத்துக் கொள்ளவும் இயலாமல் அவருக்கு அறிவுறையும் கூற முடியாத தர்ம சங்கடமான நிலையில் வேறு வழியின்றி மக்கள் கை தட்டலானார்கள்!

211.jpg

மக்களின் கை தட்டல்களை கண்ட படைத்தளபதிக்கு சற்று பெருமிதம் ஏற்பட்டு தலைக்கணமும் இருமாப்பும் துளிர்விட்டது! அடுத்த நாள் இரவும் வந்தது நிலவு தேய்ந்து காணப்பட்டது  அந்த படைத்தளபதி மீண்டும் சில கூர்மையான ஈட்டிகளையும் கோடாரிகளையும் நிலவை நோக்கி வீசினான் அது சீரிப்பாய்ந்து மறைந்தது பின் கடலில் விழுந்தது! இப்படியாக ஒவ்வொரு இரவும் நிலவு தேய்ந்துக் கொண்டு செல்ல படைத்தளபதியோ தன்னுடைய ஆயுதங்கள் ஒவ்வொன்றாக நிலவை நோக்கி வீசிக் கொண்டே இருந்தான்!

தன்னுடைய அறிவுத் திறமையாலும் வீரத்தாலும் ஈட்டி எரியும்  நுட்பமான மனோ தைரியத்தாலும்தான் நிலவு உடைந்து தேய்ந்து வருவதாக மனதில் நினைத்து பூரித்துப் போனான்!

2112.jpg

இறுதியாக அமாவாசை நாளன்று நிலவு வரவில்லை வானம் பிரகாசிக்காமல் இருண்டுவிட்டது! இதைக் கண்ட படைத்தளபதி நிலவின் வீழ்ச்சியை தன் சக மக்களோடு கொண்டாடிக் கொண்டிருந்தான் மக்களும் அந்த படைத்தளபதிக்கு அஞ்சி வேறு வழியின்றி வேடிக்கையாகவே இந்நிகழ்வை கொண்டாடி மகிழ்ந்தனர்! நள்ளிரவு இருட்டிக் கொண்டே சென்றது அருகிலிருந்த முட்புதர்களில் ஒழிந்துக் கொண்டிருந்த சிங்கங்கள் ஒவ்வொன்றாக வெளியேறி மக்களை கடித்துக் குதற ஆரம்பித்தன!

மக்களைக் காக்கும் படைத்தளபதியோ அனைத்து ஆயுதங்களும் தொலைத்த நிலையில் நிராயுதபாணியாக நிற்க மக்கள் அலறியடித்துக் கொண்டு கூடாரங்களுக்குள் மறைந்தனர்!

விடிந்ததும் அக்கூட்டத்தின் கனிசமான தொகையினர் சிங்கத்திற்கு இறையாகி இறந்து கிடந்தனர் அந்த படைத்தளபதியோ மரத்தில் தொங்கிக்கொண்டு தன் உயிரைக் காப்பாற்றி கொண்டான்!

அன்றைய பொழுது முழுவதும் படைத்தளபதி அவமானப்பட்டு எஞ்சிய மக்கள் முன் தலைகுணிந்து நிற்க மறுநாள் மாலைப் பொழுது அதே நிலவு பிறையாக ஜொலித்து தெண்பட்டது! மக்கள் மீண்டும் மகிழ்ந்தனர். படைத்தளபதியோ வெட்கப்பட்டு நின்றான் மக்கள் அனைவரும் படைத்தளபதியின் முட்டாள்தனத்தைக் கண்டு தூற்ற ஆரம்பித்தனர்! நிராயுதபாணியான தளபதியோ செய்வதறியாது திகைத்து நின்றான்!

மக்கள் தங்களுக்குள் நல்ல மதிநுட்பமிக்க தோழரை தங்களுடைய புதிய படைத்தளபதியாக நியமித்துக் கொண்டனர்! முன்னாள் படைத்தளபதியை அனைவரும் வெறுத்து ஒதுக்க அவனோ நிலைகுலைந்த நிலையில் முழுவதுமாக பைத்தியமாகவே மாறிவிட்டான்!

இக்கதையில் உங்களுக்கு உள்ள ஓர் படிப்பினை

இறைவனின் அருளாக மார்க்க கல்வியாளர்கள் உள்ளனர் அவர்கள் இரவின் கும் இருட்டிற்கு ஒளியாக நிலவின் வெளிச்சமாக பிரகாசித்துக் கொண்டு மக்களுக்கு நேர்வழியையும் காட்டிக் கொண்டுள்ளார்கள்.

அவர்களை அடிப்படை அறிவு இல்லாத பொதுமக்கள் ஈனத்தனமான வார்த்தைகளால் நோகடிப்பதும் நக்கல், நையாண்டி சொல்வதும் மேற்கண்ட கதையில் வரும் முட்டாள் படைத்தளபதியின் உவமைக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

நக்கல் நையாண்டி கிண்டல் அடிக்கும் மார்க்க கல்வியறிவு இல்லாத குருடர்களே நீங்கள் என்னத்தான் மார்க்க அறிஞர்களை சீண்டினாலும் திட்டினாலும் மார்க்க அறிஞர்கள் கற்ற கல்வியை உங்களால் ஒன்றுமே செய்ய இயலாது அவர்கள் நிலவின் வெளிச்சத்தைப் போன்று என்றும் ஜொலித்துக் கொண்டே இருப்பார்கள் என்பதே இக்கதையின் மையக்கருத்தாகும்.

எனவே இனியாவது உங்கள் தராதரம் பார்த்து வாழப் பழகுங்கள் நாம் படிக்கவில்லை நாம் மக்களுக்கு மார்க்க விளக்கம் கொடுப்பதில்லை நாம் ஹதீஸ்களைகளை அறிந்திருக்கவில்லை அவ்வாறிருக்க சத்திய சன்மார்க்க நெறிமுறைகளை போதிக்கும் மார்க்க அறிஞர்களை நாம் இழிவாக சித்தரிக்க நமக்கு என்ன உரிமை உள்ளது என்பதை சிந்திப்பீர்களாக! அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் மார்க்க கல்வியில் மேன்மைப்படுத்தி மார்க்க அறிஞர்களாக மாற்றுவானாக!

ரப்பி ஜித்னி இல்மா

2229847574_896155306.jpg

Rabbi zidni ilma

என் இறைவனே! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! அல்குர்ஆன் – 20 :114

My Lord! Increase me in knowledge – Al Quran 20 :114

alhamdulillah

அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

கொடிமர ஃபாத்திஹா வந்த வரலாறு

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

 

அன்பிற்கினிய தீன்குல சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு

(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)

கொடிமரம் மற்றும் கொடிமர ஃபாத்திஹா என்பது தமிழ்நாட்டில் அனைத்து தர்காஹ்களிலும் நடைபெறும் மார்க்கம் கற்றுத்தராத மற்றும் மார்க்கம் தடுத்த வழிபாட்டு முறையாகும். நாகூர் தர்காஹ் கொடி மரம் என்பது தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கொடிமர ஏற்றும் நிகழ்ச்சியாகும் இந்த கொடி மரம் ஏற்றும் போது ஓதப்படும் ஃபாத்திஹாவுக்கு கொடி மர ஃபாத்திஹா என்று கூறுவதும் உண்டு. எனவே இந்த கொடிமர அநாச்சரம் எவ்வாறு தமிழக முஸ்லிம்களிடம் பரவியது அறிவோமா!

கொடி மரம் என்றால் என்ன?

images2.jpg

தர்காஹ்விற்கு வெளியே வாசல் பகுதிகளில் சில மரங்களை நட்டு வைப்பார்கள் அவற்றில் பச்சை வர்ண கொடியும் அதில் சில குர்ஆன் வசனங்களும் எழுதப்பட்டிருக்கும் அப்படி எழுதப்பட்ட அந்த கொடியினை வருடத்திற்கு ஒருநாள் கொடி கம்பத்தில் ஏற்றவிட்டு சென்ட மேளங்கள் கொட்டி கத்தம் ஃபாத்திஹா ஓதி தப்ருக் கொடுத்து மக்களை ஷிர்க்கின் பக்கம் கொண்டு செல்வார்கள் இது இஸ்லாமிய கலாச்சாரம் அல்ல மேலும் இதுபோன்று நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த மக்கா மற்றும் மதீனா நகரத்திலோ சவுதி அரேபியாவிலோ நடைபெறாது அப்படி ஒரு நிகழ்ச்சியே இஸ்லாத்தில் இல்லை ஆனால் இது தமிழ்நாட்டில் குறிப்பாக நாகூர் தர்காஹ்வில் நடைபெறுகிறது இந்த அநாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கொடி மரம் எங்கிருந்து வந்தது?

இந்து மத கோட்பாடுகளின் அடிப்படையில் கோவில்களின் முகத்துவாரங்களில் அதாவது ஆலையங்களுக்கு செல்வதற்கு முன்பாக கொடி மரம் வைப்பார்கள் இதனால் கோவிலுக்கு அழகு சேர்வதாகவும், தீய சக்திகள் அகன்றுவிடுவதாகவும், இந்து மத கடவுள்ளகளின் இறை ஆற்றல் அதிகரிப்பதாகவும் மேலும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுவதாகவும் நம்பப்படுகிறது!

index.jpg

கோவில்களில் கொடி ஏற்றுவது இந்து மத ஆகம விதிகளின் படி நடைபெறும் நிகழ்வாகும். கொடி துணி ஆன்மா என்றும் அதன் கயிறு பாசம் என்றும் இந்த இரண்டும் சேர்ந்து சிவபெருமானை அடைவதற்குரிய வழியாகவும் விதியாக வகுத்துள்ளனர்.

D1c81PAX0AAMn7G

மேலும் கோவில்களில் உள்ள கொடி மரத்தை வருடத்திற்கு ஒருமுறை ஏற்றுவதன் மூலம் அங்கு குழுமும் பக்தர்களுக்கு சிவபெருமான் அருள்பாலிப்பதாக விதியாக வகுத்துள்ளார்கள்.

இறைவனின் மூல மந்திரத்தை உச்சரித்த வண்ணம் கொடிமரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

சிவன் கோயிலில் நந்தியையும், பெருமாள் கோயிலில் கருடனையும், அம்பாள் கோயிலில் சிங்கத்தையும், முருகன் கோயிலில் மயிலையும், விநாயகர் கோயிலில் மூஞ்சுறுவையும், சாஸ்தா கோயிலில் குதிரையையும் கொடி மரத்தின் மேல்பகுதியில் அமைத்திருப்பார்கள். துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தில் திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

முஸ்லிம்களிடம் கொடிமரம் எவ்வாறு வந்தது?

அன்றைய கால கட்டத்தில் நம்மைப் போன்ற சாதாரணமான சில மனிதர் வாழ்ந்து இஸ்லாத்தின் சட்டதிட்டங்களான தொழுகை, நோன்பு, ஜகாஅத், ஹஜ், கருணை புரிதல், மக்களிடம் கனிவாக பேசுதல், அன்பு செலுத்துதல் ஆகியவற்றை கடைப்பிடித்து ஸாலிஹான மனிதராக வாழ்ந்து தூய இஸ்லாத்தை போதித்து வத்திருப்பார்!

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தொழுகையை ஒழுங்காக பேணாத, நோன்பு நோற்காத, ஜகாஅத் கொடுக்காத மார்க்கம் என்றால் அறவே தெரியாத பாமர மக்கள் அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த சில நல்ல மனிதர்களைக் கண்டு அவர்களின் மீது அன்பும் பாசமும் மரியாதையும் கொண்டு வாழ்ந்து வந்தனர்.

இந்த நல்ல மனிதர்கள் மரணித்த பின்னர்

  • அவரது ஜனாஸாவை ஒரு தனிமையான இடத்தில் நல்லடக்கம் செய்வார்கள்

  • ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி அந்த இறந்த மனிதருக்கு மரியாதை செய்வதாக கூறி அந்த மனிதரின் கப்ருக்கு மேல் கட்டிடம் கட்டுவார்கள்

  • அந்த கட்டிடத்திற்குள் அமர்ந்து ஜிக்ரு செய்வார்கள்

  • கொடி மரம் நடுவார்கள்

  • கொடி மரத்திற்கு கத்தம் ஃபாத்திஹா ஓதுவார்கள்

  • இறந்த நல்லடியாரின் பிறந்த நாள் இறந்த நாளன்று சந்தனகுட ஊர்வலம் நிகழ்த்துவார்கள்

  • இறுதியாக அந்த நபரை அவ்லியாவாக அறிவித்து அல்லாஹ்வுக்கு இணையாக கருதி வணங்க ஆரம்பித்து விடுவார்கள்

221112

அதுவே பிற்காலத்தில் தர்காஹ்க்களாக மாறி அநாச்சாரங்களின் கூடாரமாக உருவெடுத்தன. இவ்வாறு கட்டிடம் கட்டுவதற்கு இறுதி நபியாம் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விட்டுள்ளார்கள் ஏன் சபித்தும் உள்ளார்கள் ஆதாரம் இதோ!

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
உம்முஸலமா(ரலி) அபீ ஸீனியாவில் தாம் கண்ட கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அது ‘மாரியா’ என்று சொல்லப்படுகிறது. அதில் கண்ட உருவங்களையும் உம்மு ஸலமா(ரலி) குறிப்பிட்டார்கள். அப்போது நபி(ஸல்), ‘அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்‘ என்று கூறினார்கள். ஆதாரம் நூல்:புகாரி 434

 

தர்காஹ் கொடிமரம் இந்துக்களின் வழிபாட்டு முறைதான்

தர்காஹ்க்களில் ஏற்றப்படும் கொடிமரமானது இந்துக்களின் வழிபாட்டு முறையிலிருந்து காப்பியடிக்கப்பட்ட ஒரு அநாச்சார வழிபாட்டு முறையாகும் இதை மேலே நீங்கள் படித்திருப்பீர்கள்! மேலும் ஆதாரமாக நாகூர் தர்காஹ்வில் ஏற்றப்படும் கொடிமரத்தில் உள்ள கொடியின் சின்னம் பல்லி அல்லது பூரான் எனும் ஒரு பூச்சியின் சின்னமாக காட்சியளிக்கும் இதுவும் இந்துக்களின் கொடிமரத்திலிருந்து பிறந்த ஒரு முறையே ஆகும் ஆதாரம் இதோ!

SDFDS.jpg

  • அருச்சுனன் கொடியின் சின்னம் அனுமன்
  • சிவபெருமான் கொடியின் சின்னம் நந்தி
  • திருமால் கொடியின் சின்னம் கருடன்
  • வருணதேவன் கொடியின் சின்னம் அன்னம்
  • குபேரன் கொடியின் சின்னம் நரன்
  • முருகன் கொடியின் சின்னம் சேவல்
  • விநாயகன் கொடியின் சின்னம் எலி
  • இந்திரன் கொடியின் சின்னம் யானை
  • யமன் கொடியின் சின்னம் எருமை
  • துர்கை கொடியின் சின்னம் சிங்கம்
  • சனி பகவான் கொடியின் சின்னம் காகம்

images2

  • நாகூர் தர்காஹ் கொடியின் சின்னம் பல்லி அல்லது பூரான் ஒரு பூச்சி

மேற்கண்ட அநாச்சாரங்களை அறிந்த நீங்கள் அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து அல்லாஹ்வின் நல்லடியார்களாக மாற இதோ சில அருள்மறை வசனங்கள் உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கிறோம்.

உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். (குர்ஆன் 2:163)

மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராவேன். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர்வழி பெறுவீர்கள். (குர்ஆன் 7:158)

படைத்த ரப்புல் ஆலமீன் உங்களின் அருகில் இருக்கும் போது எங்கோயோ வாழ்ந்து, யாரென்றே நமக்கு அறிமுகமில்லாத மனிதர்களை குருட்டுக் குதிரை விட்டத்தில் பாய்ந்தது போன்ற முட்டாள் மனிதர்களால் அவ்லியாக்களாக அடையாளம் காட்டப்பட்டவர்களை வணங்கலாமா இதோ அல்லாஹ் உங்களுக்கு எதை போதிக்கிறான்? இதோ குர்ஆன் வசனம்

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (குர்ஆன் 2:186)

மேற்கண்ட வசனத்தை புறக்கணித்து அவ்லியாக்களிடம் உதவி தேடுவது பெறுமையடிப்பதற்கு சமமான பாவமாகும் இதை நாம் கூறவில்லை மாறாக அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் எச்சரிக்கிறான் இதோ ஆதாரம்

 “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.  (குர்ஆன் 40:60)

முடிவுரை

இந்து மத ஆகமவிதிமுறைகளின் படி கொடி மரம் என்ற அநாச்சாரம் சில கேடுகெட்ட முஸ்லிம்களின் மத்தில் ஊடுருவிய வழிகெட்ட வழிபாட்டு முறையாகும் எனவே இந்த கட்டுரையை படித்த நீங்கள் இனி ஒருக்காலும் கொடி மரத்தை நெருங்காதீர்கள் கொடி மர கத்தம் ஃபாத்திஹாவில் பங்கேற்காதீர்கள் ஏனெனில் உண்மை என்ன என்று அறிந்த பிறகும் அந்த உண்மையை புறக்கணித்து ஷிர்க்கின் பக்கம் தலைசாய்ப்பது நிரந்தர நரகத்திற்குரிய செயலாகும் இதை நாம் கூறவில்லை மாறாக அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறிவிட்டான் ஆதாரம் இதோ!

நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். நீங்கள் அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்என்றும் கூறுவீராக! (குர்ஆன் 6:57)

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! (குர்ஆன் 7:194)

 அல்லாஹ் உண்மையே கூறினான். எனவே இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்! அவர் உண்மை வழியில் நின்றார். இணைகற்பித்தவராக அவர் இருந்ததில்லைஎன்று கூறுவீராக! (குர்ஆன் 3:95)

எங்கள் பணி இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்திவைப்பதே. மார்க்கம் தடுத்த அநாச்சாரங்களை அல்லாஹ்வின் பார்வையில் எங்களால் முடிந்த அளவுக்கு தடுத்துக் கொண்டு வருகிறோம் இஸ்லாத்தை சத்தியத்தை ஏற்பதும் அதை நிராகரிப்பதும் குப்ருக்குள் மூழ்குவதும் உங்கள் கைகளில்தான் உள்ளது!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

alhamdulillah.jpg

அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

கெட்ட கனவுகளை யாரிடமும் சொல்லக் கூடாதா? ஏன்?

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

 கெட்ட கனவுகளை யாரிடமும் சொல்லக் கூடாதா? ஏன்?

111

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு

(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)

கனவுகள் பற்றி மேலே உள்ள பேனரை முன் மாதிரி முஸ்லிம் பெண்மனி என்ற முகநூல் குழுமத்தில் பதித்தோம் அந்த பதிவைக் கண்ட ஒரு சகோதரி Hannza Pinky Ahamed Lebbe அவர்கள் கீழ்கண்ட கேள்வியை கேட்டிருந்தார்கள் ஆகவே பேனரை பதித்த நான் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

சகோதரி Hannza Pinky Ahamed Lebbe அவர்களின் கேள்வி

கெட்ட கனவை யாருடனும் சொல்ல கூடாது
இதற்கான காரணத்தை சொல்ல முடியுமா? Please

பதில்:

ஒரு தகவலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டால் செவியுற்றோம் கட்டுப்பட்டோம் என்பதே சத்திய சஹாபாக்களின் வழிமுறையாக இருந்தது மாறாக எதிர்வாதம் தொடுப்பதோ கேள்விகளை அடுக்கிக் கொண்டு போவதோ இஸ்லாம் கற்றுத்தராத வழிமுறையாகும் அவ்வாறு எதிர்வாதம் புரிவது விதண்டாவாதத்திற்கு வழிகோளுவது மட்டுமின்றி எதிர்மறையான செயல்களுக்கு ஆணிவேறாக அமைந்துவிடும்.

நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! ……… (குர்ஆன் 5:101)

ஆனால், கேள்விகளை இவ்வாறு கேட்க அனுமதி உள்ளது ஆதாரமான நபிமொழி ஹதீஸா? நபிமொழி அறிவிப்பவர் எப்படிப்பட்டவர்? என்பன போன்ற கேள்விகள் நியாயமானதாக அமையும் இதனால் ஆதாரமற்ற ஊகங்களை பின்பற்றுவதிலிருந்து நாம் விலகிக் கொள்ளலாம்.

கனவுகள் என்றால் என்ன?

ஒரு மனிதன் அயர்ந்து உறங்கும் நிலையில் உள்ளத்தில் தென்படும் மாய அசைவுகளே கனவுகளாகும். கனவுகள் பற்றி குர்ஆனை புறட்டும் போது ஒரு வசனம் நம் கண்களில் தென்படுகிறது இதோ!

இவை அர்த்தமற்ற கனவுகளாகும். அர்த்தமற்ற கனவுகளின் விளக்கத்தை நாங்கள் அறிந்திருக்கவில்லைஎன்று அவர்கள் கூறினர். (குர்ஆன் 12:44)

குர்ஆனில் கூறப்பட்ட மேற்கண்ட செய்தி நபி யூசுஃப் (அலை) அவர்கள் சமூகத்தாரின் மன்னருக்கு தென்பட்ட கொழுத்த ஏழு மாடுகள் மற்றும் மெலிந்த ஏழு மாடுகள் பற்றிய கனவுகளைப் பற்றியதேயாகும்.

இச்செய்தியை நாம் படிக்கும் போது அா்தமற்ற கனவுகள் என்ற வார்த்தை அறிய முடிகிறது எனவே அர்த்தமற்ற கனவுகளுக்கு எதிராக அர்த்தமுள்ள கனவுகளும் உள்ளது உறுதியாகிறது.

அர்த்தமுள்ள கனவு என்றால் என்ன?

அர்த்தமுள்ள கனவுகள் என்பது இறைவன் புறத்திலிருந்து வரலாம் அல்லது ஷைத்தான் புறத்திலிருந்து வரலாம் இந்த கனவுகளுக்கு அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால் அந்த அர்த்தங்களுக்கு நம்மால் விளக்கம் கூற இயலாது மாறாக அவை நிஜங்களாக பலிக்கும் போது அந்த கனவுகள் அர்த்தமுள்ள கனவுகளாக நாம் அறிய முடியும்.

கனவுகளுக்கான விளக்கத்தை நபிமார்களுக்கும் இறைவன்தான் கற்றுத் தந்தான் மாறாக நபிமார்கள் கூட கனவின் விளக்கத்தில் கைதேர்ந்தவர்களாக இருக்கவில்லை ஆதாரம் இதோ

“(கனவில்) உங்களுக்கு எந்த உணவு வழங்கப்படுவதாக இருந்தாலும், அது பலிப்பதற்கு முன் அது பற்றிய விளக்கத்தை உங்களுக்கு அறிவித்து விடுவேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுத் தந்தது. அல்லாஹ்வை நம்பாத, மறுமையையும் மறுக்கின்ற கூட்டத்தின் மார்க்கத்தை (ஏற்காது) நான் விட்டுவிட்டேன்என்று அவர் கூறினார். (குர்ஆன் 12:37)

இறுதி நபியோடு நபித்துவம் முடிந்துவிட்டது எனவே கனவுகளுக்கு விளக்கம் தருகிறோம் என்று கூறும் சாதாரண ஹஜரத்துக்களையும் மனிதர்களையும் நம்பி ஏமாறாதீர்கள் இன்றைய கால கட்டத்தில் கனவுகளின் விளக்கத்தை கூறுவோர் போலிகளாகவே இருக்கிறார்கள் எனவே அர்த்தமுள்ள கனவுகளின் விளக்கங்களை அறிந்துக் கொள்ள முயற்சிக்காதீர்கள் அது விதியில் அமைந்த எளிதில் விளக்கமுடியாத இறைவனின் சோதனையேயாகும்.

அர்த்தமற்ற கனவு என்றால் என்ன?

அர்த்தமற்ற கனவுகள் என்பது உங்களைச் சுற்றி நடப்பதாகும். நீங்கள் கடுமையாக உழைத்துவிட்டு உறங்க சென்றிருப்பீர்கள் அப்படிப்பட்ட நேரத்தில் உடலின் வலியினால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் அன்றைய தினம் மனதளவில் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் கனவுகளாக வரும் உதாரணமாக:

கடுமையாக வியர்வை சிந்தி வேலை செய்திருப்பீர்கள் அன்றைய தினம் உங்கள் வேலையில் ஏற்படும் கவனக் குறைவு குறித்து உங்கள் முதலாளி உங்களை திட்டியிருப்பார்!

இந்த நிலையில் உங்கள் உழைப்பு கடுமையான உடல் வலியை கொடுத்திருந்தாலும் உங்கள் முதலாளியின் திட்டுக்கள் மனதளவில் வலியை கூட்டியிருக்கும்.

இந்த மனோ நிலையில் இறவிலோ பகலின் சிறிது நேர உறக்கத்திலோ சென்றால் காலையில் நடைபெற்ற நிகழ்வுகள் கனவுகளாக தோன்றி அதே மன உலைச்சளை கொடுக்கும் இப்படிப்பட்ட கனவுகள் அர்த்தமற்ற கனவுகள் மட்டுமல்லாது உங்கள் மன உலைச்சலுக்குரிய வேதனைகளை மூளையின் நரம்புகள் நினைவு கூறும் செயல்களுமாகும் எனவே இதுபோன்ற அர்த்தமற்ற கனவுகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்!

அர்த்தமுள்ள கனவுகளும் அதன் வகைகளும்

அர்த்தமுள்ள கனவுகள் இரண்டு வகைப்படும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவன மற்றும் ஷைத்தானின் புறத்திலிருந்து வருவன ஆகியனவாகும். அதற்கான ஆதாரம் இதோ!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஒருவர் கனவு ஒன்றைக் கண்டு அதில் எதையேனும் அவர் வெறுத்தால், அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு, ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். அப்படிச் செய்தால் அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், அதைப் பற்றி யாரிடமும் அவர் தெரிவிக்க வேண்டாம். அழகிய கனவு ஒன்றை அவர் கண்டால், அவர் ஆனந்தமடையட்டும். அதைப் பற்றி தமது நேசத்திற்குரியவரைத் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
அறிவிப்பாளர்:அபூகத்தாதா (ரலி) ஆதாரம்:நூல்:முஸ்லிம் 4552

நல்ல கனவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது அக்கனவுகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

நல்ல கனவுகள் குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரண்படாத வகையில் அமைந்திருக்கலாம் அதற்கு முபஷ்ஷிராத் நல்ல (உண்மையான) கனவு என்று பெயர்.

உதாரணமாக ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகவும் பள்ளிவாசலில் இத்திகாஃப் அமர்வதாகவும், ஏழைகளுக்கு நீங்கள் ஜகாஅத் கொடுப்பதாகவும் கூட இருக்கலாம் இப்படிப்பட்ட கனவுகளில் மார்க்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட சம்பவங்கள் மட்டுமே அமையலாம் இது நீங்கள் தெளிவு பெறுவதற்கான எனது உதாரணமே தவிர இப்படித்தான் இருக்கும் என்று என்னால் கூற இயலாது.

கெட்ட கனவுகள் என்பது ஷைத்தானின் புறத்திலிருந்து வருவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது அக்கனவுகள் கூட எப்படிப்பட்டவையாக இருக்கும் என்று சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

கெட்ட கனவுகள் குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரண்படுவதாக அமைந்திருக்கும் உதாரணமாக:

வெள்ளை ஜிப்பா போட்டு கமகமக்கும் வாசனை திரவியங்களுடன் தாடி வைத்து தொப்பி அணிந்த அழகான ஹஜரத் உங்கள் பெயரை சப்தமாக அழைப்பது போன்றும் நீங்கள் அவரைக் கண்டு வியக்கும் நேரத்தில் அந்த வெள்ளை ஜிப்பா போட்ட ஹஜரத் உங்களை நோக்கி நாகூர் தர்காஹ்விற்கு சென்று ஃபாத்திஹா ஓதிவிடு உன் கஷ்டங்கள் பரந்து ஓடிவிடும் என்பது போன்று இருக்கலாம்!

212121.jpg

இப்படிப்பட்ட கனவுகள் ஷைத்தானின் கனவுகளாகும் ஏனெனில் மனிதனின் உள்ளத்தை ஷைத்தான் எளிதில் மயக்கும் ஆற்றல் கொண்டவனாக திகழ்கிறான் எனவே உங்கள் கனவில் அழகான ஹஜரத் வந்து இறைவனுக்கு இணைவைக்க அழைப்பு விடுப்பது ஷைத்தானின் சதிவேலைகளாக கூட அமையலாம் எனவே இதுபோன்ற மார்க்கத்திற்கு முரணான முசீபத்தான கனவுகள் ஷைத்தானின் விளையாட்டுக்களாக ஷைத்தானின் புறத்திலிருந்து ஏற்படும் கனவுகளாக நாம் அறிய முடிகிறது!

கனவுகளை யாரிடமும் கூறக்கூடாதா?

நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். எனவே ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால் தமக்கு மிகவும் விருப்பமானவரைத் தவிர யாருக்கும் அதைத் தெரிவிக்கக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி) நூல்: புகாரி 7044

நல்ல கனவுகளை உங்களை மதிப்பவர்களிடம் கூறலாம் உதாரணமாக இறையச்சமுள்ள அன்புத் தந்தை, இறையச்சமுள்ள பாசமிக்க தாய், இறையச்சமுள்ள நேசத்திற்குரிய மனைவி ஆகியோராக இருக்கலாம்.

இதோ இறையச்சமுள்ள அன்பு செலுத்தும் தந்தையிடம் கூற அனுமதி!

என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்” என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக! (குர்ஆன் 12:4)

இதோ இறையச்சமுள்ள நேசத்திற்குரிய மனைவியிடம் கூற அனுமதி

ஆயிஷா(ரலி) அறிவித்தார்
என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், ‘இவர் உங்கள் (வருங்கால) மனைவி” என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) ‘இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்” என்று சொல்லிக்கொண்டேன். ஆதாரம்: நூல்: புகாரி 5125

முடிந்தவரை பெற்றோர், மனைவி, மக்கள், நட்புக்கள் ஆகியோர் இறையச்சமுள்ளோராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் கண்ட கனவை கூறினால் உங்கள் கனவுகளுக்கு மன ஆறுதலான இரண்டு வார்த்தைகள் கூறுவார்கள் எனவே கூறப்படும் செய்தி கூறப்படும் நபர்களின் இறையச்சத்தை பொறுத்தே அமைய வேண்டும்!

கெட்ட கனவுகளை யாரிடமும் சொல்லக் கூடாதா? ஏன்?

கெட்ட கனவுகள் அல்ல மாறாக நல்ல கனவுகளைக் கூட இறையச்சமற்ற நபர்களிடம் கூறக்கூடாது ஏனெனில் இறையச்சமற்ற நிலையில் வாழக்கூடிய நபர்கள் பெற்றோராகவோ, மனைவி மக்களாகவோ அல்லது நண்பர்களாகவோ இருந்தால் உங்களை இறைநிராகரிப்பு மற்றும் ஷிர்க்கின் பக்கம் அழைத்துச் சென்றுவிடுவார்கள்! உதாரணமாக!

உங்களை ஒரு வேடன் துரத்துவதாகவும் நீங்கள் பயந்து ஓடுவதாகவும் கனவு காண்பதாக வைத்துக் கொள்வோம் இதை இறையச்சமற்ற நபர்களிடம் நீங்கள் சொல்லும் போது அவர்கள் கீழ்க்கண்ட புருடாக்களை விடுவார்கள்!

  1. வாங்க நம்ம ஹஜரத்துகிட்ட போய் மந்திரிக்கலாம்!
  2. வாங்க தாயத்து கட்டுனா சரியாக போய்விடும்!
  3. தர்காஹ்வில் நேர்ச்சை செய்தால் உங்கள் முசீபத்து நீங்கலாம்!
  4. கத்தம் ஃபாத்திஹா ஓதினால் சரியாகிவிடும்!
  5. வீட்டில் உருஸ் படையல் வைத்து 100 பேருக்கு விருந்து கொடுங்க!
  6. தர்காஹ்வுக்கு நேர்ச்சை செய்துக் கொள்ளுங்கள் பலாய் நீங்கும்!
  7. ஏர்வாடிக்கு 3 வருஷம் தொடர்ந்து போங்க!
  8. கொடி மர ஃபாத்திஹாவில் கலந்துக்கொள்ளலாம்!
  9. தப்லிக் சில்லா வாங்க கவலை தீரும்!
  10. வீட்டில் சாமி மந்திரிச்ச எலுமிச்சை கட்டினா சரியாகிவிடும்!

221112.jpg

இதுபோன்று அடுக்கிக் கொண்டே போகலாம் எனவே ஷைத்தானின் தீங்கினால் ஏற்படும் கெட்ட கனவுகளை நீங்கள் இறைநம்பிக்கை இல்லாத நபர்களிடம் கூறும் போது இறைநம்பிக்கையில்லாத முஷ்ரிக்கான மனிதன் உங்களை ஷைத்தானின் மாயவலையில் வீழ்த்தி உங்களையும் மார்க்கத்தின் சட்டதிட்டங்களை உடைத்து தகர்த்தெரிய தூண்டிவிடுவான் நீங்களும் அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பி மார்க்கத்தை விட்டு வெளியேறிவிடுவீர்கள்!

எனவேதான் ஷைத்தானின் தீண்டுதலால் உருவாகும் கெட்ட கனவுகளுக்கு ஷைத்தான் உங்களை பலிகடாவாக ஆக்கி முஷ்ரிக்காக ஏன் காஃபிராக கூட மாற்றிவிடலாம் எனவேதான் கெட்ட கனவுகளை யாரிடமும் சொல்லக் கூடாது என்கிறோம்!

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது தலை வெட்டப்பட்டு அது உருண்டோடிச் செல்வதைப் போன்றும் அதைப் பின்தொடர்ந்து நான் வேகமாகச் செல்வதைப் போன்றும் கனவு கண்டேன்” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது கனவில் ஷைத்தான் உம்மிடம் விளையாடியது குறித்து நீர் மக்களிடம் தெரிவிக்காதே” என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்: 4564)

இங்கு ஒரு கிராமவாசி தான் கண்ட கெட்ட கனவுகளைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறுகிறார் இங்கு நாம் அறியும் செய்தி என்னவென்றால்

கெட்ட கனவுகளை பற்றி சொல்லும் நபர் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் ஆனால் அந்த செய்தியை அறியும் நபர் நபிகளார் (ஸல்) ஆகவே நபிகளார் (ஸல்) அவர்கள் அந்த கிராமவாசியை நேர்வழிப்படுத்துகிறார் மாறாக  வழிகெடுக்கமாட்டார் ஏனெனில் அவர் நபியாக உள்ளார்!

ஆனால் இன்று நாம் இதே போன்ற கெட்ட கனவை நம் பச்சை தலைப்பா கட்டிய ஹஜரத்துக்களிடம் கூறினால் அவர்கள் நம்மை அலேக்காக தூக்கிக் கொண்டு நாகூர், ஏர்வாடி, முத்துப்பேட்டை தர்காஹ்க்களில் அமர வைத்து மொட்டையடித்து  தாயத்து கட்டி தர்காஹ் கப்ருகளில் முட்டி போட்டு முட்டி மோதும் கப்ரு முட்டியாக்கிவிடுவார் எனவே எச்சரிக்கையாக இருங்கள்!

கெட்ட கனவோ நல்ல கனவோ உங்கள் மீது பாசம் வைத்துள்ள இறையச்சமுள்ள நபர்களைத் தவிர பிற யாரிடத்திலும் கூறிவிடாதீர்கள் அதிலும் கெட்ட கனவுகள் நபிகளாரின் அறிவுரைப்படி யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்!

அறிந்துக் கொள்ளுங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றை தெளிவாக சொல்லிவிட்டால் செவியுற்றோம் கட்டுப்பட்டோம் என்பதே சத்திய சஹாபாக்களின் வழிமுறையாக இருந்தது மாறாக எதிர்வாதம் தொடுப்பதோ கேள்விகளை அடுக்கிக் கொண்டு போவதோ இஸ்லாம் கற்றுத்தராத வழிமுறையாகும் எனவே நாமும் சத்திய சஹாபாக்களின் வழிமுறையை பின்பற்றுவோமாக நல்ல செய்திகளை மனதில் நிறுத்திக் கொள்வோமாக!

 

கேள்வி எழுப்பிய சகோதரி Hannza Pinky Ahamed Lebbe அவர்களின் சந்தேகம் இந்த பதிலின் மூலமாக தீர்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையில் கட்டுரையை முடிக்கிறேன். கேள்வி எழுப்பிய சகோதரிக்கும் நம் அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்

ஸுபுஹானல்லாஹ்

அல்லாஹு அக்பர்

அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

குறிப்பு

நான் மார்க்க அறிஞனோ அரபு மொழி பயின்ற ஆலிமோ அல்ல ஆனால் உலகில் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை உண்ணிப்பாக கவனித்து அவர்கள் பதிலளிக்கும் அழகை பின்பற்றுபவனாக இருப்பதால் என்னால் சில கேள்விகளுக்கு பதிலளிக்க இயலுகிறது. இதுவும் இறைவனின் கருணையினால்தான் நிகழ்வதாக கருதுகிறேன் எனவே என்னிலும் தவறு இருக்கலாம் அவ்வாறு தவறுகளை கண்டால் மார்க்க அறிஞர்களின் பார்வைக்கு என் விளக்கத்தை சமர்பித்து உரிய பதிலை பெற்று நானும் திருந்திக் கொள்ள வாய்ப்பு தாருங்கள்!

ஸலாம்!

என்னடா இந்த தவ்ஹீத்?

அவுஜுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!

என்னடா இந்த தவ்ஹீத்?  

(ஏன்டா தவ்ஹீது! தவ்ஹீது! என்று அலையுறீங்க?)

ta

அன்பிற்கினிய சகோதர சகோதரரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு)

(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)

கட்டுரையின் தலைப்பை பார்த்தவுடன் தவ்ஹீதின் மீது பற்றுள்ள நபர்கள் முகம் சுழிப்பதை உணர முடிகிறது வேறு வழியில்லை அவர்களின் முகத்தை சுழிக்கச் செய்ய வேண்டும் என்றுதான் இந்தக் கட்டுரையின் தலைப்பை இவ்வாறு சிந்தித்து எழுதியுள்ளோம்.

இந்தக் கட்டுரையின் இறுதியில் சுழிக்கப்பட்ட தவ்ஹீத்வாதிகளின் முகங்கள் மலர்ந்திருக்கும் என்பதில் நாம் உறுதியுடன் இருக்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

தவ்ஹீத் பொருள் விளக்கம்!

தவ்ஹீத் என்ற சொல் அல்லாஹ்வின் அழகிய பெயர்களான அஸ்மாவுல் ஹுஸ்னாவில் உள்ள வாஹித் என்ற சொல்லிற்கு மிக நெருக்கமாக உள்ளது.

வாஹித் என்பதற்கு ஒருவன், உறுதியாக ஒருவனே, ஒன்றைத் தவிர மற்றொன்று இல்லை என்பன போன்ற பல நுணுக்கமான அர்த்தங்கள் உள்ளன.

எனவே அல்லாஹ்வின் பண்புகளை குறிப்பிடும் திருநாமங்களான அவன் தனித்தவன் இணை துணையில்லாத வாஹித் என்ற பெயருக்கு மிக நெருங்கிய தொடர்டைய தவ்ஹீத் என்ற பதத்தைக் கொண்டு வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதை தெள்ளத் தெளிவாக எத்திவைக்கவே தவ்ஹீத் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது.

இதற்கு ஆணித்தனமான ஆதாரமாக விளங்கும் அருள்மறை வசனம் இதோ கீழே உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்!

01உங்கள் இறைவன் ஒருவனே. (குர்ஆன் 37:4)

02.jpg

உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். (குர்ஆன் 2:163)

எனவே தவ்ஹீத் என்ற சொல் இறைவன் இணை துணையில்லாதவன், ஏகன், ஓரிறைவன் போன்ற அர்த்தங்களைக் கொண்ட வாஹித் என்ற பெயரை பிரதிபளிக்கும் சொல்லாகவே உணர முடிகிறது. எனவே தவ்ஹீதை கேலி செய்வது ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் அழகிய பெயரான வாஹித் என்ற பெயரை கேளி கிண்டல் செய்வதற்கு சமமானதாகவே நான் கருதுகிறேன். எனவே தவ்ஹீதை கேளி கிண்டல் செய்யாதீா்கள் அவ்வாறு செய்வதாக இருந்தால் அல்லாஹ்வை கிண்டல் செய்கிறீா்கள் என்பதாக உணருங்கள்!

ஏகத்துவத்தை பறைசாற்றும் இறைவசனங்கள்

7

லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்!

தவ்ஹீத் கொள்கை அருள்மறை குர்ஆனில் ஒரு இடத்தில் இல்லை மாறாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தபட்சம் ஒரு வசனமாவது அமைந்தே தீரும் என்பது அல்லாஹ் விதித்த விதியாகும். மேலும் தெள்ளத் தெளிவாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனம் உங்கள் பார்வைக்கு இதோ சமர்பிக்கிறோம்.

03

மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராவேன். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர்வழி பெறுவீர்கள். (குர்ஆன் 7:158)

இந்த தவ்ஹீதை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?

இந்த தவ்ஹீத் ஓரிரைக் கொள்கையை மனிதர்களாகிய நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கான விளக்கத்தை நாம் கூறுவதைவிட அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனின் முதல் அத்தியாயமாகிய ஸுரத்துல் ஃபாத்திஹாவை பொருள் உணர்ந்து படிப்பதன் மூலம் அறிந்தால் இக் கொள்கையின் மகத்துவம் உணர முடியும்.

04.jpg

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

(அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

தீர்ப்பு நாளின் அதிபதி.

(எனவே) உன்னையே வணங்குகிறோம்.

உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!

அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி.

அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்களும்,  

பாதை மாறிச் செல்லாதவர்களும் ஆவர்.

(குர்ஆன் அத்தியாயம்:1–அல் பாத்திஹா)

மேற்கண்ட அத்தியாயம் அல்ஃபாத்திஹாவில் நாம் பெறும் படிப்பினை என்ன என்று சிந்தித்துப் பார்ப்போமானால் அதில் கிடைக்கும் விடைகள் தவ்ஹீதை பறைசாற்றுகின்றன இதோ ஆதாரங்கள் கீழே உங்கள் பார்வைக்கு!

  1. அல்லாஹ் மட்டும்தான் இறைவன்
  1. அல்லாஹ்வுக்கு நிகரானவன் யாருமில்லை
  1. யாருடைய உதவியுமின்றி அவன்தான் அனைத்தையும் படைத்தான் அவனுக்கு உதவியாளன் என்ற இழிவு இல்லை
  1. அவன்தான் நியாயத் தீர்ப்பு நாளான மஹ்ஷரின் அதிபதியாவான்
  1. அவனிடம் தான் நாம் உதவி தேட வேண்டும் அவனைத் தவிர யாரிடமும் உதவி தேடக் கூடாது!
  1. அல்லாஹ் தனது நபிமார்களை நேர்வழியில் செலுத்தினான் அதனால் நபிமார்களின் நேர்வழியில் நாமும் நடக்க வேண்டும்!
  1. அந்த நபிமார்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளானவர்கள் அல்ல காரணம் அவர்கள் அனைவரும் அல்லாஹ்வைத் தவிர யாரையும் எதையும் வணங்கவில்லை மேலும் தங்கள் உம்மத்தாரை அல்லாஹ்வுடன் தங்களையும் வணங்குமாறு கூறவும் இல்லை.
  1. நபிமார்கள் இறை நிராகரிப்பு அல்லது ஷிர்க் எனும் இணைவைப்பு போன்ற செயல்களில் ஈடுபடவில்லை இஸ்லாத்தின் நேரான பாதை மாறிச் செல்லவே இல்லை!

அன்பிற்கினிய சகோதரர சகோதரர்களே அருள்மறையின் இந்த முதல் அத்தியாயமான அல்ஃபாத்திஹாவின் பொருளை உணர்ந்தீர்களா அப்படியிருக்க அல்லாஹ்வுக்கு இணையாக நீங்கள் எவ்வாறு அவ்லியாக்களையும் ஷைகுமார்களையும் குருநாதாக்களையும் வலியுல்லாக்களையும் வணங்குகிறீர்கள்? அவ்வாறு வணங்குவது முதல் அத்தியாயமாகிய அல்ஃபாத்திஹாவுக்கு எதிரானதல்லவா? இதை போதிப்பதுதான் தவ்ஹீத் எனும் ஏகத்துவக் கொள்கையாகும்.

ஏன் தவ்ஹீத் தவ்ஹீத் என்று அழைய வேண்டும்?

நாங்கள் ஒன்றும் எங்கள் சொந்தக் கருத்து, ஆதாரமற்ற கற்பனைக் கொள்கையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு வழிகெட்ட ஷியாக்கள், தப்லிக்ஜமாஅத்தார் மற்றும் தர்காஹ் சுன்னத்வல் ஜமாஅத்தார் போன்று அலையவில்லை மாறாக குர்ஆனில் அல்லாஹ் கூறும் கட்டளையை நிறைவேற்ற அல்லாஹ் வகுத்த சத்தியக் கொள்கையை உயிர் மூச்சாக கொண்டே தவ்ஹீத் தவ்ஹீத் என்று அலைகிறோம் இதோ அதற்கான ஆதாரத்தை கீழே பதிக்கிறோம் படியுங்கள்!

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (குர்ஆன் 2:186)

மேற்கண்ட அருள்மறை வசனம் 2:186ல் அல்லாஹ் தன்னைப் பற்றி தன்னுடைய அடியார்களான மக்கள் விசாரிக்கும் போது தாம் அவர்களுக்கு மிக அருகில் இருப்பதாக அறிவிக்குமாறும் தம்மைத் தவிர யாரையும் வணங்கக்கூடாது என்றும் அவ்வாறு தம்மை வணங்குவதைவிட்டும் பெறுமையடிக்கும் கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவர்களுக்கும், கல், சிலை, சிலுவை மற்றும் கப்ரு அவ்லியாக்களை வணங்குபவர்களுக்கும் மிக கடுமையான தண்டனை கொடுப்பது மட்டுமல்லாமல் நிரந்தரமான நரகத்தை கொடுப்பதாகவும் எச்சரிக்கை செய்கிறான். இதோ அந்த எச்சரிக்கை!

 என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.  (குர்ஆன் 40:60)

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே மேற்கண்ட வசனத்தை நீங்கள் உணர்ந்தால் நாம் தவ்ஹீத் எனும் ஏகத்துவத்தை எதற்காக உங்களிடம் அடிக்கடி கொண்டு வருகிறோம் என்பதை சிந்திக்க மாட்டீர்களா?

அல்லாஹ் கூறும் தவ்ஹீத் ஏகத்துவக் கொள்கையை நாம் சுவனத்தை அடைய முயற்சிப்பது போன்று நீங்களும் ஏற்று நிரந்தர நரகத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற நல்லெண்ணம்தானே!

அவ்வாறிருக்க தவ்ஹீத் கொள்கையை போதிக்கும் எங்களை இழிவாக கருதுவது ஏன்?

நாங்கள் உங்கள் மீது அன்பு செலுத்தும் நிலையில் எங்களை நீங்கள் வஞ்சிப்பது எங்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது மாறாக நீங்களே உங்களுக்கே மறுமையின் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்! இதோ எங்களுக்கு மட்டுமல்ல நபிமார்களுக்கே அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் பாரீர்!

(முஹம்மதே!) இவை, உமது இறைவன் (தனது) ஞானத்திலிருந்து உமக்கு அறிவிப்பவை. அல்லாஹ்வுடன் வேறு கடவுளைக் கற்பனை செய்யாதீர்! (அவ்வாறு செய்தால்) இழிந்தவராகவும், (இறையருளை விட்டும்) தூரமாக்கப்பட்டவராகவும் நரகத்தில் வீசப்படுவீர்! (குர்ஆன் 17:39)

தவ்ஹீதை போதித்தோர் யார்?

நபி ஆதம் (அலை) அவர்களின் தவ்ஹீத் கொள்கை

(பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (குர்ஆன் 2:37)

4

நபி நூஹ் (அலை) அவர்களின் தவ்ஹீத் கொள்கை

என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்களுக்கு நாங்கள் அதை வற்புறுத்த முடியுமா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!” என்று (நூஹ்) கேட்டார். (குர்ஆன் 11:28)

4

நபி இத்ரீஸ் (அலை) அவர்களின் தவ்ஹீத் கொள்கை

இஸ்மாயீல், இத்ரீஸ், துல்ஃகிப்ல் அனைவரும் பொறுமையாளர்கள். (குர்ஆன் 21:85)

4

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தவ்ஹீத் கொள்கை

என்னைப் படைத்தவனைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நான் விலகியவன். அவன் எனக்கு நேர்வழி காட்டுவான் என்று இப்ராஹீம் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கூறியதை நினைவூட்டுவீராக! (குர்ஆன் 43:26, 27)

4

நபி யாகூப் (அலை) அவர்களின் தவ்ஹீத் கொள்கை

யாகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? “எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்?” என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்டபோது “உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்றே (பிள்ளைகள்) கூறினர். (குர்ஆன் 2:133)

4

நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச்செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச்செய்தி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப், (அவரது) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம். (குர்ஆன் 4:163)

இஸ்மாயீல், அல்யஸஃ, துல்கிஃப்ல் ஆகியோரையும் நினைவூட்டுவீராக! அனைவரும் சிறந்தோராக இருந்தனர். (குர்ஆன் 38:48)

அவருக்கு இஸ்ஹாக்கையும், யாகூபையும் வழங்கினோம். அனைவருக்கும் நேர்வழி காட்டினோம். அதற்கு முன் நூஹுக்கும், அவரது வழித்தோன்றல்களில் தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ், இஸ்மாயீல், அல்யஸஃ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். அனைவரும் நல்லோர்கள். அனைவரையும் அகிலத்தாரை விடச் சிறப்பித்தோம். (குர்ஆன் 6:84,85,86)

4

நபி லூத் (அலை) தவ்ஹீத் கொள்கை

அவரை லூத் நம்பினார். “நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.  (குர்ஆன் 29:26)

 லூத்தையும் (அனுப்பினோம்). “நீங்கள் வெட்கக்கேடான செயலைச் செய்கிறீர்கள்! அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை (குர்ஆன் 29:28)

4

நபி ஸாலிஹ் (அலை) அவர்களின் தவ்ஹீத் கொள்கை

அஞ்ச மாட்டீர்களா? என்று அவர்களிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹ் கூறியதை நினைவூட்டுவீராக! (குர்ஆன் 26:142)

4

நபி ஷுஐப் (அலை) அவர்களின் தவ்ஹீத் கொள்கை

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் தக்க சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது” என்று அவர் கூறினார். (குர்ஆன் 07:85)

4

நபி மூஸா (அலை) அவர்களின் தவ்ஹீத் கொள்கை

என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கிழைத்து விட்டீர்கள். எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள்! இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது” என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக! அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (குர்ஆன் 2:54)

4

நபி தாவூத் (அலை) அவர்களின் தவ்ஹீத் கொள்கை

“தாவூத், மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏகஇறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறுசெய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம். (குர்ஆன் 5:78)

4

நபி ஸுலைமான் (அலை) அவர்களின் தவ்ஹீத் கொள்கை

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. மேலும் (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே (ஏகஇறைவனை) மறுத்தனர். “நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!” என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. மேலும் அவர்கள் தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். “இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை” என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா? (குர்ஆன் 2:102)

சிந்திக்க சில அறிவுரைகள்

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே அல்லாஹ்வின் எண்ணற்ற நபிமார்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலும் அல்லாஹ் குர்ஆனில் பெயர் குறிப்பிட்ட சில நபிமார்களை கீழே பெயர் குறிப்பிட்டுள்ளோம் இந்த நபிமார்கள் அனைவரது கொள்கையும் ஏகத்துவம் எனும் தவ்ஹீத் கொள்கைதான் இவர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு எந்த ஒரு பொருளைக் கொண்டும் இணை வைக்கவில்லை என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்!

  • நபி ஆதம் (அலை)
    நபி நூஹ் (அலை)
    நபி இத்ரீஸ் (அலை)
    நபி இப்ராஹீம் (அலை)
    நபி இஸ்மாயீல் (அலை)
    நபி இஸ்ஹாக் (அலை)
    நபி யஃகூப் (அலை)
    நபி யூஸுஃப் (அலை)
    நபி லூத் (அலை)
    நபி ஹுத் (அலை)
    நபி ஸாலிஹ் (அலை)
    நபி ஷுஐப் (அலை)
    நபி மூஸா (அலை)
    நபி ஹாரூன் (அலை)
    நபி தாவூத் (அலை)
    நபி ஸுலைமான் (அலை)
    நபி அய்யூப் (அலை)
    நபி துல்கிஃப்லு (அலை)
    நபி யூனுஸ் (அலை)
    நபி இல்யாஸ் (அலை)
    நபி அல்யஸவு (அலை)
    நபி ஜகரிய்யா (அலை)
    நபி யஹ்யா (அலை)
    நபி ஈஸா (அலை)
    நபி முஹம்மது (ஸல்)

 அவ்லியாக்களை ஏன் வணங்கக்கூடாது? சிந்திப்பீராக!

நீங்கள் அவ்லியாவை வணங்குகிறீர்கள் காரணம் கேட்டால் அவர்கள் சத்திய உத்தமசீலர்கள் அவர்களின் வசீலாவை தேடுகிறோம் என்று கூறுகிறீர்கள்!

  • தர்காஹ் ஜியாரத் செய்கிறீர்கள்,
  • கப்ருகளை மலர்களால் அலங்கரிக்கிறீர்கள்,
  • அந்த கப்ருகளிடம் கைகளை ஏந்தி துவா கேட்கிறீர்கள்,
  • சந்தனக்குடம் எடுக்கிறீர்கள்,
  • நேர்ச்சை செய்கிறீர்கள்,
  • தாயத்து கட்டுகிறீர்கள்,

மந்திரிக்கிறீர்கள் இன்னும் இஸ்லாம் காட்டித்தராத நபிகளாரின் தாய் மண்ணாகிய மக்கா மதீனாவில் நடைபெறாத அநாச்சாரங்கள் அனைத்தையும் புதுமையான பித்அத்தான செயல்கள் அனைத்தையும் அறங்கேற்றிவிடுகிறீர்கள்

நீங்கள் இவ்வாறு செய்வதை எந்த நபியாவது காட்டித்தந்தார்களா? அல்லது குர்ஆனில் அதற்கு ஆதாரங்கள் உள்ளதா? சிந்திக்க மாட்டீர்களா? இதை கேட்டால் தவ்ஹீத்வாதிகள் என்று ஏளனம் செய்வீர்களா?

உதாரணத்திற்கு நீங்கள் வணங்கும் அவ்லியாக்கள் உங்களைப் போன்ற கப்ரு வணக்கசாலிகளாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?

அப்துல் காதர் ஜீலானி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி முஹம்மது (ஸல்)  அவர்கள் நபி ஈஸா(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி ஈஸா(அலை) அவர்கள் நபி யஹ்யா(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி யஹ்யா(அலை) அவர்கள் நபி ஜகரிய்யா(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி ஜகரிய்யா(அலை) அவர்கள் நபி அல்யஸவு(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி அல்யஸவு(அலை) அவர்கள் நபி இல்யாஸ்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி இல்யாஸ்(அலை) அவர்கள் நபி யூனுஸ்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி யூனுஸ்(அலை) அவர்கள் நபி துல்கிஃப்லு(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி துல்கிஃப்லு(அலை) அவர்கள் நபி அய்யூப்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி அய்யூப்(அலை) அவர்கள் நபி ஸுலைமான்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி ஸுலைமான்(அலை) அவர்கள் நபி தாவூத்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி தாவூத்(அலை) அவர்கள் நபி ஹாரூன்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி ஹாரூன்(அலை) அவர்கள் நபி மூஸா(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி மூஸா(அலை) அவர்கள் நபி ஷுஐப்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி ஷுஐப்(அலை) அவர்கள் நபி ஸாலிஹ்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி ஸாலிஹ்(அலை) அவர்கள் நபி ஹுத்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி ஹுத்(அலை) அவர்கள் நபி லூத்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி லூத்(அலை) அவர்கள் நபி யூஸுஃப்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி யூஸுஃப்(அலை) அவர்கள் நபி யஃகூப்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி யஃகூப்(அலை) அவர்கள் நபி இஸ்ஹாக்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி இஸ்ஹாக்(அலை) அவர்கள் நபி இஸ்மாயீல்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி இஸ்மாயீல்(அலை) அவர்கள் நபி இப்ராஹீம்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் நபி இத்ரீஸ்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி இத்ரீஸ்(அலை) அவர்கள் நபி நூஹ்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

நபி நூஹ்(அலை) அவர்கள் நபி ஆதம்(அலை) அவர்களை வணங்கியிருக்க வேண்டும் ஆனால் வணங்கவில்லையே!

இதோ ஆதாரம்

யாகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? “எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்?” என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்டபோது “உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்றே (பிள்ளைகள்) கூறினர். (குர்ஆன் 2:133)
எனவே தவ்ஹீத் இல்லாமல் இஸ்லாம் இல்லை தர்காஹ்வில் இணைவைத்து அவ்லியாக்களிடம் வசீலா தேடுவது சுத்தமான ஹராமான பாவமாக மட்டுமல்லாது நிரந்தர நரகத்திற்குரிய செயலாகும் இன்று வரை இச் செய்தி உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை இன்று கிடைத்துவிட்டது எனவே இன்றே இப்பாவச் செயல்களிலிருந்து விலகி தவ்ஹீதை ஏகத்துவத்தை இறைவன் ஒருவன் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்ற கொள்கையை ஏற்று மூமின்களாக மாறிவிடுங்கள்! அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!

 

தவ்ஹீத் கொள்கை தீவிரவாதிகளின் கொள்கையா?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் கிருஸ்தவ சமுதாயத்தினர் தங்கள் வழிபாட்டுத் தளத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது அந்த கேடுகெட்ட ஜஹ்ரான் மவ்லவி என்ற தவ்ஹீதை போதித்த மடையனால் குண்டு வைத்து கொள்ளப்பட்டனர் இந்த படுகொலையில் 300க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.

இந்த கேடுகெட்ட ஜஹ்ரான் மவ்லவி தன்னை முஸ்லிம் என்றும் தவ்ஹீத்வாதி என்றும் பொய்யை மக்களிடம் கூறிக்கொண்டு உலக பயங்கரவாத அமைப்பாகிய ISIS எனும் யுத மதவெறியர்களின் அமைப்பில் செயல்பட்டவனாவான். இந்த கேடுகெட்ட ஜஹ்ரான் மவ்லவியின் தற்கொலை படை தாக்குதலின் செயலால் மனமுடைந்த இலங்கை வாழ் முஸ்லிம்கள் தவ்ஹீதை எதிர்க்க ஆரம்பித்தனர்.

அறிந்துக் கொள்க தவ்ஹீதை போதித்த எந்த நபியாவது மக்களை கொன்று குவித்தார்களா? அல்லது மக்களிடம் அடி உதைபட்டு தங்கள் உயிர்களை இழந்தார்களா? இதோ தவ்ஹீதை போதித்த நபிமார்கள் பொதுமக்களால் கொல்லப்பட்ட செய்தி அறிவீர்களாக!

அல்லாஹ் அருளியதை நம்புங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால்எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்துவதாகவும் இருக்கிறது. “நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?” என்று (முஹம்மதே!) கேட்பீராக! (குர்ஆன் 2:91)

 அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும், எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன என்று கூறியதாலும், (இதற்கும்) மேலாக அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும் அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர். (குர்ஆன் 4:155)

இதோ இஸ்லாம் சக மனிதர்களை கொலை செய்ய தூண்டும் மார்க்கமா?

கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்என்றும், ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர். (குர்ஆன் 5:32)

 அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்! அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பாளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் (சட்டத்தின் மூலம்) உதவி செய்யப்பட்டவராவார். (குர்ஆன் 17:33)

சமாதானத்தை போதிக்கும் இஸ்லாம்

மாற்றுமதத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்க மறுத்தாலோ அல்லது இஸ்லாத்தை இழிவுபடுத்தினாலோ அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று இஸ்லாமும் போதிக்கவில்லை மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் போதிக்கவில்லை மாறாக உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு என்றே சமாதானமாக விலக வலிறுத்தியுள்ளனர் ஆதாரம் இதோ!

(ஏகஇறைவனை) மறுப்பவர்களே!” நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” எனக் கூறுவீராக! (குர்ஆன் 109:1, 2, 3, 4, 5, 6)

ஜஹ்ரான் மவ்லவி தவ்ஹீத்வாதி அல்ல மாறாக நிரந்தர நரகவாதி

இலங்கை முஸ்லிம்கள் இன்று வாழ்வதற்கு வழியின்றி சொந்த நாட்டில் அவமானப்படுத்தி வாழ்வாதாரம் இழந்து தவிப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் அந்த கேடுகெட்ட ஜஹ்ரான் மவ்லவியே ஆவான் இவன் முஸ்லிமே அல்ல மாறாக காஃபிர்களை விட கேவலமான ஈனப்பிறவியாவான்.

அறிந்துக் கொள்ளுங்கள் ஒரு முஸ்லிம் தற்கொலை செய்துக் கொள்வது மாபெரும் பாவங்களில் ஒன்றான மன்னிக்க முடியாத நிரந்தர நரகத்திற்குரிய பாவமாகும் அதை இந்த கேடுகெட்ட ஜஹ்ரான் மவ்லவி செய்ததன் மூலமாக அவன் நிரந்தர நரகவாதி என்ற முடிவுக்கு நாம் வரலாம் மேலும் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய கொலைகார பாவியாகவே நாம் கருத இயலும்! இதோ இவனைப் போன்ற கொலைகார பாவிகளை எச்சரிக்கும் நபிமொழி!

இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டே ஒரு மனிதரைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது காயம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எவரைக் குறித்து, ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று குறிப்பிட்டீர்களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்துவிட்டார்’ என்று கூறப்பட்டது. அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘அவர் நரகத்திற்கே செல்வார்’ என்று (மீண்டும்) கூறினார்கள். மக்களில் சிலர் (நபி(ஸல்) அவர்களின் இச்சொல்லை) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது, ‘அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவர் கடும் காயத்திற்கு ஆளானார். இரவு வந்தபோது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்தார்’ என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘அல்லாஹ் மிகப் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன் என்பதற்கு நானே சாட்சி கூறுகிறேன்’ என்று கூறினார்கள். பிறகு, பிலால்(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் மக்களிடையே, ‘முஸ்லிமான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகிறான்’ என்று பொது அறிவிப்பு செய்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி 3062

நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)’ என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: அனஸ்(ரலி) ஆதாரம்: நூல்: புகாரி 2653

 

தவ்ஹீத் மற்றும் தவ்ஹீத்வாதிகளின் நிலை என்ன?

தவ்ஹீத் எனும் ஏகத்துவம் மற்றும் தவ்ஹீதை பின்பற்றக்கூடிய தவ்ஹீத்வாதிகளின் நிலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நிலையைப் போன்றதாகவே இருக்க வேண்டும்!

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய எதிரிகளிடம் கூட பரிவு காட்டிய மிக நற்குணம் கொண்டவராவார், சத்தியத்தை எத்திவைக்க பல்வேறு அடி உதைகளை பட்டு, கடவாய் பற்கள் உடையும் அளவுக்கு இன்னல்கள் பட்டு சத்திய சன்மார்க்க நெறிமுறைகளை இஸ்லாத்தை ஏகத்துவத்தை தவ்ஹீதை எத்திவைத்த இறுதித் தூதரும் கியாம நாள் வரைக்கும் உள்ள சமுதாயத்திற்குரிய நபியுமாவார் எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போன்றே ஒவ்வொரு தவ்ஹீத்வாதியின் நிலையாக இருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை!

முடிவுரை!

தன்னை கடவுளாக வணங்காதவர்களின் மாறு கை மாறு கால்கள் துண்டிக்கும் துணிச்சல் பெற்ற ஃபிர்அவ்ன் மன்னனிடம் தவ்ஹீதை போதித்தவர் நபி மூஸா (அலை) அவர்களாவார்கள் அதே போன்று நம்ரூத் என்ற கொடிய மன்னன் தன்னை நெருப்பில் பொசுக்கினாலும் தவ்ஹீதை போதிப்பேன் என்று மரணத்தின் விளிம்பு வரை சென்று இக்லாஸ் எனும் உளத்தூய்மையோடு வாழ்ந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாரிசுகள் நாங்கள் எனவே தவ்ஹீதை நீங்கள் எதிர்ப்பதாக இருந்தால் எங்கள் மாறு கை மாறு கால்கள் வெட்டினாலும், எங்களை நெருப்பில் பொசுக்கினாலும் நாம் துளி அளவு கூட அச்சப்படமாட்டோம் மாறாக உங்களின் கொடுமைகளை இன்னல்களை சகித்துக் கொள்வோம் நாம் பொறுமையாளர்களாகவே வாழ்வோம் எந்த உயிரினத்திற்கும் கேடு விளைவிக்கவோ அநியாயமாக கொலை செய்யவோமாட்டோம் என்பதாக அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறோம்!

எனவே இலங்கை போன்ற நாடுகளில் தவ்ஹீதை அழிக்க துடித்தால் அவர்கள் தவ்ஹீதை அழிக்க முயலவில்லை மாறாக அல்லாஹ்வின் கொள்கைகளை, அனைத்து நபிமார்களின் ஏகத்துவ பிரதான தவ்ஹீத் கொள்கையை குழிதோன்டி புதைக்கவே நாடுகிறார்கள் என்பதாக கருதிக் கொள்ளுங்கள்!

(ஈஸாவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன். (குர்ஆன் 3:54)

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்தனர். அவர்களின் சூழ்ச்சி மலைகளைப் புரட்டுவதாக இருந்தபோதும் அந்த சூழ்ச்சி (வெல்வது) அல்லாஹ்விடமே உள்ளது. (குர்ஆன் 14:46)

(முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏகஇறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான் சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன். (குர்ஆன் 8:30)

இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் இஸ்லாமிய, கிருஸ்தவ, இந்து, பௌத்த இன மொழி பேசும் மக்கள் என்றும் போல் அன்போடும் பண்போடும் பாசத்தோடும் வாழ வேண்டும் என்றே அல்லாஹ்விடம் ஒரு தவ்ஹீத் கொள்கையை கடைபிடிக்கும் இறைவனின் அடிமையாக துவா செய்கிறேன்! கொள்கைகள் வேறாக இருக்கலாம் ஆனால் மனிதம் என்பது ஒன்றுதான் எனவே இலங்கை தேரர்கள் ஒரு கேடுகெட்ட அயோக்கிய மனிதனை மனதில் வைத்துக் கொண்டு அப்பாவி முஸ்லிம்களை சித்ரவதை செய்வதை நிறுத்திக் கொண்டு சமாதான உடன்படிக்கைகளை மேற்கொள்ளுமாறு மிக்க சகோதர பாசத்துடன் கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு

தவ்ஹீதை கேலி செய்வது ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் அழகிய பெயரான வாஹித் என்ற பெயரை கேளி கிண்டல் செய்வதற்கு சமமானதாகவே நான் கருதுகிறேன்!

தவ்ஹீதை வெறுப்பவன் அல்லாஹ்வை வெறுத்துவிட்டான் என்பதாகவே நாம் கருத இயலும்!

தவ்ஹீத் எனும் ஏகத்துவ ஓரிரை கொள்கைதான் இஸ்லாத்தின்  அடிப்படையான கொள்கையாகும் அந்த ஓரிரை தவ்ஹீதை வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்குவது இஸ்லாம் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்குவதற்கு சமமான பாவமாகும்

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யெனக் கருதியவனை விட அநீதி இழைத்தவன் யார்? (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா? (குர்ஆன் 29:68)

 

அல்ஹம்துலில்லாஹ்!

ஸுபுஹானல்லாஹ்!

அல்லாஹு அக்பர்!

அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

இக்கட்டுரையில் குற்றம் குறை இருப்பின் குர்ஆன் ஹதீஸ் முறைப்படி விளக்கிக் கூறவும் இறைவன் நாடினால் திருத்திக் கொள்கிறேன்.

நாம் மட்டும் தவ்ஹீத் எனும் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டு சுவனம் புகுவது முறையல்ல மாறாக நம்மை சார்ந்தவர்களும் இக்லாஸ் எனும் உளத்தூய்மையுடன் இஸ்லாத்தின் புனிதமான கொள்கைகளை மக்களுக்கு புரியவைப்பதுடன் அவர்களை நேர்வழிக்கு அழைத்துச் செல்ல அழைப்பு விடுப்பதும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் கொள்கையாகும். எனவே தவ்ஹீத் எனும் ஏகத்துவவாதிகளாகிய நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாரிசுகளாவோம் எங்கள் தந்தை எவ்வாறு ஏகத்துவத்தை எட்டுத்திக்கும் எத்திவைத்தார்களோ அவ்வாறே நாமும் தவ்ஹீத் எனும் ஓரிரைக் கொள்கைகையை மக்களிடம் கொண்டு செல்வோம் மக்களின் உள்ளத்தை கொள்ளையடிப்போம் அதனால் ஏற்படும் இன்னல்களை சகிப்போம்! (இன்ஷ அல்லாஹ்)

 

முபாஹலா மனிதனுக்கு உரியதா?

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

 முபாஹலா மனிதனுக்கு உரியதா?

(முபாஹலா என்றால் என்ன? எதற்கு?)

mubahala

முன்னுரை

அன்பிற்கினிய என் தீன்குல சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு

(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)

சமீப காலமாக தமிழக முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் பரவலாக காணப்படும் பேசப்படும் வார்த்தைதான் முபாஹலா என்பதாகும். இந்த முபாஹலாவில் அப்படி என்னத்தான் மர்மம் மறைந்துள்ளது இதை முழுவதுமாக அறிந்துக் கொள்ள இக்கட்டுரையை முழுவதுமாக கவனமாக படிக்கவும்!

முபாஹலா பொருள் விளக்கம்

அல்முபாஹலா (المباهلة‎) என்ற வார்த்தை பலாஹ் என்ற அரபு வார்த்தையிலிருந்து பிறந்தது. பலாஹ் என்பதற்கு சாபம் என்று பொருளாகும். மேலும் அல்பலாஹ் என்ற வார்த்தைக்கு தண்ணீர் பற்றாக்குறை என்றும் பொருள்படுவதாக அறிய முடிகிறது.

முபாஹலா என்பதற்கு இறைவன் மனிதனுக்கு அருளிய அருட்கொடைகளை அதாவது (இறைவனின் அருளை) வேண்டாம் என்று திருப்பிவிடுதல் என்பதை குறிக்கும். அதாவது உண்மை பேசுபவர் மற்றும் பொய் பேசுபவர் இருவரில் யார் என்பதை இறைவனின் பார்வையில் ஒப்படைத்து பொய் பேசுபவர் முபாஹலா எனும் சாப அழைப்பின் மூலமாக தன்னை நிரபராதி என்று காட்டிக் கொள்ளும் நயவஞ்சக வழிமுறையேயாகும்.

இந்த நயவஞ்சகத்தின் காரணமாக இறைவனின் அருளை அவன் தேவையற்றதாக கருதுவதுடன் முஸ்லிம் என்ற அந்தஸ்தை இழக்கிறான். சிந்தித்துப் பாருங்கள் இறைவனின் கருணையும் அருளும் வேண்டாம் என்று எந்த முஸ்லிமாவது கூறுவானா? அவ்வாறிருக்க பொய்யான மனிதர் தாம் பரிசுத்தமானவன் என்று காட்டிக் கொள்வதற்காக இறைவன் அருளை தம்மீது நீங்க அழைப்பு விடுப்பது காஃபிர்களின் செயல்கள் அல்லவா? அவன் எவ்வாறு முஸ்லிமாக முடியும்.

முபாஹலாவின் வரலாறு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த இறைத்தூதர் ஈஸா (அலை) ஆவார்கள். இந்த ஈஸா (அலை) அவர்களை மையமாக வைத்தே இந்த முபாஹலா என்ற நிகழ்வு நடக்கிறது. இதோ அதை பறைசாற்றும் திருக்குர்ஆன் வசனம்!

அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து ‘ஆகு’ என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார். (குர்ஆன் 3:59)

முஸ்லிம்களாகிய நாம் நபி ஈஸா (அலை) அவர்களை இறைவனின் திருத்தூதரர்களில் ஒருவராக, ஒரு மனிதராக, மர்யமின் அழகிய மகனாக, இறைவனின் வல்லமையால் எவ்வாறு தந்தையின்றி ஆதம் நபி படைக்கப்பட்டாரோ அதே பாணியில் தந்தையின்றி மர்யமின் கருவரையில் படைக்கப்பட்டதாக கருதுகிறோம்.

ஆனால் கிருஸ்தவர்கள் இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களை தேவ குமாரன் என்றும், பரமபிதாவாகிய தேவன் (அல்லாஹ்வுக்கும்) மர்யம் (அலை) அவர்களுக்கும் பிறந்த குழந்தையாகவும் இறைவனுக்கு நிகரான ஆற்றல் கொண்டவர் என்றும் தேவனுடைய வாரிசு என்றும் காலம் காலமாக கூறி வந்தனர் இன்றும் அவ்வாறே கூறிவருகின்றனர். இச்செய்தி நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும் இருந்தது!

jes.jpg

கிருஸ்தவர்களின் மேற்கண்ட பொய்யான செய்தியை மறுத்து தேவனாகிய அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் வஹி எனும் இறைச் செய்தி மூலம் மறுக்கிறான் மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அச்செய்த உண்மை என்று நம்பிவிடாதவாறு கடுமையான எச்சரிக்கையும் செய்கிறான்! இதோ அந்த குர்ஆன் வசனம்!

இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவராக நீர் ஆகாதீர்! (குர்ஆன் 3:60)

 மேற்கண்ட வசனத்தில் நாம் அறியும் செய்தி என்ன?

கிருஸ்தவ அறிவீனர்கள் தமது இறைவனுக்கு மகனை ஏற்படுத்தி ஏசு எனும் ஈஸா நபியை தேவகுமாரனாக அல்லாஹ்வின் மகனாக கற்பனை செய்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மீது அபாண்டமான பொய்யை சுமத்தி அவனது பரிசுத்தத்தை இழிவுபடுத்தி விட்டனர்.

முபாஹலா எப்போது நிகழ்ந்தது

நபிகள் நாயகம் (ஸல்) இறைவனின் இறுதித்தூதர் என்ற அறிவிப்பு வஹியாக அறிவிக்கப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜரத் செய்த 9ம் ஆண்டு இச் சம்பவம் நிகழ்கிறது.

முபாஹலா ஏன் நிகழ்ந்தது?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிருஸ்தவர்கள் வாழும் பகுதியான நஜ்ரான் தேசத்து தலைமை மதகுரு அப்துல் ஹாரிஸ் இப்னு அல்கமா என்பவருக்கு ஹிஜ்ரி 9ம் ஆண்டு ஒரு கடிதம் எழுதுகிறார். இவர் அன்றைய கால கட்டத்தில்  ஹிஜாஜ் எனப்படும் பகுதியின் ரோமானிய கிருஸ்தவ தேவாலய சபையின் தலைமை பீடாதிபதியாவார்.

நபிகளார் எழுதிய அந்த கடிதத்தில் ஏக இறைவனாகிய அல்லாஹ் அகிலங்கள் அனைத்திற்கும் இறைவன் என்றும் தாம் அவனுடைய இறுதித்தூதர் என்றும் இறைவனின் அறிவுரைப்படி அங்குள்ள மக்கள் அனைவரும் சத்திய சன்மார்க்க மார்க்கமாகிய இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் படியும் அழைப்புக் கடிதம் வரைந்தார்.

இந்த கடிதத்திற்கு பதில் அளிகும் முகமாக நஜ்ரான் நாட்டு கிருஸ்தவ தலைமை பீடாதிபதி ஒரு குழுவை அனுப்பி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுப்பினான். இச்சம்பவம் கிபி.632 (ஹிஜிரி 10ம் ஆண்டு துல்ஹஜ் மாதம்) நிகழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.

இந்த நஜ்ரான் நாட்டு கிருஸ்தவ அறிஞர் குழு நபிகளாரிடம் வந்து ஏசு எனும் ஈஸா (அலை) அவர்களைப் பற்றிய பல்வேறு கருத்துக்களை கூறுவதுடன் அவர்தான் தேவனுடைய உண்மையான குமாரன் என்று வாதாடவும் செய்கிறார்கள்.

இந்த பொய்யான செய்தியை மறுப்பு தெரிவித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த நஜ்ரான் தேசத்து கிருஸ்தவ அறிஞர் குழுவினருக்கு உண்மையை போதித்து விட்டு இஸ்லாத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்ள அறிவுரை கூறுகிறார். ஆனால் இந்த கிருஸ்தவ அறிஞர்கள் குழு இந்த அழைப்பை ஏற்க மறுத்து தங்கள் மடமையான வாதத்தில் நபிகளாரிடம் தர்க்கம் மேற்கொள்கின்றனர்.

இறைவன் இணை துணையில்லாதவன், அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை யாரையும் பெறவுமில்லை என்ற பரிசுத்தத் தன்மையை ஏற்க மறுத்த கிருஸ்தவர்களுடன் நபிகளாருக்கு ஏற்பட்ட தர்க்கம் மற்றும் மன உலைச்சலைக் கண்டு இறைவனாகிய அல்லாஹ் கீழ்க்கண்ட அருள்மறை வசனத்தை வஹியாக இறக்குகிறான்!

உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் “வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்” எனக் கூறுவீராக! (குர்ஆன் 3:61)

முபாஹலா நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

முபாஹலாவுக்கு முன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்ட குர்ஆன் 3:61) வசனத்தை தெளிவாக அறிவிக்கிறார்கள் பிறகு மிக நீண்ட கலந்துரையாடல்களை நிகழ்த்துகிறார்கள் ஆயினும் கிருஸ்தவ அறிஞர் குழுவினருடன் உடன்பாடு எட்டப்படவில்லைட. இறுதியில் முபாஹலா பிரகடனத்தை நபிகள் நாயகம் (ஸல்) முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்தவர்கள் மத்தியில் அறிவிப்பு செய்கிறார்கள்!

இந்த அறிவிப்பை கேட்டுக் அதிர்ந்த கிருஸ்தவ அறிஞர் குழு தம்முடைய முகாம்களுக்கு திரும்பிவிடுகிறது. இந்த குழுவினர் அவர்களின் தலைவர்களான அல்சய்யீத் மற்றும் அல் அகீப் ஆகிய இருவரை முபாஹலாவிற்கு அனுப்புகிறார்கள்.

முபாஹலாவிற்கான நாளாக துல்ஹஜ் மாதம் 24ம் தேதி குறிக்கப்படுகிறது இஸ்லாமிய சபையின் சார்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவன் கூறியவாரே தன் குடும்பத்தாரோடு வருகிறார்.

முபாஹலா நிகழ்ச்சியில் பங்கேற்றோர் யார் யார்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வரவில்லை மாறாக தேர்ந்தெடுத்த சில நபர்களை மட்டுமே அழைத்து வருவதாக வரலாறு கூறிப்பிடுகிறது!

துல்ஹஜ் மாதம் 24ம் நாள் குழந்தை ஹுசைன் (ரலி) அவர்களை தூக்கிக் கொண்டும் ஹசன் (ரலி) அவர்களை தனது ஒரு கையில் பிடித்துக் கொண்டும் மருமகனார் அலி (ரலி) மற்றும் அன்பு மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) குறித்த நேரத்தில் வந்து விடுகிறார்கள். இந்த செயலைக் கண்டவுடன் கதிகலங்கி நின்ற நஜ்ரான் நாட்டு கிருஸ்தவ அறிஞர் குழு பயத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் முழிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு தரப்பினரையும் முபாஹலாவிற்கு தயாராகும்படி அறிவிப்பு செய்துவிட்டு தங்களுடைய மேல் அங்கிகளை போர்த்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். இறுதியாக இறைவனுக்கு கீழ்ப்படிந்து தாங்கள் பொய்யர்களாக இருக்கும் பட்சத்தில் இறைவனின் சாபம் இறங்க பிரார்த்திக்குமாறு அறிவுறுத்துகிறார்.

திடீரென கிருஸ்தவ அறிஞர் குழுவின் தலைவரான அப்துல் ஹாரீஸ் இப்னு அல்கமா தன் குழுவினரை நோக்கி முபாஹலாவிலிருந்து விலகிவிடுமாறு கட்டளை பிறப்பிக்கிறார். ஏன் எதற்கு இதோ ஆதாரம்!

ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார்
ஆகீப், சையித் எனும் நஜ்ரான் நாட்டுக்காரர்கள் இருவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘முபாஹலாசாபப் பிரார்த்தனைசெய்வதற்காக வந்தனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், ‘நீ அவ்வாறு செய்யாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் உண்மையிலேயே இறைத்தூதராக இருந்து; நாம் சாபப் பிரார்த்தனை செய்துவிட்டோமானால் நாமும் உருப்பட மாட்டோம்; நமக்குப் பின்வரவிருக்கும் நம் சந்ததிகளும் உருப்படமாட்டார்கள்என்று கூறினார். (பிறகு) இருவரும் சேர்ந்து (நபி(ஸல்) அவர்களிடம்), ‘நீங்கள் எங்களிடம் கேட்கிறவற்றை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுடன் அனுப்புங்கள். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரைத் தவிர வேறெவரையும் எங்களுடன் அனுப்பவேண்டாம்என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள், ‘அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்களே! எழுந்திருங்கள்என்று கூறினார்கள். அவர் எழுந்து நின்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர்என்று கூறினார்கள். (ஆதாரம் புகாரி
4380 Volume :5 Book :64)

 

முபாஹலாவில் ஏற்பட்ட ஓர் ஒப்பந்தம்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முபாஹலாவிற்கு தயக்கம் காட்டிய நஜ்ரான் தேசத்து கிருஸ்தவ அறிஞர் குழு முபாஹலாவிலிருந்து விலகிவிடுகிறது.

ஆனால் கிருஸ்தவர்களின் இந்த நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்த நபிகளார் (ஸல்) அவர்கள் இரண்டு வகையான ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு ஏவுகிறார்.

  • நஜ்ரான் நாட்டு மக்கள் இஸ்லாத்தை தங்கள் மார்க்கமாக ஏற்க வேண்டும்

அல்லது

  • ஜிஸ்யா வரியை (இஸ்லாமிய நட்டிற்கு மாற்றுமதத்தவர்கள் செலுத்தும் வரி) செலுத்த வேண்டும்.

நஜ்ரான் நாட்டு கிருஸ்தவ அறிஞர்கள் குழு இஸ்லாத்தை தழுவ விரும்பவில்லை மாறாக ஜிஸ்யா வரியை கட்டுவதற்கு உடன்பட்டு முபாஹலாவிலிருந்து பின்வாங்கி ஓடிவிடுகிறார்கள்.

இறுதியாக இந்த முபாஹலா நிகழாமல் போகிறது மேலும் முபாஹலாவின் உடன்படிக்கை மூலமாக அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிஸ்யா வரி வசூலிக்கும் நம்பிக்கைக்குரிய நபராக நியமிக்கிறார்கள்.

முடிவுரை

முபாஹலா ஏன் ஏற்பட்டது? என்பதற்கான காரணம் பற்றி அறிவோமானால் அது இறைவனின் பரிசுத்தத்தை நிறூபிக்க நிகழ்ந்த ஒரு சம்பவமாகவே குர்ஆன் ஹதீஸ்கள் மூலம் உணர முடிகிறது மாறாக தனி மனிதர்களுக்காக முபாஹலா நடைபெறவில்லை.

முபாஹலாவை மனிதர்கள் நிகழ்த்தலாமா?

இன்று தமிழக முஸ்லிம்களிடையே முபாஹலா என்ற சாப அழைப்பு நிகழ்த்தப்படுகிறது இது மார்க்கத்திற்காக நடத்தப்படாமல் மாறாக தங்களின் பரிசுத்தத்தை நிறூபிக்கவே நிகழ்த்துகிறார்கள்! கவனமாக சிந்திக்க!

  • முபாஹலா ஓர் இறை கட்டளையாகும்!
  • நபிகளார் (ஸல்) அவர்களுக்கு முபாஹலா அறிவிப்பு செய்ய கட்டளையிட்டவன் இறைவனாவான் மாறாக நபிகளார் (ஸல்) தாமாக இதை நிகழ்த்தவில்லை காரணம் நற்குணமுள்ள நபிகளார் (ஸல்) அவர்கள் இறைவனுடைய சாபத்தை மக்களுக்கு ஏற்பட விரும்புவாரா? எனவே இறை கட்டளைக்கு பணிந்து இறை கட்டளையை நிறைவேற்றவே அவர் அறிவிப்பு செய்தார்!
  • இறைவனின் பரிசுத்த தன்மையை உணர்த்தவே முபாஹலா அறிவிப்பு செய்யப்பட்டது!

சிந்திக்கமாட்டீர்களா?

இன்று சில மார்க்க அறிஞர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் அவர்கள் அந்த பெண்களுடன் உடலுறவில் இணைந்தார்களா? முத்தம் கொடுத்தார்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி முபாஹலா நிகழ்த்தப்படுகிறது! இது முற்றிலும் தவறான செயலாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு கூறும்போது மனம் வேதனைப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முபாஹலா அறிவிப்பு ஏதேனும் செய்தார்களா? அப்படி ஒரு ஹதீஸ் இருந்தால் எடுத்துக் கூறவும் நாமும் இந்த முபாஹலா நிகழ்ச்சிகளை வரவேற்கிறோம்!

அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வின் கண்ணியத்தை நிறுபிப்பதற்காக அல்லாஹ்வின் பரிசுத்தத்தை பறைசாற்றவதற்காக நிகழ்த்தப்பட்ட இந்த முபாஹலாவை நபிகளார் (ஸல்) தன் அன்பு மனைவி ஆயிஷா (ரலி)யின் அவதூறை தகர்த்தெரிவதற்காக பயன்படுத்தாத பொழுது இன்றைக்கு அந்த தாயி, இந்த தாயியின் பெயரில் விபச்சார அவதூறை எதிர்க்க முபாஹலா நடத்துவது, நோன்பு கஞ்சி ஊழல் என்று கூறி முபாஹலா நடத்துவது இழிவான செயல்கள் இல்லையா?

எச்சரிக்கை

எவர் தம்மை அல்லாஹ்வைப் போன்று பரிசுத்தத்தை காட்டுவதற்காக முபாஹலா செய்கிறார்களோ அவர்கள் தம்மை அல்லாஹ்வின் அந்தஸ்திற்கு உயர்த்திக் கொள்கிறார்கள்! மேலும் அல்லாஹ்வுக்கு இணைவைத்த ஷிர்க் எனும் பாவத்திற்கு நிகரான பாவத்தை மேற்கொள்கிறார்கள்.

நபி யூஸுஃப் (அலை) அவர்கள் மீது விபச்சார பட்டம் சூட்டப்பட்டு அவமானப்படுத்தப்படும் போது அவர் தமக்காக முபாஹலா நிகழத்திக் காட்டினாரா அல்லது தம்மைத்தாமே பரிசுத்தவானாக அறிவித்தாரா? இதோ

எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத்தான் அதிகம் தூண்டுகிறது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” (என்றும் கூறினார்). (குர்ஆன் 12:53)

நபி யூஸுஃப் (அலை) அவர்களின் மீதான விபச்சார குற்றச்சாட்டுக்கு நிகழாத முபாஹலா!

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீதான விபச்சார குற்றச்சாட்டுக்கு நிகழாத முபாஹலா!

இன்றைய கால கட்டத்தில் சாதாரணமான மனிதர்களின் விபச்சார குற்றச்சாட்டுகளுக்கும் அமைப்பின் பொருளாதார மோசடிகளுக்கும் எதிராக முபாஹலா நடைபெறுவது அதுவும் கஞ்சி வசூல் மோசடிக்காக எல்லாம் முபாஹலா நடைபெறுவது அல்லாஹ்வை இழிவாக்கும் இழி செயல் அல்லாமல் வேறு என்னவாக இருக்கும்!

நீங்கள் சத்தியமான நேர்வழியில் இருப்பவர்களானால் அல்லாஹ் கூறிய முறைப்படி கிருஸ்தவர்களுக்கு எதிராக நபிகளார் (ஸல்) அவர்கள் நிகழ்த்திக் காட்டிய இயேசு தேவகுமாரன் இல்லை என்ற ஒரே கருத்திற்கு மட்டும் இன்றும் முபாஹலா நடத்துங்கள் அதற்கு ஆதாரமாக குர்ஆன் ஹதீஸ்கள் உள்ளன மாறாக தனிமனிதர்களுக்காக ஜமாஅத் மோசடிகளுக்காக முபாஹலா அறிவிப்பு செய்வது அறிவீனத்திலும் அறிவீனமேயாகும்!

ஒரு முஸ்லிம் பொய்யனாக இருந்துக் கொண்டு மனிதர்களை ஏமாற்ற முபாஹலா நிகழ்தி இறைவனின் அருளை அவன் தேவையற்றதாக கருத முற்பட்டால் அவன் தானாகவே முஸ்லிம் என்ற அந்தஸ்தை இழக்கிறான் காஃபிராக மாறிவிடுகிறான் என்பதாகவே என்னால் கூற இயலும்! எனவே முபாஹலாவை தனி மனிதர்களுக்கு நிகழ்த்திக் காட்டி காஃபிர்களாக மாற்றிவிடாதீர்கள் சகோதரத்துவத்தை பேணுங்கள்!

முபாஹலாவில் உங்கள் சொந்த கதை சோகக்கதைகளுக்கும் பொருளாதாரா விபச்சார குற்றச்சாட்டுகளுக்கும் நிகழ்த்தாதீர்கள்!

ஒவ்வொரு வினாடியும் பாவச்சுமை ஆணிவேராக அமையும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு விரைவாக இறைவனின் முன் சரணடைந்து மன்னிப்பு கோரி திருந்தி வாழ முயற்சி செய்யுங்கள்! முபாஹலா உங்கள் பாவக்கரைகளுக்கு தீர்வாகாது!

அல்லாஹ் அருளாளன், அன்பாளன், நுண்ணறிவாளன், உண்மையே பேசுபவன், என்றும் நிலைத்திருப்பவன்!

அல்லாஹ் மஹ்ஷருக்கும் அதிபதி மறவாதீர்!

அல்லாஹ்வின் முன் சரணடைவதை நாம் பாக்கியமாக கருதுகிறோம் இந்த பாக்கியம் உங்களுக்கும் தேவைப்படுமாயின் செய்த தவறை பகிரங்கமாக அல்லாஹ்வின் முன் சமர்ப்பித்துவிட்டு சரணடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

அன்புடன் 

சிராஜ்அப்துல்லாஹ்

குறிப்பு

பல்வேறு மார்க்க அறிஞர்களின் ஆய்வுகளை படித்து எனது சிந்தனையை உட்புகுத்தியே இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது எனவே மார்க்க அறிஞர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக மேலும் எனது சிந்தனையில் குறையிருப்பின் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில் எடுத்துக் கூறுங்கள் நியமான கருத்தாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்! (இன்ஷா அல்லாஹ்)

நானும் மார்க்க கல்வி ஆலிம் கல்வி கற்க முடிவெடுத்துள்ளேன் எனக்கும் மார்க்க கல்வி ஞானம் கிடைக்க இறைவனிடம் துவா செய்யவும் அதன் மூலம் மிக அதிகமான சிந்தனைத் திறனை அரபு இலக்கண விளக்கவுரையில் செலுத்தி என்னால் முடிந்த அளவுக்கு மக்களிடம் கற்ற கல்வியை உண்மையை (இன்ஷா அல்லாஹ்) எடுத்துச் செல்வேன் என்பதாக இறைவனை சாட்சியாக வைத்து உறுதியளிக்கிறேன்!

 

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அல்லாஹ் 

பொறுமையாளர்களுடன் இருக்கிறான்!

sss.jpg

அன்பிற்கினிய நம்பிக்கை கொண்ட சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  பரக்காத்தஹு

(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)

பொறுமை என்பது மனிதனுக்குரிய பொக்கிஷங்களில் தலையாய பொக்கிஷமாகும்! பொறுமையை பற்றி இஸ்லாம் கூறும்போது கீழ்க்கண்ட அழகிய அருள்மறை வசனமே நம் அனைவரது நினைவுக்கும் வருகிறது இதோ அந்த அற்புதமான இறைவனின் வார்த்தைகள் உங்கள் பார்வைக்கு!

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (குர்ஆன் 2:153)

நம்பிக்கை கொண்டோர் யார்?

muslim_prayer.jpg

உலகில் வாழும் மக்களில் நம்பிக்கை கொண்டோர் என்று பொதுவாக நாம் கருதினால் கற்களையும், சிலைகளையும், கப்ருகளையும் வணங்குவோரும் அடங்குவர் அவர்கள் அந்த கற்களையும் சிலைகளையும் கப்ருகளையும் நம்பித்தான் வாழ்கிறார்கள் அவர்களின் நம்பிக்கை அப்படித்தான் அமைந்துள்ளது திருந்தாத மனிதர்கள் மற்றும் இறைவனை உணராத மனிதர்களாக வாழ்ந்து மடிகின்றனர் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழிகாட்டுவானாக! ஆனால்!

குர்ஆன் கூறும் நம்பிக்கை கொண்டோர் என்று நாம் யாரையெல்லாம் கூற இயலும் என்று எடுத்துக் கொண்டால் அல்லாஹ்வையும் அவனது தூதர்கள் காட்டிய நேரிய வழிமுறைகளையும் கடைப்பிடித்து அதற்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து மறுமை வெற்றியே மகத்தான வெற்றி என்று கருதும் மூமின்களை நோக்கி அல்லாஹ் இவ்வாறு வர்ணிக்கிறான் எனவே அருள்மறை குர்ஆன் கூறும் நம்பிக்கை கொண்டோர் மூமின்களாக இறையச்சமுள்ள தக்வாதாரிகளாக இருக்கிறார்கள்!

 (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல்வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.) (குர்ஆன் 3:17)

பொறுமை என்றால் என்ன?

பொறுமையை விடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” (புகாரி 1469)

பொறுமை என்பது அல்லாஹ்வின் அருட்கொடைகளில் விசாலமான அருட்கொடையாகும் மேலும் பொறுமை தன்னடக்கம் மற்றும் அமைதியின் அடையாளமாகும்.

துன்பங்கள் நேரும் போது சகித்துக் கொண்டும் இறைவனை துதித்துக் கொண்டும் வந்த துன்பங்களை போக்க அதற்குரிய வழிவகைகளை கையாள்வரும் பொறுமையின் அடையாளமாகும். இந்த பொறுமை யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதை அறிவோமா?

அபு ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்!

அன்ஸார்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் யாசித்தார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுக்குக் கொடுத்தார்கள் பிறகும் நபியவர்களிடம்அவர்கள் அப்போதும்  அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் அவர்கள் கேட்க, நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது அனைத்தும் தீர்ந்து போன பின் என்னிடமுள்ள செல்வத்தை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவே மாட்டேன்!. ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்! யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும் பொறுமையை விடச் சிறந்த விசலாமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை என்றார்கள். (ஆதாரம் புகாரி 1469)

மேற்கண்ட நபிமொழிப்படி ஒருவன் தனது செல்வத்தை ஏழைகளுக்கு வாரி வழங்க அச்சப்பட்டு பதுக்கி வைக்காமலும், தன்மானத்தை விட்டுக் கொடுக்க தயங்கி யாசம் கேட்காமலும், சுயமரியாதை பேணி அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் தேவயற்றவனாகவும் வாழ்ந்து வருகிறானோ அவன் பொறுமையாளனாக இயலும்!

மேலும் இப்படிப்பட்ட மனிதர்கள் பொறுமையை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டால் அல்லாஹ் அவர்களுக்கு பொறுமையை அருட் கொடையாக்குகிறான் அப்படிப்பட்ட மனிதர்களுக்குரிய அந்த அருட்கொடையைப் போன்று எந்த அருட்கொடைகளும் இருப்பதில்லை! எனவே பொறுமை என்பது இறைவனின் அருட்கொடைகளிலேயே தலைசிறந்த அருட் கொடையாகும் இதை நாம் அனைவரும் பெற முயற்சி மேற்கொள்வோமாக! மேலும் பொறுமை என்பது கணவாய் என்று அருள்மறை குர்ஆன் போதிக்கிறது இதோ!

அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்). (குர்ஆன் 90:13, 14, 15, 16, 17)

பொறுமை மட்டும் போதுமா?

பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! (குர்ஆன் 2:153)

muslim-man-visiting-holy-places_21730-1842.jpg

அல்லாஹ் கூறும் பொறுமையை மட்டும் கடைபிடித்தால் அதன் மூலம் விடை கிடைக்காது மாறாக பொறுமையுடன் தொழுகையை கடைப்பிடிக்க வேண்டும் அப்போதுதான் அந்த பொறுமைக்கான இறுதிவடிவம் எட்டப்படுகிறது. எனவே நமக்கு ஏற்படும் சிரமங்களை பொறுமையாக சகித்துக் கொண்டு அச் சிரமங்களை களைய இறைவனிடம் மன்றாட வேண்டும் அதற்குரிய வழிமுறையே தொழுகையாகும் எனவே ஒருவன் இன்னல்களை சகித்து பொறுமையை கடைப்பிடித்து தொழுகையின் மூலம் அல்லாஹ்விடம் உதவி தேடினால் அவனது சிரமங்களை இறைவன் இலேசாக்கி வைப்பான் என்பது ஒரு முஸ்லிம் மற்றும் மூமின் எனப்படும் இறைநம்பிக்கையாளனின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்றாகும்.

அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் எவ்வாறு?

அல்லாஹ் என்றால் படைத்த ரப்புல் ஆலமீன் இறைவன் படைப்பினங்களின் தலைவன் என்று வர்ணிக்கத் தகுந்தவனாகிறான். இறைவனின் அனுமதியின்றி ஒரு அணுவும் அசைவதில்லை என்பதும் இறை கோட்பாடாகும் எனவே இறைவன் என்பவன் தன்னிகரில்லாத ஒரு சக்தி என்று பொருள் கொள்ள இயலும். அப்படிப்பட்ட இறைவனாகிய அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்!

11111.jpg

ஒருவன் கூர்மையான ஆணிகளை கொண்ட படுக்கையில் அமர்ந்துக் கொண்டு அந்த ஆணிகள் அவனை குத்திக் கோதி ரத்தத்தை வடித்துக் கொண்டிருக்கும் போது நான் பொறுமையாக இருக்கிறேன் இறைவன் என்னுடன் இருக்கிறான் என்று கருதினால் அவனைப் போன்று அடிமுட்டாள் எவனுமில்லை ஏனெனில் இதுபோன்ற உடலை வருத்தும் செயல்களுக்கு இறைவன் துணை போவதுமில்லை அது அவனுக்கு தேவையுமில்லை! மாறாக கீழ்க்கண்ட ஹதீஸ் முறைப்படி வாழ்வதே பொறுமையாளனுக்குரிய உவமையாகும்!

கப்பாப் இப்னு அல் அரத் (அலி) அறிவித்தார்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்க மாட்டீர்களா? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிரைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும், (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரின் தலையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும் ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விபகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) ஸன்ஆவிலிருந்து ஹள்ரமவ்த் வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதக்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும் (தோழர்களே!) நீங்கள்தாம் (கொடுமையை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள் என்றார்கள்! (ஆதாரம் நூல்:புகாரி 6943)

மேற்கண்ட நபிமொழியின் படி சிந்தித்தால் இறை நம்பிக்கையாளனது பொறுமையாக இறைவனாகிய அல்லாஹ் அமைந்துவிடுகிறான் என்பதேயாகும் அதாவது அவனது பொறுமை மாபெறும் சக்தியாக இருக்கிறது அவன் மேற்கொள்ளும் பொறுமையாகவே அல்லாஹ் மாறிவிடுவதால் இறைநம்பிக்கையின் உச்சம் உயர்ந்த நிலைக்கு தள்ளப்படுகிறது இதோ ஆதாரம்!

(நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 03:31)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்!

அல்லாஹ் கூறினான்! எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கெண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேத்து விடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்பு கோரினால் நிச்சயம் நான் அவனுக்கு பாதுகாப்பு அளிப்போன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று நான் செய்யும் எச்செயலிரும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்கு கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்! அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி) (ஆதாரம் நூல்: புகாரி 6502)

எனவே அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்பதற்கு விடையாக நம்முடைய பார்வையில் விழுவது என்னவென்றால் எந்த இறை நம்பிக்கையாளன் இறைவனுக்காக பொறுமையை மேற்கொள்கிறானோ அவனது பொறுமையாக இறைவனே அமைந்துவிடுகிறான் என்பதேயாகும் ஆகவேதான் கீழ்க்கண்ட நபிமொழி சரியாக தெளிவாக பிரகடனப்படுத்துகிறது.

பொறுமையை விடச் சிறந்த விசலாமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை என்றார்கள். (ஆதாரம் புகாரி 1469)

அல்ஹம்துலில்லாஹ்!

முடிவுரை!

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளரவிடாதீர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடாதீர்கள் இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்று குர்ஆனும் நபிமொழியும் தெள்ளத்தெளிவாக நமக்கு கற்றுத் தருகிறது எனவே நாம் அழகிய பொறுமையை மேலும் சகிப்புத்தன்மை கொண்ட பொறுமையை பெற்று இறைவனின் விசாலமான அருட்கொடையான பொறுமையை வேண்டியவர்களாக இறைவனை பிரார்த்தித்து முஸ்லிம்களில் மூமின்களாக முத்தகீன்களாக மாற முடிவெடுப்போமாக அல்லாஹ் நம் எண்ணங்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நற்கூலி வழங்குவானாக!

உங்களிடம் உள்ளவை முடிந்து விடும். அல்லாஹ்விடம் உள்ளவை நிலைத்திருக்கும். பொறுமையைக் கடைப்பிடித்தோருக்கு அவர்கள் செய்து வந்த நல்லவற்றின் காரணமாக அவர்களுக்குரிய கூலியை வழங்குவோம். (குர்ஆன் 16:96)

அல்ஹம்துலில்லாஹ்!

சுபுஹானல்லாஹ்

அல்லாஹு அக்பர்!

அன்புடன் 

சிராஜ்அப்துல்லாஹ்